Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லிப்ஸ்டிக் காரணம் இல்லையாம்.. மாநகராட்சி பெண் தபேதார் இடமாற்றம் ஏன்? பின்னணி தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் தபேதாராக பணியாற்றிய மாதவி திடீரென்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது பணியிடமாற்றத்துக்கு லிப்ஸ்ட்டிக் பூசி வந்தது தான் காரணம் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இதனை சென்னை மாநகராட்சி மறுத்துள்ள நிலையில் மாதவியின் பணியிட மாற்றத்தின் பின்னணியில் மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் இடையேயான பிரச்சனை தான் காரணம் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதாராக நியமிக்கப்பட்டவர் மாதவி. இவருக்கு 50 வயது ஆகிறது. இவர் மேயர் பிரியாவுக்கு தபேதாராக பணியாற்றி வந்தார். சென்னை மாநகராட்சி கூட்டம் உள்பட முக்கிய நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா பங்கேற்கும்போது அவருடன் மாதவி செல்வார்.

chennai corporation mayor priya

இந்நிலையில் தான் தற்போது மாதவி பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மேயர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த மாதவி மணலி மண்டலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாற்றம் தான் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அதாவது மாதவிக்கு லிப்ஸ்டிக் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. இவர் அதிகளவில் லிப்ஸ்டிக் பயன்படுத்தியதாகவும், அதனை மேயர் பிரியாவின் உதவியாளர் சிவசங்கர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் மாதவி தனது லிப்ஸ்டிக் பயன்பாட்டை நிறுத்தாததால் தான் அவர் பணி இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இத சர்ச்சையையும் கிளப்பியது.

இதையடுத்து இன்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் மாதவி லிப்ஸ்டிக் பயன்படுத்தியதால் தான் இடமாற்றம் செய்யப்பட்டார் என்பதை மேயர் பிரியாவின் அலுவலகம் தரப்பில் முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது. மேயர் பிரியா அலுவலகம் சார்பில், மாதவி பணிஇடமாற்றத்துக்கு லிப்ஸ்டிக் பயன்படுத்தியது தான் காரணம் என கூறுவது தவறானது.

அவர் உரிய நேரத்திற்கு பணிக்கு வராதது, சீனியர்களின் உத்தரவை மதிக்காதது உள்ளிட்ட காரணங்களால் மாதவிக்கு மெமோ அனுப்பப்பட்டதாகவும் அதற்கு அவர் உரிய பதில் அளிக்கவில்லை. பணியை சரிவர செய்யாத காரணத்தால் தான் மெமோ கொடுக்கப்பட்டு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மேயர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

இதன்மூலம் மாதவியின் பணியிடமாற்றத்துக்கு லிப்ஸ்டிக்கை காரணம் சொல்ல முடியாது என மேயர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. மாதவி ஏன் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்? என்பது தொடர்பாக பரபரப்பான தகவல் கிடைத்துள்ளது. அதாவது சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கும், துணை மேயர் மகேஷ் குமார் இடையே பிரச்சனை உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சனை என்பது வெளிப்படையாக தெரியாமல் இருந்தாலும் கூட இருவருக்கும் இடையே மனக்கசப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் மேயர் பிரியாவின் அறையில் நடக்கும் விஷயங்களை மாதவி துணை மேயர் மகேசுக்கு கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது மேயர் பிரியாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் தான் மாதவி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் புதிய தகவல் கிடைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+