சீனாவை உலுக்கி போட்ட கொரோனா.. ஆனால் இந்தியாவில் சத்தமே காணோமே.. டேட்டா சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீனாவில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து உயர்ந்து வந்தாலும் இந்தியாவிலும், தமிழ்நாட்டில் பெரிதாக கொரோனா கேஸ்கள் உயரவில்லை.

சீனாவில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் நிலையில் இந்தியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சீனாவில் கொரோனா கேஸ்கள் தீவிரமாக பரவி வருகின்றன. அங்கு தினசரி கேஸ்கள் 1 கோடியை தாண்டி உள்ளது. மக்கள் பலர் சாரைசாரையாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா கேஸ்கள் பெரிதாக உயரவில்லை என்றாலும் கொரோனா ஓயவில்லை.. எச்சரிக்கையாக இருப்போம்.. எந்த சூழலையும் எதிர்கொள்வோம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவியா தனது ஆலோசனை கூட்டத்திற்கு பின்பாக குறிப்பிட்டு உள்ளார்.

கொரோனா

கொரோனா

மேலும் இந்தியாவில் கொரோனா ஜீனோம் சோதனைகளை அதிகரிக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. மாநில அரசுகள் கொரோனா கேஸ்களில் ஜீனோம் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 268 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆக்டிவ் கேஸ்கள் இந்தியாவில் 3,552 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா கேஸ்கள்

இந்தியா கேஸ்கள்

சீனாவில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து உயர்ந்து வந்தாலும், தமிழ்நாட்டில் பெரிதாக கொரோனா கேஸ்கள் உயரவில்லை. இந்தியாவிலும் தேசிய அளவில் கொரோனா கேஸ்கள் குறைந்த அளவிலேயே பதிவாகி வருகிறது. இது தொடர்பாக கொரோனா டேட்டா வல்லுனர் விஜயானந்த் செய்துள்ள போஸ்டில், இந்தியாவில் தொடர்ந்து கொரோனா கேஸ்கள் குறைவாகவே பதிவாகி வருகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவே உள்ளது.

தமிழ்நாடு கேஸ்கள்

தமிழ்நாடு கேஸ்கள்

கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் 188 கேஸ்கள் தினமும் சராசரியாக பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா கேஸ்கள் மிகவும் குறைவாகவே பதிவாகி உள்ளது. 11 கேஸ்கள் நேற்று பதிவானது. இதில் சென்னையில் 5 கேஸ்கள் பதிவானது. சென்னையில் 4977 பேர் சோதனை செய்யப்பட்டனர். இதில் இவ்வளவு குறைவாக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிப்பு சதவிகிதம் வெறும் 0.2 என்று அளவில்தான் உள்ளது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

முன்னதாக கொரோனா கேஸ்கள் சீனாவில் அதிகரிப்பது தொடர்பாக கோவிட் டேட்டா ஆய்வாளர் விஜயானந்த் ஒன்இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில், சீனாவில் கொரோனா பிரச்சனை தொடங்கி உள்ளது. இது இந்தியாவை தாக்குமா என்று கேட்டால்.. இல்லை என்பதுதான் பதில். சீனாவில் கொரோனா தொடங்க மெயின் காரணம் என்றால் அங்கே ஜீரோ கோவிட் விதிகளை பின்பற்றியதுதான். அதாவது ஒருவருக்கு கொரோனா வந்தாலும் அவருடன் இருந்தவர்களை எல்லாம் மொத்தமாக தனிமைப்படுத்துவார்கள். இதுதான் அங்கு கொரோனா கட்டுப்படுத்தப்பட காரணமாக இருந்தது. கொரோனா பலருக்கும் அப்போது பரவவில்லை.

உயருமா

உயருமா

தற்போது அங்கு கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்தி உள்ளனர். அப்போது தப்பித்தவர்கள் எல்லாம் இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் இதனால் கொரோனா பரவ சான்ஸ் இல்லை. சீனாவில் இப்போதுதான் ஒமிக்ரான் பரவல் ஏற்பட்டு உள்ளது. ஒமிக்ரான் பிரிவின் கிளை வேரியண்ட்களான BA.2.75, BA.5, BQ.1 , XBB ஆகியவைதான் சீனாவில் பரவுகிறது. இதெல்லாம் ஏற்கனவே இந்தியாவில் இருந்தவைதான். நம்மிடையே ஏற்கனவே இதற்கு இம்யூனிட்டி உள்ளது. இந்த வேவ் ஏற்கனவே முடிந்துவிட்டது, என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+