பிசிறு, தனி கோஷ்டி..பொதுச்செயலாளர் பதவிக்கு அடம்.. காளியம்மாள் கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய சீமான்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் அறியப்பட்ட பெண் தலைவரான, மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் இன்று அக்கட்சியில் இருந்து அதிகாரபூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஏற்கனவே கடுமையான விமர்சனங்கள், புகார்களை தொடர்ந்து கூறி வந்த நிலையில் இன்று காளியம்மாள் அந்த கட்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
தமிழ்நாட்டின் கடலோர கிராமங்களில் சமூக செயற்பாட்டாளராக இருந்த காளியம்மாள், 6 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல், 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் காளியம்மாள். அதேநேரத்தில் நாம் தமிழர் கட்சியின் பெண் தலைவராகவும் உருவெடுத்தார்.

அத்துடன் நாகை, மயிலாடுதுறை உட்பட கடலோர கிராமங்களில் தமக்கான ஆதரவாளர்களையும் ஒருங்கிணைத்திருந்தார் காளியம்மாள். இதனால் சீமான் கடும் அதிருப்தி அடைந்தார். இது தொடர்பாக சக நிர்வாகிகளிடம் பேசிய சீமான், காளியம்மாள் என்கிற ஒரு பிசிறு இருக்கிறது.. அதனையும் தட்டிவிட வேண்டியதுதான் என கூறியிருந்தார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து சீமானுடனான நிகழ்ச்சிகளில் காளியம்மாள் பங்கேற்காமல் புறக்கணித்து வந்தார்.
மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சீமானுடன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய காளியம்மாள், பிரபாகரனுடன் 12 நிமிடம்தான் சீமான் பேசினார்; சுயநல அரசியலை கைவிட்டு இனநலன் அரசியலை முன்னெடுங்கள் எனவும் பேச அதே மேடையிலேயே காளியம்மாளுக்கு பதில் கொடுத்தார் சீமான்.
இதன் பின்னர் நாம் தமிழர் கட்சி மேடைகளில் காளியம்மாள் பேசவும் இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் காளியம்மாள் பிரசாரம் செய்யவில்லை. அப்போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்த சீமான், நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை கேட்டு காளியம்மாள் அடம்பிடிப்பதாக கூறி இருந்தார்; அத்துடன் காசு கொடுத்து தனக்கான தனி கூட்டத்தை சேர்த்து வருகிறார்; அவர் என்ன செய்கிறார் என்பதை கண்காணிப்பதா எங்களுக்கு வேலை? விருப்பம் இருந்தால் தொடரட்டும்; தொல்லையாக இருக்கக் கூடாது என பகிரங்கமாகவே கூறியிருந்தார்.
கடந்த சில நாட்களாக, காளியம்மாள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினாலும், இருந்தால் இருக்கட்டும்.. போனால் போகட்டும்.. என்றே சீமான் பதிலளித்து வந்தார். சீமானே கட்சியை விட்டு வெளியே போ என்று கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக பேட்டி கொடுத்த நிலையில்தான் இன்று நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறுவதாக காளியம்மாள் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications