நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் பறிமுதல் செய்த அலெக்சாண்ட்ரியன் கிளிகளை வளர்க்க தடை ஏன்? ஸ்வாரஸ்ய தகவல்
அலெக்சாண்ட்ரியன் கிளிகளை வீட்டில் வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்டது ஏன்
சென்னை: அலெக்சாண்ட்ரியன் கிளிகளை வீடுகளில் வளர்க்க இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது ஏன் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அலெக்சாண்ட்ரியன் கிளிகள் வளர்க்கப்பட்டு வந்த நிலையில் அந்த கிளிகளை வனத்துறையினர் அனுமதியின்றி வளர்த்ததாக அந்த கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டு ரோபோ சங்கருக்கு ரூ 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் அலெக்சாண்ட்ரியன் கிளிகளை ஏன் வீடுகளில் வளர்க்கக்கூடாது, அவை வீடுகளில் வளர்ப்பது எப்போதிலிருந்து தடை செய்யப்பட்டது உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம்.

20 கிளிகள் இனம்
கடந்த 500 ஆண்டுகளில் 20 கிளிகள் இனத்தை உலகம் முழுவதும் இழந்துவிட்டதாக சொல்கிறார்கள். இன்றைய தினம் அனைத்து கிளிகள் இனங்களிலும் 27 சதவீத கிளி இனங்கள் அழியும் தருவாயில் உள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது, இயற்கையான வாழ்விட இழப்பு, சீரழிவு, வேட்டையாடப்படுதல், செல்லப்பிராணியாக வளர்ப்பதற்கு வர்த்தகமயம் உள்ளிட்டவைகள் இந்த கிளி இனங்களின் இழப்புக்கு பெரும் பங்காற்றியுள்ளன.

1700 பறவைகள்
டெல்லியில் கடந்த ஆண்டு 1700 பறவைகள், பறவைகள் விற்பனை சந்தையிலிருந்து மீட்கப்பட்டன. இவற்றில் 500 பறவை குஞ்சுகளும் இருந்தன. இவற்றை காடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டு தங்கள் பிடியில் வைத்திருந்தது தெரியவந்ததது. இந்த அலெக்சாண்ட்ரியன் கிளிகள் ஒருவிதமான சப்தத்தை எழுப்பும், இவை அழகாக பாடும். இதன் இருப்பிடம் காடுகள்தான். பிறகு உங்கள் இருப்பிடம் அருகேவும் பார்க்க முடியும். இவை கூட்டம் கூட்டமாகவே வாழும் குணம் கொண்டவை.

ஆண் எது பெண் எது
இவற்றில் ஆண் எது, பெண் எது என்பதை அதன் உடல் அமைப்பை வைத்து கண்டறியலாம். இனப்பெருக்க காலங்களில் ஆணும் பெண்ணும் மர பொந்துகளில் வசிக்கும். பெண் பறவை முட்டையிட்டு அடைகாக்கும் போது பெண் பறவைக்கு தேவையான உணவை ஆண் பறவை கொண்டு வரும். சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை என்பதை இந்த பறவைகளுக்கு பொருந்தும், நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே திருப்பி சொல்லும்.

இயற்கையான வாழ்விடம்
இயற்கையான வாழ்விடத்தை விட்டு இந்த கிளிகள் வேட்டையாடப்படுகின்றன. இதனால் அதன் வாழ்நாள் கணிசமாக குறைகிறது. கூட்டம் கூட்டமாக வாழும் குணம் கொண்ட இந்த கிளிகளை தனித்து வாழும் நிலைக்கு தள்ளுகிறோம். அவை மிகவும் கொடூரமான நிலைகளில் வைக்கப்படுகின்றன. எனவேதான் இவற்றை வீட்டில் வளர்ப்பது சட்டபடி குற்றமாகும். சட்டவிரோதமாக விற்பனை செய்யும் கும்பலுக்கு அதிக அளவில் பணம் சம்பாதித்து கொடுக்கிறது. இவை எளிதாக நோயை பரப்பும்.

வெளிநாடுகள்
இவற்றை வெளிநாடுகளிலிருந்து கடத்தி வந்து விற்பனை செய்வதால் சர்வதேச பாதுகாப்புக்கு பெரும் பாதிப்பை கொடுக்கிறது. இதனால் இந்தியாவில் இந்த கிளிகளை கடத்துவதை தடுக்க கிளிகள் விற்பனை செய்வது 1990 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. இவை வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 இன் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த பறவைகளை பிடித்து வைத்து விற்பனை செய்வதும், வீடுகளில் வைத்திருப்பதும் சட்டத்திற்கு புறம்பானது. இந்த பறவைகள் மிகவும் புத்திசாலித்தனம் கொண்டவை, இவை நன்றாக பேசும். பொதுவாக இதன் வாழ்நாள் 25 முதல் 30 ஆண்டுகளாகும். ஆனால் இவற்றை தனியே அடைத்து வைப்பதால் இதன் ஆயுட்காலம் குறைவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த கிளிகள் பூச்சிகள், கொட்டைகள் , பழங்களை உட்கொள்ளும். இந்த கிளிகளுக்கு தண்ணீர் என்றால் மிகவும் பிடிக்குமாம். ஆனால் விருப்பப்பட்டால் மட்டுமே குளிக்குமாம். இந்த கிளிகள் பிறந்த 3 மாதங்களிலோ அல்லது 12 மாதங்களிலோ பேச தொடங்கும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications