திடீர்ன்னு மோதல்.. மதுரைக்கும் - கோவைக்கும் இடையில் வந்த சண்டை.. என்னவாம்? இப்படி ஒரு காரணமா?
சென்னை: தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட வளர்ந்த மாநிலம். ஜிடிபி அடிப்படையில் பார்த்தால் இரண்டாவது மாநிலம். அதே சமயம் சமூக காரணிகளான வறுமை ஒழிப்பு, கல்வி இவற்றை சேர்த்து, அதோடு ஜிடிபியையும் வைத்து பார்த்தால் தமிழ்நாடுதான் நம்பர் 1. இப்படிப்பட்ட தமிழ்நாட்டில் முதலீட்டிற்கு என்று மோதல் வர தொடங்கி உள்ளது.
அதாவது ஒரு முதலீடு குறிப்பிட்ட ஒரு மாவட்டத்திற்கு சென்றால்.. எங்கள் மாவட்டத்திற்கு ஏன் அந்த முதலீடு வரவில்லை என்ற கேள்விகள் எழுகின்றன. உதாரணமாக தூத்துக்குடிக்கு விண்பாஸ்ட் முதலீடு சென்ற போது.. ஏன் திருச்சி, கோவைக்கு வரவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

அதேபோல் திருச்சிக்கு முதலீடுகள் சென்றால் கோவை, மதுரை மக்கள் கோபித்துக்கொள்வது உண்டு. இந்த சண்டை சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது எல்லைமீறி செல்வது உண்டு. அந்த வகையில்தான் தற்போது கோவைக்கான அறிவிப்பு ஒன்று மதுரைக்காரர்களை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
கோவை ஸ்டேட்டியும்: கோயம்புத்தூரில் அமைய உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) தயார் செய்ய மாநில அரசு டெண்டர் விடுத்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தின் மேம்பாட்டிற்கான டிபிஆர் தயாரிப்பதற்கும் வடிவமைப்பு ஆலோசகரை ஈடுபடுத்துவதற்கும் டெண்டர் முன்வைக்கப்பட்டுள்ளதாக உயர்நிலை விளையாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலேயே அமைய போகும் பெரிய கிரிக்கெட் மைதானமாக இது இருக்கும். இதன் மூலம் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இது இருக்கும். ஏலதாரர்கள் ஒரு மாதத்திற்குள் ஏலத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சேலத்தையும் கொச்சியையும் இணைக்கும் NH 544 இல் கோயம்புத்தூர் நகரத்திலிருந்து 16 கிமீ தொலைவில் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்காக ஒதுக்கப்பட்ட இடம் அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாநில சிறைத்துறையிடம் 200 ஏக்கர் நிலம் உள்ளது, அதில் 198 ஏக்கர் டிபிஆர் தயாரிப்பு முடிந்ததும் மைதானத்திற்காக கையகப்படுத்தப்படும்.
விமர்சனம்: இதை மதுரையை சேர்ந்த நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர். கோவை மக்கள்தொகையில் 60% மலையாளிகள் & கன்னடர்கள் வாழ்கிறார்கள்.. உண்மையிலேயே அந்த அண்டை மாநில மக்கள் TN அரசாங்கத்திடம் இருந்து இத்தகைய வசதியைப் பெற்றதற்கு உண்மையிலேயே பாக்கியவான்கள். நம் தமிழ் மக்கள் வேரூன்றிய தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்கள் இப்படிப்பட்ட மைதானங்களுக்கு தகுதியானவை அல்ல. இங்கே இது போன்ற மைதானங்களை கட்ட மாட்டார்கள் என்று சீறி உள்ளனர்.
இதற்கு தற்போது கோவை நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர், கோயம்புத்தூர் ஒரு காஸ்மோபாலிட்டன் நகரம். கோவை பன்முகத்தன்மை கொண்டது. அதன் காரணமாகவே அது வெற்றியும் பெற்றது. தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், மொழி வேறுபாடின்றி, அனைவரையும் அரவணைத்து செல்லும் நகரம் இது. அனைவரும் இந்த நகரத்தை நேசிக்கிறார்கள். மற்றவர்களை அவர்களின் பின்னணி கருதி ஒதுக்கி வைப்பது என்பது.. முன்னேற்றத்தை தடுக்கும். எல்லோரையும் அரவணைத்து மற்றும் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துவோம், என்று பதிலடி கொடுத்துள்ளனர்.
கோவை மைதானம் பின்னணி: கோவையில் தமிழ்நாடு விளையாட்டுத் துறையானது நாட்டிலேயே மிகப்பெரிய பார்வையாளர்கள் அமரும் திறன் கொண்ட இந்த அரங்கத்தை நிர்மாணிக்க உள்ளது. அதாவது குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தை விட பெரிய மைதானமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 லட்சம் பேர் ஒரே நேரத்தில் அமரும் வகையில் இதை கட்ட உள்ளனர்.
உறுப்பினர்கள் இருக்க நவீன ஹோட்டல் அறைகள், விஐபி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அறைகள்,, அதிநவீன வீரர்களின் ஓய்வறை, ஊடகம் மற்றும் ஒளிபரப்பு ஆகியவற்றுக்கான ஐந்து நட்சத்திர வசதிகளைக் கொண்டிருக்கும் அறைகள்., உணவு விடுதிகள் மற்றும் பொதுமக்களுக்கான உணவகங்கள், காட்சியகங்கள் மற்றும் கிரிக்கெட் அருங்காட்சியகம். உட்புற பயிற்சி அரங்கம், சிறப்பு உள்ளரங்க பீல்டிங் மண்டலம், பிட்ச் க்யூரேஷன் பயிற்சி, விரிவுரை அரங்குகள் மற்றும் உயர் செயல்திறன் மையம் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டு உள்ளது.
வீரர்களின் வசதிக்காக தனியாக உணவகம், ஸ்பா, தங்குமிடங்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் என்று
அசத்தலான திட்டங்களை வழங்கும்படி யோசனைகளை தமிழ்நாடு அரசு வரவேற்று உள்ளது. சமீபத்தில் கோவை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றொரு முக்கியமான பணியையும் மேற்கொண்டுள்ளார். கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்வதற்கான முதற்கட்டப் பணிகளையும் தொடங்கினார்.

இங்கே அமைய உள்ள மைதானத்தில் கிளப்ஹவுஸ், ஸ்போர்ட்ஸ் பார் மற்றும் உணவகம் ஆகியவையும் கட்டுமான திட்டத்தில் உள்ளன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் தொகுதியில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தையும் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தையும் நேரடி கேஸ் ஸ்டடிகளாக சிபாரிசு செய்து அதைவிட பிரம்மாண்டமாக, லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியம் போல கலைநயத்தோடு கட்ட முடிவு செய்துள்ளனர்.
வீரர்கள், நடுவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை கூட்டங்களுக்கான இடங்களை உருவாக்குவது உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றன. உயர் தரமான இருக்கை வசதி தொடங்கி பல நவீன வசதிகள் இங்கே வர உள்ளன. தொழில்துறையில் சிறந்து விளங்கும் கோவை மாநகரம், விளையாட்டுத்துறையிலும் உலகமே உற்று நோக்குகிற வகையில் மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications