இவருக்கு எல்லாம் சிலை வைக்கணும்.. சிஎஸ்கே அணியில் "அந்த" வீரரை நோட் பண்ணீங்களா.. தங்கம் சார்!
சென்னை: சிஎஸ்கே வீரர் மிட்சல் சான்ட்னருக்கு சிலை வைக்க வேண்டும் என்று பல்வேறு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். அதற்கு முக்கிய காரணமும் உள்ளது.
சிஎஸ்கே அணி 2023 ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் நம்பிக்கை அளிக்க தொடங்கி உள்ளது. குஜராத்திற்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும் அதற்கு அடுத்து ஆடிய லக்னோ மற்றும் மும்பை அணிகளுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்றது.

அதிலும் நேற்று மும்பை அணி பேட்டிங் பவர் பிளேவில் அடித்து நொறுக்கினாலும்.. அதன்பின் ஸ்பின் சூழலில் மண்டியிட்டு மடிந்தது.
நேற்று மும்பைக்கு எதிராக நடந்த போட்டியிலும் சிஎஸ்கே அணி வென்றது. மும்பைக்கு எதிரான ஐபிஎல் 2023 ஆட்டத்தில் சிஎஸ்கே அணி அதிரடி வெற்றி பெற்றுள்ளது. முதலில் இறங்கிய மும்பை அணி சிஎஸ்கேவின் சான்ட்னர், ஜடேஜாவின் சூழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். சான்ட்னர் 3, ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் மும்பை அணி 20 ஓவரில் வெறும் 157-8 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இறங்கிய சிஎஸ்கே அணி எளிதாக 159-3 ரன்களை எடுத்து வென்றது.
ரஹானே 27 பந்தில் 7 பவுண்டரி , 3 சிக்ஸர் என்று மொத்தம் 61 ரன்களை எடுத்து சிஎஸ்கே அணியை வெற்றிபெற வைத்தார்.
நேற்று போட்டியில் சிஎஸ்கே வீரர் சான்ட்னர் 4 ஓவரில் 28 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். லக்னோவிற்கு எதிரான போட்டியில் வெறும் 21 ரன்களை கொடுத்து ரன் செல்வதை கட்டுப்படுத்தி 1 விக்கெட் எடுத்தார். இந்த நிலையில்தான் சிஎஸ்கே வீரர் மிட்சல் சான்ட்னருக்கு சிலை வைக்க வேண்டும் என்று பல்வேறு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். அதற்கு முக்கிய காரணமும் உள்ளது.
இவர் 2018ல் இருந்து ஐபிஎல்லில் ஆடி வருகிறார். சிஎஸ்கேவில் எடுக்கப்பட்டதில் இருந்தே இவருக்கு அணியில் பெரிதாக வாய்ப்புகள் எல்லாம் கிடைப்பது இல்லை. எப்போதாவது பேட்டிங் வாய்ப்பு கிடைக்கும். அணியில் இவர் இருப்பதே சந்தேகம்தான். பிராவோ இருந்தவரை இவருக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பதே அரிதாக இருந்தது. நியூசிலாந்து அணியில் இவர் மிக முக்கியமான வீரர்.
அதோடு அங்கே சமயங்களில் கேப்டனாக கூட இருந்துள்ளார். ஆனாலும் கூட ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே இவருக்கு பெரிதாக சான்ஸ் கொடுத்ததே இல்லை. ஆனால் அதை பற்றி எல்லாம் இவர் கவலைப்பட்டதே இல்லை. இவர் அதை பற்றி எங்கும் புகார் கொடுத்தது இல்லை. எனக்கு வாய்ப்பு தரவில்லை, என்னை புறக்கணிக்கிறார்கள் என்றெல்லாம் பேட்டி கொடுத்தது இல்லை.
அதே சமயம் அணியில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இவர் தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் இவர் சிறப்பாக ஆடி உள்ளார். பேட்டிங்கிலும் அவ்வப்போது நம்பிக்கை கொடுத்துள்ளார். பிராவோ இல்லாத நிலையில், சான்ட்னருக்கு தற்போது தொடர் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

இந்த நிலையில்தான் இவருக்கு சிலை வைக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். சிஎஸ்கே அணியில் பெஞ்சில் இருந்தாலும் அவர்களின் மனசு கோணாத வகையில் தொடர்ந்து அணி நிர்வாகம் ஆதரவு கொடுக்கும். அந்த வகையில்தான் சான்ட்னருக்கும் அணி நிர்வாகம் ஆதரவு கொடுத்து வருகிறது. இதுவே அவரும் புகார் அளிக்காமல், விமர்சனங்களை வைக்காமல் இருக்க முக்கிய காரணம் ஆகும்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications