இவருக்கு எல்லாம் சிலை வைக்கணும்.. சிஎஸ்கே அணியில் "அந்த" வீரரை நோட் பண்ணீங்களா.. தங்கம் சார்!
சென்னை: சிஎஸ்கே வீரர் மிட்சல் சான்ட்னருக்கு சிலை வைக்க வேண்டும் என்று பல்வேறு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். அதற்கு முக்கிய காரணமும் உள்ளது.
சிஎஸ்கே அணி 2023 ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் நம்பிக்கை அளிக்க தொடங்கி உள்ளது. குஜராத்திற்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும் அதற்கு அடுத்து ஆடிய லக்னோ மற்றும் மும்பை அணிகளுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்றது.

அதிலும் நேற்று மும்பை அணி பேட்டிங் பவர் பிளேவில் அடித்து நொறுக்கினாலும்.. அதன்பின் ஸ்பின் சூழலில் மண்டியிட்டு மடிந்தது.
நேற்று மும்பைக்கு எதிராக நடந்த போட்டியிலும் சிஎஸ்கே அணி வென்றது. மும்பைக்கு எதிரான ஐபிஎல் 2023 ஆட்டத்தில் சிஎஸ்கே அணி அதிரடி வெற்றி பெற்றுள்ளது. முதலில் இறங்கிய மும்பை அணி சிஎஸ்கேவின் சான்ட்னர், ஜடேஜாவின் சூழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். சான்ட்னர் 3, ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் மும்பை அணி 20 ஓவரில் வெறும் 157-8 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இறங்கிய சிஎஸ்கே அணி எளிதாக 159-3 ரன்களை எடுத்து வென்றது.
ரஹானே 27 பந்தில் 7 பவுண்டரி , 3 சிக்ஸர் என்று மொத்தம் 61 ரன்களை எடுத்து சிஎஸ்கே அணியை வெற்றிபெற வைத்தார்.
நேற்று போட்டியில் சிஎஸ்கே வீரர் சான்ட்னர் 4 ஓவரில் 28 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். லக்னோவிற்கு எதிரான போட்டியில் வெறும் 21 ரன்களை கொடுத்து ரன் செல்வதை கட்டுப்படுத்தி 1 விக்கெட் எடுத்தார். இந்த நிலையில்தான் சிஎஸ்கே வீரர் மிட்சல் சான்ட்னருக்கு சிலை வைக்க வேண்டும் என்று பல்வேறு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். அதற்கு முக்கிய காரணமும் உள்ளது.
இவர் 2018ல் இருந்து ஐபிஎல்லில் ஆடி வருகிறார். சிஎஸ்கேவில் எடுக்கப்பட்டதில் இருந்தே இவருக்கு அணியில் பெரிதாக வாய்ப்புகள் எல்லாம் கிடைப்பது இல்லை. எப்போதாவது பேட்டிங் வாய்ப்பு கிடைக்கும். அணியில் இவர் இருப்பதே சந்தேகம்தான். பிராவோ இருந்தவரை இவருக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பதே அரிதாக இருந்தது. நியூசிலாந்து அணியில் இவர் மிக முக்கியமான வீரர்.
அதோடு அங்கே சமயங்களில் கேப்டனாக கூட இருந்துள்ளார். ஆனாலும் கூட ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே இவருக்கு பெரிதாக சான்ஸ் கொடுத்ததே இல்லை. ஆனால் அதை பற்றி எல்லாம் இவர் கவலைப்பட்டதே இல்லை. இவர் அதை பற்றி எங்கும் புகார் கொடுத்தது இல்லை. எனக்கு வாய்ப்பு தரவில்லை, என்னை புறக்கணிக்கிறார்கள் என்றெல்லாம் பேட்டி கொடுத்தது இல்லை.
அதே சமயம் அணியில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இவர் தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் இவர் சிறப்பாக ஆடி உள்ளார். பேட்டிங்கிலும் அவ்வப்போது நம்பிக்கை கொடுத்துள்ளார். பிராவோ இல்லாத நிலையில், சான்ட்னருக்கு தற்போது தொடர் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

இந்த நிலையில்தான் இவருக்கு சிலை வைக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். சிஎஸ்கே அணியில் பெஞ்சில் இருந்தாலும் அவர்களின் மனசு கோணாத வகையில் தொடர்ந்து அணி நிர்வாகம் ஆதரவு கொடுக்கும். அந்த வகையில்தான் சான்ட்னருக்கும் அணி நிர்வாகம் ஆதரவு கொடுத்து வருகிறது. இதுவே அவரும் புகார் அளிக்காமல், விமர்சனங்களை வைக்காமல் இருக்க முக்கிய காரணம் ஆகும்.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications