பிசிறு, தனி கோஷ்டி..பொதுச்செயலாளர் பதவிக்கு அடம்.. காளியம்மாள் கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய சீமான்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் அறியப்பட்ட பெண் தலைவரான, மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் இன்று அக்கட்சியில் இருந்து அதிகாரபூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஏற்கனவே கடுமையான விமர்சனங்கள், புகார்களை தொடர்ந்து கூறி வந்த நிலையில் இன்று காளியம்மாள் அந்த கட்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
தமிழ்நாட்டின் கடலோர கிராமங்களில் சமூக செயற்பாட்டாளராக இருந்த காளியம்மாள், 6 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல், 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் காளியம்மாள். அதேநேரத்தில் நாம் தமிழர் கட்சியின் பெண் தலைவராகவும் உருவெடுத்தார்.

அத்துடன் நாகை, மயிலாடுதுறை உட்பட கடலோர கிராமங்களில் தமக்கான ஆதரவாளர்களையும் ஒருங்கிணைத்திருந்தார் காளியம்மாள். இதனால் சீமான் கடும் அதிருப்தி அடைந்தார். இது தொடர்பாக சக நிர்வாகிகளிடம் பேசிய சீமான், காளியம்மாள் என்கிற ஒரு பிசிறு இருக்கிறது.. அதனையும் தட்டிவிட வேண்டியதுதான் என கூறியிருந்தார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து சீமானுடனான நிகழ்ச்சிகளில் காளியம்மாள் பங்கேற்காமல் புறக்கணித்து வந்தார்.
மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சீமானுடன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய காளியம்மாள், பிரபாகரனுடன் 12 நிமிடம்தான் சீமான் பேசினார்; சுயநல அரசியலை கைவிட்டு இனநலன் அரசியலை முன்னெடுங்கள் எனவும் பேச அதே மேடையிலேயே காளியம்மாளுக்கு பதில் கொடுத்தார் சீமான்.
இதன் பின்னர் நாம் தமிழர் கட்சி மேடைகளில் காளியம்மாள் பேசவும் இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் காளியம்மாள் பிரசாரம் செய்யவில்லை. அப்போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்த சீமான், நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை கேட்டு காளியம்மாள் அடம்பிடிப்பதாக கூறி இருந்தார்; அத்துடன் காசு கொடுத்து தனக்கான தனி கூட்டத்தை சேர்த்து வருகிறார்; அவர் என்ன செய்கிறார் என்பதை கண்காணிப்பதா எங்களுக்கு வேலை? விருப்பம் இருந்தால் தொடரட்டும்; தொல்லையாக இருக்கக் கூடாது என பகிரங்கமாகவே கூறியிருந்தார்.
கடந்த சில நாட்களாக, காளியம்மாள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினாலும், இருந்தால் இருக்கட்டும்.. போனால் போகட்டும்.. என்றே சீமான் பதிலளித்து வந்தார். சீமானே கட்சியை விட்டு வெளியே போ என்று கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக பேட்டி கொடுத்த நிலையில்தான் இன்று நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறுவதாக காளியம்மாள் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications