அதிமுகவில் இப்படி ஆளாளுக்கு பேசினா எப்படி? இதுக்குத்தான் ஒற்றை தலைமை தேவை!
Recommended Video
சென்னை: தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் என்கிற நிலையில்தான் இருக்கிறது அதிமுக. எத்தனை கட்டுப்பாடுகள் விதித்தாலும் ஆளுக்கு ஒரு திசையில் பேசிக் கொண்டிருப்பதால்தான் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என்கிற குரல் வலுத்து வருகிறது.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருந்தாலும் ஈகோ யுத்தம் வெடித்துள்ளது. ஓபிஎஸ், ஈபிஎஸ், வைத்திலிங்கம், சிவி சண்முகம், ராஜன்செல்லப்பா, உதயகுமார் என ஒவ்வொருவரும் ஒரு கோஷ்டியாக செயல்பட்டு வருகின்றனர்.
இதன் உச்சமாகத்தான் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என்கிற கோரிக்கையை ராஜன்செல்லப்பாவும் குன்னம் ராமச்சந்திரனும் முன்வைத்தனர். இதையடுத்து அதிமுகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

சென்னை ஆலோசனை கூட்டம்
இந்த ஆலோசனைக் கூட்டத்திலும் கூட அனைத்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை பேச அனுமதிக்கவில்லை என்கிற குமுறல் வெளிப்பட்டிருக்கிறது. இந்த குமுறலை யாரும் வெளியே கொட்டிவிடக் கூடாது என்பதற்காக கூட்டம் முடிந்த கையோடு ஊடகங்களுக்கு யாரும் கருத்து தெரிவிக்க கூடாது என கறார் அறிக்கையும் அதிமுக தலைமை வெளியிட்டது.

பேட்டி தந்த ராஜேந்திர பாலாஜி
ஆனால் ராஜேந்திர பாலாஜி, வைத்திலிங்கம், ராஜன்செல்லப்பா என பலரும் இந்த கட்டுப்பாட்டை பொருட்படுத்தாமல் பேட்டி அளித்தனர். தற்போதைய தலைமையே நீடிக்கட்டும் என கூட்டத்தில் முடிவு எடுத்ததாகவும் இதை ராஜன் செல்லப்பாவும் ஒப்புக் கொண்டார் என்றும் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

குமுறிய ராஜன் செல்லப்பா
ராஜன் செல்லப்பாவோ, ஒற்றைத் தலைமை குறித்து பேச அனுமதிக்கவில்லை. இருப்பினும் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கிறேன். அதாவது பந்தை வீசி இருக்கிறேன்.. நடப்பதை இனி பார்க்கனும் எனக் கூறுகிறார்.

அதிருப்தியில் மதுசூதனன்
இன்னொரு பக்கம் மதுசூதனனோ, தேர்தல் தோல்விக்கான காரணத்தை அமைச்சர்களிடத்தில் மட்டும் கேட்க கூடாது; தொண்டர்களிடமும் கேட்க வேண்டும் என தனிக்குரல் எழுப்பியிருக்கிறார். இப்படி திசைக்கு ஒருவர் பேசிக் கொண்டிருப்பதால் அதிமுக கலகலத்துக் கொண்டிருக்கிறது.
அத்துடன் இப்படியான போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கவாவது ‘ஒற்றைத் தலைமை' அவசியம் என்கிற கருத்தும் வலியுறுத்தப்படுகிறது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications