தண்ணீர் பிரச்சனை.. மக்கள் கண்ணீர்.. மக்களவை தேர்தலில் பேசும்பொருளாக இல்லாமல் போனது ஏன்?
சென்னை: தண்ணீர் பற்றாக்குறைதான் இந்த தேசத்தின் பல இடங்களில் முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. ஆனால் இந்த தேர்தலில் குடிநீர் பிரச்சனை சுத்தமாக எழுப்பப்படவில்லை.
எந்தகட்சியுமே குடிநீர் பிரச்சனை குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பெரிதாக பேசவில்லை. வறுமை ஒழிப்புக்காக நிதி ஒதுக்குவது பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிகம் பேசினார். இதேபோல் இந்தியாவின் பாதுகாப்பு, நாட்டின் ராணுவம் என்பது பற்றியே அதிகம் பேசினார் மோடி.
ஆனால் இங்கு மிகப்பெரிய பிரச்னை, தண்ணீர் தான். அதை பற்றி எந்த கட்சிகளுமே பெரிதாக வாய் திறக்கவில்லை என்பதே கசப்பான உண்மை.

தண்ணீர் நேரம்
ஒவ்வொரு ஊரிலும் பால், பேப்பர், மளிகை என எது எப்போது வரும் என்பது மக்கள் எல்லோருக்குமே தெரியும். ஆனால் தண்ணீர் மட்டும் எப்போது வரும் என்பது யாருக்குமே தெரியாது. தண்ணீர் பிரச்சனைக்கு ஒவ்வொரு ஊரிலும் மிக முக்கிய காரணம் என்றால் நீர் மேலாண்மை இல்லாதது தான்

பக்கத்து மாநிலங்கள்
தண்ணீர் ஏதோ தமிழ்நாட்டில் மட்டும் தான் பிரச்சனையாக நினைக்க வேண்டாம். பக்கத்து மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் என எல்லா மாநிலங்களிலும் நீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகிறார்கள்

பருவ மழை பாதிப்பு
பருவ மழை பொய்த்து போன நிலையில், இந்த ஆண்டு தண்ணீர் பிரச்சனை இந்தியா முழுவதுமே தலை விரித்து ஆடுகிறது. ஆனால் இந்த தேர்தலில் தண்ணீர் பிரச்சனை பெரிதாக பேசும் பொருளாக இல்லை. காரணம். இங்கு தண்ணீரை விட வறுமை ஒழிப்பு , தேசத்தின் பாதுகாப்பு குறித்தே அதிகமாக பேசினார்கள்.

தேசத்தின் பிரச்சனை அல்ல
தண்ணீர் பிரச்சனையை பெரிய பேசும்பொருளாக இல்லாமல் போனதற்கு காரணம், தண்ணீர் என்பது ஒவ்வொரு ஊர் சார்ந்த பிரச்னையாகவே அரசியல் தலைவர்கள் பார்க்கிறார்கள். அதை தேசத்தின் ஒட்டுமொத்த மக்களின் பிரச்சனையாக யாரும் பார்க்கவில்லை. தண்ணீர் மேலாண்மை குறித்து யாரும் கவலைப்பட்டது மாதிரியும் தெரியவில்லை.

மாறி மாறி திட்டினார்கள்
அவர்களை பொறுத்தவரை வெல்ல வேண்டும். அதற்காக என்ன பேச வேண்டுமோ? அதை சரியாக பேசினார்கள்.வளர்ச்சி திட்டங்கள் செய்தது குறித்தோ, வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்போவது குறித்தோ பெரிதாக பேசவில்லை. ஆளும், எதிர்க்கட்சிகள் ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டிக்கொண்டது தான் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் நடந்தது. தண்ணீர் மேலாண்மை மட்டும் இந்த தேசத்தில் சரியாக இருந்தால் இந்த நாட்டின் வறுமையே இல்லாமல் போகும் என்ற சூழலில் அரசியல் கட்சிகள் அதனை பெரிதாக அலட்டிக்கொள்ளாதது வேதனையின் உச்சம்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications