விளவங்கோடு இடைத்தேர்தல்.. விட்டதை பிடிக்குமா காங்கிரஸ்? யாருக்கு வெற்றி வாய்ப்பு.. பரபர சர்வே
சென்னை: காங்கிரஸ் கோட்டையாக விளங்கிய விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விளவங்கோடு இடைத்தேர்தலில், யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து தந்தி டிவி கருத்துக்கணிப்பினை வெளியிட்டுள்ளது.
கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விளவங்கொடு தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அதோடு, தனது எம்.எல்.ஏ பதவியில் இருந்தும் விலகினார்.

விளவங்கோடு தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது. 2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக விஜயதாரணி இந்த தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த நிலையில், திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்ததால், விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பர்ட் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பாஜக சார்பில் விஎஸ் நந்தினி போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ராணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நான்கு முனை போட்டி நிலவும் விள்வங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு உள்ளது என்பது தொடர்பாக கருத்துக்கணிப்புகளை தந்தி டிவி வெளியிட்டுள்ளது.
அதன்படி, விளவங்கோடு தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 44 முதல் 50 சதவீத வாக்குகளை பெற வாய்ப்பு உள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.
கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம்:
காங்கிரஸ்: 44% - 50%
பாஜக: 30% - 36%
அதிமுக: 12% - 18%
நாம் தமிழர்: 03% - 06%
மற்றவை: 01% - 03%.












Click it and Unblock the Notifications