தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று 5 மாநில தேர்தல் தேதிகளை அறிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதி குறித்து பேசியது கவனம் பெற்றது.

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்கும், மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்து உள்ளார். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாமில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறும்.

Theni Varusanadu

அசாம் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்

கேரளா சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்

புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்

மேற்கு வங்கத்தில், ஏப்ரல் 23 (முதற்கட்டம்) மற்றும் ஏப்ரல் 29 (இரண்டாம் கட்டம்) ஆகிய இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும்; வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தேர்தல் - முக்கிய தேதிகள்

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்

மனு தாக்கல் தொடக்கம் - மார்ச் 30
மனு தாக்கல் முடிவு - ஏப்ரல் 6
வேட்புமனு பரிசீலனை - ஏப். 07
வேட்புமனு திரும்பப்பெற - ஏப். 09

புதுச்சேரி முக்கிய தேதிகள் புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்

புதுச்சேரி மனு தாக்கல் தொடக்கம் - மார்ச் 16
மனு தாக்கல் முடிவு - மார்ச் 23
வேட்புமனு பரிசீலனை - மார்ச் 24
வேட்புமனு திரும்பப்பெற - மார்ச் 26

வருசநாடு மலைப்பகுதி

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பேசுகையில், அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு விபரங்கள் பகிரப்படும். வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்காளர்கள் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை; செல்போன்கள் வைக்க தனி ஏற்பாடு செய்யப்படும்.

1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற கணக்கில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளரின் கலர் புகைப்படம் இடம்பெறும். தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் 5 வாக்காளர்களுக்காக வெள்ளிமலை எனும் பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. 3 மணி நேரம் அதிகாரிகள் இதற்காக பயணிக்க வேண்டும்,.

5 மாநிலங்களிலும்17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 824 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளன. 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 25 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர், என்று அறிவித்துள்ளார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு திட்டங்கள், தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றும் பணிகளில் அரசு அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+