Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தியேட்டர் ஸ்நாக்ஸ் விலை: தாஜ் ஹோட்டலில் இட்லி 120 ரூபாய்.. கேட்க முடியுமா? திருப்பூர் சுப்பிரமணியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தியேட்டரில் தின்பண்டங்கள் விலை அதிகமாக இருப்பதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூறிய திருப்பூர் சுப்பிரமணியன், "தாஜ் ஹோட்டலில் பிளேட் இட்லி 120 ரூபாய்.. ஆனால் சாதாரண ஓட்டலில் 10 ரூபாய்.. ஏன் நீங்க 120 ரூபாய்க்கு விற்பனை செய்யுறீங்க என்று அங்க போய் கேட்க முடியுமா? என கூறினார். மேலும் இப்போது எல்லா தியேட்டர்களிலும் 190 ரூபாய்க்கு அதிகமாக டிக்கெட் விற்கவில்லை என்று கூறினார். இது தொடர்பாக திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது:-

தியேட்டர்களில் முதல் நாளில் டிக்கெட் அதிக கட்டணத்துக்கு விற்கப்படுவதாக கேட்கப்பட்ட கேள்விக்கு திருப்பூர் சுப்பிரமணியம் பதில் அளித்து கூறியதாவது:- எந்த ஊரில் அதிக விலைக்கு விற்கிறார்கள். எந்த ஊரிலும் 190 ரூபாய்க்கு அதிகமாக டிக்கெட் விற்றது கிடையாது. நான் சேலஞ்சாகவே சொல்கிறேன்.

thirupur subramaniam theater cinema

பெரிய நடிகர்களின் படம் வந்திருந்தால், ஸ்பெஷல் ஷோவிற்காக அதிகம் வைத்து விற்று இருக்கலாம். தியேட்டருக்கு வெளியில் விற்று இருக்கலாம். முன்னாடி மாதிரி கிடையாது. ஆன்லைனில் தான் இப்போ டிக்கெட் எடுக்குறாங்க.. எந்த தியேட்டரிலாவது 190 ரூபாய்க்கு அதிகமாக போட்டு இருக்காங்கலான்னு பாருங்க.. அப்படி விதிக்கப்பட்டிருந்தால் என்னிடம் சொல்லுங்க..

வாட்டர் மற்றும் தின்பண்டங்கள் விலை அதிகமாக இருப்பது பற்றி கூறுகையில், "இதற்கு பழைய உதாரணத்திற்கே போக வேண்டியதுதான்.. தாஜ் ஓட்டலுக்கு இட்லி வாங்க போனீங்க என்றால், அங்கு இட்லி 120 ரூபாய் ஒரு பிளேட் இட்லி. ஆனால் சாதாரண கடைக்கு போனீங்க என்றால் அங்கு 10 ரூபாய் தான்.. அப்போ, நீங்க தாஜ் ஓட்டலில் போய், ஒரே மாவு தான் ஊத்துறீங்க.. ஏன் 120 ரூபாய்க்கு கொடுக்குறீங்க என்று கேட்க முடியுமா..

சென்னையில் ஒரு ஓட்டலில் சாதா தோசை 900 ரூபாய்க்கு விற்குறாங்க.. இது உங்களுக்கு தெரியுமா? 900 ரூபாய் என்றாலும் சாப்பிடத்தான் செய்றாங்க.. உணவு பண்டங்களில் யாரு விலையை கட்டுப்படுத்த முடியும். அவங்க அவங்களுடைய நிர்வாக செலவுகள் அதையெல்லாம் வைத்து தான் விலையை நிர்ணயம் செய்ய முடியும். முன்னாடி சாதாரண உணவும் உண்டு, ஸ்பெஷல் உணவும் உண்டு" என்றார்.

புதிதாக வரும் திரைப்படங்களை விமர்சனம் செய்வது குறித்து பேசுகையில், "ஊடகங்கள் எல்லாம் வருவதற்கு முன்பு மக்கள் படம் பார்த்துவிட்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் சொல்வார்கள். படம் நல்லாருக்கு என்றால் நல்லா இருக்கு. இது பேமிலி செண்டிமெண்ட்.. இது ஆக்சன் படம் என அவங்க சொல்வாங்க. 10 பேரிடம் படம் எப்படி இருக்குன்னு கேட்டால், 10 பேரும் ஒவ்வொரு மாதிரிதான் சொல்வாங்க.." என்றார்.

விமர்சனங்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி கருத்துரிமை அடிப்படையில் வருகிறது... கருத்துரிமையை தடுக்க முடியும் என்று நீங்க நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த திருபூர் சுப்பிரமணியன், "இதே கருத்துரிமையை நீங்க எல்லா இடத்துலேயேயும் காட்டுகிறீர்களா.. ஒரு ஜவுளிக்கடை முன்போ, ஓட்டல் முன்போ.. இந்த ஓட்டலில் சாப்பிடாதீங்க என்று உங்களால் சொல்ல முடியுமா..

ஊடகம் நடத்துறீங்க.. நிகழ்ச்சிகளும் நடத்துறீங்க.. நீங்க நடத்துற நிகழ்ச்சி பாக்காதீங்க.. இது ரொம்ப மட்டமாக இருக்கு என்று உங்களுடைய வாசலில் நின்று எங்களை சொல்ல விடுவீங்களா?.. ஒரு ஊடகத்தை பற்றி இன்னொரு ஊடகம் விமர்சனம் பண்றாங்களா?.. எங்க தியேட்டரில் உங்க ஊடகத்தின் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து நாங்க போட்டால் ஒத்துக்கொள்வீங்களா? நாங்க மட்டும் ஒத்துப்போகனும்.. நீங்க ஒத்துப்போக மாட்டீங்க.. அப்டித்தானே.." இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+