பாஜகவில் பிரதமர் மோடிக்கு பிறகு யார்? ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பரபர பேச்சு
சென்னை: பாஜகவில் பிரதமர் மோடிக்கு அடுத்து யார்? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இதற்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி மற்றும் பாஜகதான் கலந்தோலாசித்து முடிவு செய்ய வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூறினார்.
மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியில் உள்ளது. பிரதமர் மோடிக்கு தற்போது 75 வயதுஆகிவிட்ட நிலையில், அவருக்கு அடுத்து பாஜகவில் யார் பிரதமராக முன்னிறுத்தப்படுவார் என்ற விவாதங்கள் அவ்வப்பொது எழுந்து வருகின்றன. இது தொடர்பாக பாஜகவோ, அதன் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸோ வெளிப்படையாக கருத்து கூறுவது இல்லை.

மோடிக்கு பிறகு யார்?
இந்த நிலையில்தான், சென்னையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவில் அதன் தலைவர் மோகன் பகவத் இது தொடர்பாக பேசியுள்ளார். மோகன் பகவத் இது தொடர்பாக பேசியதாவது:-
சில கேள்விகள் என் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது.. எனவே இந்த விவகாரத்தில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. என்னால் வாழ்த்துக்களை மட்டுமே பகிர முடியும். அதை தவிர வேறு எதையும் சொல்வதற்கு இல்லை. மோடிக்கு பிறகு யார்? என்றால், பாஜகவும் மோடியும் முடிவு செய்ய வேண்டிய விஷயம் அது.
மோடிக்கு 75 வயது ஆகிவிட்டது
பாஜகவில் 75 வயது ஆனால் தலைவர்களுக்கு அரசியலில் இருந்து ஓய்வு அளிக்கும் எழுதப்படாத விதி கடைபிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக தனது கருத்தை நேரடியாக தெரிவிக்க மோகன் பகவத் மறுத்து வரும் நிலையில், மீண்டும் அதே மாதிரியான நிலைப்பாட்டையே அவர் கடைபிடித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் பேசிய மோகன் பகவத், நானோ, அல்லது வேறு யாரோ, 75 வயதுக்கு பிறகு ஓய்வு பெற வேண்டும் என்று ஒருபோதும் பேசவில்லை எனவும், தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என்ற ரீதியிலும் பேசியிருந்தார். பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் மாதம் 75 வயதை எட்டினார். பாஜகவில் 75 வயதான தலைவர்களுக்கு அரசியலில் இருந்து ஓய்வு என்ற எழுதப்படாத விதி கடைபிடிக்கப்பட்டது.
மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர்
எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்கள் இதன் அடிப்படையில் ஓரங்கட்டப்பட்டனர். இந்த நிலையில்தான் மோடி 75 வயதை எட்டியதால் அவரும் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா என்ற வாதம் எழுத்தது. எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை வைத்து கேள்விகள் எழுப்பின. இந்த நிலையில்தான், 75 வயதில் அரசியல் ஓய்வு என்ற விதியும் பாஜகவில் இல்லை என்று கூறி விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications