வட்ட வடிவில் கிணறு தோண்டுவது ஏன் தெரியுமா? பின்னணி அறிவியல் காரணம்.. இவ்வளவு நாள் தெரியாம போச்சே!
சென்னை: மனிதர்களின் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை தரும் நீர் ஆதாரங்களில் முக்கியமான ஒன்று கிணறு. இந்த கிணறுகள் சதுரம், செவ்வகம், வட்ட வடிவில் அமைக்கப்பட்டு இருப்பதை நாம் பார்த்து இருப்போம். இதில் சதுரம், செவ்வக வடிவத்தை விட வட்ட வடிவில் கிணறு அமைப்பது தான் பாதுகாப்பானது. ஏன் தெரியுமா? வட்டவடிவில் கிணறு அமைப்பதால் கிடைக்கும் பலன்? மற்றும் அதன் பின்னணியில் உள்ள அறிவியல் காரணங்கள் பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
குளம், குட்டை, ஊரணி, போர்வெல் உள்ளிட்டவற்றை போல் நீர் ஆதாரத்துக்கு முக்கியமாக இருப்பது கிணறு. குடிநீர் மட்டுமின்றி விவசாயத்துக்கு கிணற்றை ஏராளமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் கிணறு மிகவும் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.

நம் ஊர்களில் கிணற்றை எடுத்து கொண்டால் சதுரம், செவ்வகம் மற்றும் வட்ட வடிவில் தோண்டப்பட்டு இருக்கும். இதில் சதுரம், செவ்வக வடிவ கிணற்றை விட வட்டவடிவில் கிணறு தோண்டுவது தான் பாதுகாப்பானது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?..
என்னங்க, எந்த வடிவில் தோன்றினாலும் பூமிக்கடியில் ஊற்று இருந்தால் தானே தண்ணீர் இருக்கும். இதனால் கிணறு எப்படி இருந்தால் என்ன? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் ஒன்றை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். கிணறு என்பது நீண்டகாலமாக தண்ணீர் தரும் நீர் ஆதாரம். இதனால் அந்த கிணறு மண் சரிவு இன்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் அல்லவா?. அப்படியென்றால் வட்டவடிவ கிணறு தான் பெஸ்ட் என்கிறது அறிவியல்.
அது என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாகவே தரைக்கு உள்ளே ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அழுத்தம் கூடும். இதனால் தரைக்கு உள்ளே இருக்கும் பாறைகள் கனமாக இருக்கும். இதனால் அழுத்தம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். இது கிணற்றின் சுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
வட்ட வடிவில் கிணறு தோண்டும்போது தண்ணீர் அனைத்து இடங்களிலும் சமமாக இருக்கும். கிணற்றுக்குள்ளே அழுத்தமும் சமமாக பகிர்ந்து அளிக்கப்படும். கிணற்றுக்குள் ஒரு இடத்தில் கூடுதல் அழுத்தம். மற்றொரு இடத்தில் குறைந்த அழுத்தம் என்ற பிரச்சனை இருக்காது. அழுத்தம் சமநிலை படுத்தப்பட்டு பகிர்ந்தளிக்கப்படும். இதனால் அழுத்தம் காரணமாக சுற்றுச்சுவர்களுக்கு பாதிப்பு வராது. இதனால் கிணற்றின் ஆயுட்காலம் அதிகரிக்கும்.
உதாரணமாக நம் ஊர்களில் உள்ள பல கிணறுகளில் சுற்றுசுவர் சரிந்து விழுந்து இருப்பதை நாம் பார்த்து இருப்போம். அந்த கிணறுகளின் வடிவத்தை கவனித்து பாருங்கள். பெரும்பாலான கிணறுகள் சதுரம் அல்லது செவ்வக வடிவில் தோண்டப்பட்டவையாக இருக்கும். வட்ட வடிவில் தோண்டப்பட்ட கிணறுகளில் பாதிப்பு என்பது அவ்வளவு எளிதில் வராது. இந்த அறிவியல் காரணத்தை அறிந்து தான் நம் முன்னோர்கள் வீடுகளில் தண்ணீருக்கு பயன்படுத்தும் கிணறுகளை வட்ட வடிவமாக தோண்டி உள்ளனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications