"ஆபரேஷன்".. சென்னையில் ஏர்போர்ட்டிலிருந்து அடுத்தடுத்து அப்புறப்படுத்தப்பட்ட விமானங்கள்.. என்னாச்சு?
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்த பல்வேறு ராட்சச விமானங்கள் திடீரென அப்புறப்படுத்தப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை விமான நிலையம் மீண்டும் பிசியாக தொடங்கி உள்ளது. கொரோனாவிற்கு பின்பாக சுணக்கம் கண்டு இருந்த சென்னை விமான நிலையம் மீண்டும் பிஸியாக இயங்க தொடங்கி உள்ளது.
சென்னைக்கு வர கூடிய விமானங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. சென்னை விமான நிலையம் அதிக நெருக்கடி கொண்ட விமான நிலையமாக மாறிவிட்டது. இதன் காரணமாக இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று 15 வருடமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து சென்னையில் இரண்டாவது விமானம் நிலையம் அமைக்க பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

புதிய ஏர்போர்ட்
இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. ஆனால் அங்கு நிலம் கையகப்படுத்த அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் தற்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் பல அகற்றப்பட்டு உள்ளன. சென்னை விமான நிலையின் தென் பகுதியில் பல்வேறு ராட்சச விமானங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இங்கே பல காலமாக இந்த விமானங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இயங்கவில்லை
இந்த விமானங்கள் எங்கும் இயக்கப்படவில்லை. இதனால் இவை பாழடைந்து காணப்பட்டது. மழை, வெயிலில் இருந்ததால் விமானத்தின் நிறம் மங்கி, பாசி படிந்து, மிகவும் மோசமான நிலையில் இந்த விமானங்கள் காணப்பட்டன. ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 12 விமானங்கள் இப்படி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானங்கள் இப்படி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விமானங்கள் நிறுத்தப்பட்டு சில வருடங்கள்ஆகிவிட்டன.

ஆபரேஷன்
கிங் பிஷர், ஜெட் ஏர்வேஸ் போன்ற நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள் ஆகும் இது. இந்த விமானங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று சென்னை விமான நிலையம் சார்பாக அந்த நிறுவனங்களுக்கு சில நாட்களுக்கு முன்பே உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர்கள் விமானத்தை அப்புறப்படுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்த நிலையில் அதிகாரிகளே அந்த விமானங்களை அப்புறப்படுத்தி உள்ளனர். இதற்கான ஆபரேஷனை அவர்களே கையில் எடுத்துள்ளனர்.

புதிய விமானம்
இதன் மூலம் அங்கு புதிய விமானங்களை நிறுத்த இடம் கிடைக்கும். கூடுதல் விமானங்களை அங்கே நிறுத்த முடியும். அதோடு இந்த விமானங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதற்கான கட்டணம் அந்த நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும். அங்கே இவ்வளவு நாட்கள் விமானத்தை பார்க் செய்து வைத்து இருந்ததற்கான பார்க்கிங் கட்டணமும் விமான நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் விமான நிலையத்தில் அதிக இடவசதி ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications