Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போட்டியிட மாட்டேன்! அண்ணாமலை சொன்ன வார்த்தை! முருகனும் பின்வாங்கிட்டாரே! பாஜக முடிவிற்கு என்ன காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக சார்பாக தமிழ்நாட்டில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான இரண்டு பேர் தேர்தலில் போட்டியில்லை என்பது உறுதியாகி உள்ளது. இது பாஜகவிற்கு பெரிய பின்னடைவாக மாறி உள்ளது .

தமிழ்நாடு லோக்சபா தேர்தலில் பாஜக மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. அதன்படி பாஜக + ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரி வேந்தரின் ஐஜேகே + மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Why did Annamalai and L Murugan decides not to run in Lok Sabha elections?

உறுதியாக இருக்கும் அதிமுக: அதன்படி ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. அதிமுக - பாஜக மோதல் காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. இதனால் பாஜக தனியாக 3வது அணியை உருவாக்க முயன்று வருகிறது.

பாஜக உருவாக்கும் இந்த அணியில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் ஆகியோர் வழங்கும் முக்குலத்தோர் வாக்குகள் பாஜகவிற்கு சாதகமாக மாறும். மேலும் பாமகவின் வன்னியர் வாக்குகள், தேமுதிகவிடம் இருக்கும் 2-3 சதவிகித வாக்குகள் பாஜகவிற்கு சாதகமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.

சாதகமான சூழ்நிலை: சில கருத்து கணிப்புகள் கூட தற்போது பாஜகவிற்கு சாதகமாக வர தொடங்கி உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜக சார்பாக தமிழ்நாட்டில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான இரண்டு பேர் தேர்தலில் போட்டியில்லை என்பது உறுதியாகி உள்ளது. இது பாஜகவிற்கு பெரிய பின்னடைவாக மாறி உள்ளது .

நீலகிரி போட்டியில்லை: அதன்படி நீலகிரி லோக்சபா தொகுதியில் மத்திய பாஜக இணை அமைச்சர் எல் முருகன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் தற்போது திமுக எம்பி ஆ. ராசாவிற்கு ரூட் கிளியர் ஆகி உள்ளது. மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் எல் முருகன் மீண்டும் தேர்வாகிறார். மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார்.

இதனால் அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெரிதாக இல்லை. இதனால் திமுக எம்பி ஆ. ராசாவிற்கு பெரிய அளவில் இனி நீலகிரியில் போட்டி இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அண்ணாமலை கோவை: இன்னொரு பக்கம் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன். கோவை தேர்தலில் கண்டிப்பாக நிற்க மாட்டேன். எனக்கு தலைவராக பணிகளை செய்யவே நேரம் சரியாக இருக்கிறது. அதனால் கண்டிப்பாக தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்துள்ளார் பாஜகவின் அண்ணாமலை.

என்ன காரணம்: அண்ணாமலையின் இந்த முடிவிற்கு என்ன காரணம் இருக்கும் என்ற கேள்விகள் எழுந்த நிலையில்.. பெரும்பாலும்.. மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். அதாவது லோக்சபா தேர்தல் நெருங்கிய நிலையில்.. மத்திய உளவுத்துறை சார்பாக மத்திய பாஜக அரசுக்கு ரிப்போர்ட் சென்று இருக்கும்.

தேர்தல் தொடர்பாக எங்கே நிற்கலாம், யார் நிற்கலாம், எங்கே நிற்க கூடாது என்று ரிப்போர்ட் சென்று இருக்கும். அந்த ரிப்போர்ட் காரணமாக தேர்தலில் நிற்க மாட்டேன் என்ற முடிவை அண்ணாமலை , எல் முருகன் எடுத்து இருக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+