6 வேட்பாளர்கள் லிஸ்ட் அவசரமாக வெளியானது ஏன்?.. மேட்டரே வேறயாம்.. முணுமுணுக்கும் தகவல்கள்!
சென்னை: தொகுதி பங்கீடு உடன்பாடே இன்னும் முடியாத நிலையில் அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் மேட்டரே வேறயாம்.
தேர்தல் என வந்துவிட்டாலே தொகுதி பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு, பேச்சுவார்த்தை, இழுபறி, தாமதம், தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் பட்டியல் என எல்லாம் களைகட்டும். அந்த வகையில் அதிமுகவிலும் சரி திமுகவிலும் சரி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்பட்டுதான் இருக்கிறது.
திமுகவில் காங்கிரஸ், அதிமுகவில் தேமுதிக என இன்னும் பைனல் ஆகாத நிலை ஏற்பட்டுள்ளது. இறுதி செய்யப்படாத இரு கட்சிகளும் தொகுதியை அதிகம் கேட்டு வருகின்றன. ஆனால் கூட்டணி தலைமையோ அவ்வளவு சீட்டெல்லாம் கொடுக்க முடியாது என்கிறார்கள்.

ஆலோசனை
இதனால்தான் இரு தரப்பினரிடையே ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டது. நேற்று மாலை பாமகவுடன் தொகுதிகளை இறுதி செய்யும் ஆலோசனை நடத்தவிருந்த நிலையில் அதிமுக லிஸ்டை வெளியிட்டது.

வேகம்
இது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக அதிமுக 190 இடங்களில் போட்டியிடும் என தெரிகிறது. அவ்வாறிருக்கையில் வெறும் 6 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவித்தது ஏன்? என்ற கேள்வி எழுந்தது. மேலும் இழுபறியில் உள்ள தேமுதிகவுக்கு தங்களது வேகத்தை உணர்த்துவதற்காகவே இது போன்று அதிமுக செய்ததாக சொல்லப்படுகிறது.

25 டூ 23
மேலும் நீங்கள் 41லிருந்து 25 க்கு வாங்க, 25 லிருந்து 23க்கு வாங்க.. ஆனால் நாங்க தருவது 15 முதல் 18 வரைதான். நாங்கள் பாட்டுக்கு எங்க வேலையை பார்க்கிறோம் என தேமுதிகவுக்கு அதிமுக சொல்லாமல் சொல்லியதாகவே இந்த மூவ் பார்க்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து சில அரசியல் பார்வையாளர்கள் வேறு மாதிரியான கருத்துகளை தெரிவிக்கிறார்கள்.

ஜெ. இறந்த தேதி
அதாவது நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை, சுபமுகூர்த்த தினம், ஜெயலலிதா இறந்த தேதியான 5 (05.12.2016) இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ராகு காலம் 10.30 - 12 கழித்து அதிமுக 6 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. மற்றபடி கூட்டணி கட்சிகளுக்கு எந்தவித நெருக்குதலையும் தருவதற்காக இப்படி செய்யவில்லை என்கிறார்கள்.

அதிமுக தொகுதிகள்
அவ்வாறு கூட்டணி கட்சிகள் அதிமுக வெற்றி பெறும் தொகுதிகளை கேட்டு விடக் கூடாது என அதிமுக நினைத்திருந்தால் 190 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கும். ஆனால் அதிமுக அது போல் செய்யவில்லை. எனவே இந்த 6 வேட்பாளர்கள் வெளியிட்டது நல்ல காரியத்தை நல்ல நாளில் சுபமுகூர்த்த தினத்தில் செய்ய வேண்டும் என்பதற்காகவே என்கிறார்கள்.

இது உண்மையா
ஆனால் இப்படிக் கூறப்பட்டாலும் கூட முதல் கட்டமாக ஒரு வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது என்றால் அடுத்தடுத்து லிஸ்ட் ரெடியா இருக்கு.. சீக்கிரமா வந்து வேலையை சட்டுப்புட்டுன்னு முடிங்க, இழுத்தடிக்காதீங்க என்று கூட்டணிக் கட்சிகளுக்கு மறைமுகமாக அதிமுக மெசேஜ் அனுப்பியதாகவே இது பார்க்கப்படுகிறது. இதை உண்மையில் அதிமுக தொண்டர்களும் கூட வரவேற்கவே செய்கின்றனர். முழுப் பட்டியலையும் கூட அதிமுக வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.
-
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே? -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி












Click it and Unblock the Notifications