தண்ணீர் பிரச்சனை.. மக்கள் கண்ணீர்.. மக்களவை தேர்தலில் பேசும்பொருளாக இல்லாமல் போனது ஏன்?
சென்னை: தண்ணீர் பற்றாக்குறைதான் இந்த தேசத்தின் பல இடங்களில் முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. ஆனால் இந்த தேர்தலில் குடிநீர் பிரச்சனை சுத்தமாக எழுப்பப்படவில்லை.
எந்தகட்சியுமே குடிநீர் பிரச்சனை குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பெரிதாக பேசவில்லை. வறுமை ஒழிப்புக்காக நிதி ஒதுக்குவது பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிகம் பேசினார். இதேபோல் இந்தியாவின் பாதுகாப்பு, நாட்டின் ராணுவம் என்பது பற்றியே அதிகம் பேசினார் மோடி.
ஆனால் இங்கு மிகப்பெரிய பிரச்னை, தண்ணீர் தான். அதை பற்றி எந்த கட்சிகளுமே பெரிதாக வாய் திறக்கவில்லை என்பதே கசப்பான உண்மை.

தண்ணீர் நேரம்
ஒவ்வொரு ஊரிலும் பால், பேப்பர், மளிகை என எது எப்போது வரும் என்பது மக்கள் எல்லோருக்குமே தெரியும். ஆனால் தண்ணீர் மட்டும் எப்போது வரும் என்பது யாருக்குமே தெரியாது. தண்ணீர் பிரச்சனைக்கு ஒவ்வொரு ஊரிலும் மிக முக்கிய காரணம் என்றால் நீர் மேலாண்மை இல்லாதது தான்

பக்கத்து மாநிலங்கள்
தண்ணீர் ஏதோ தமிழ்நாட்டில் மட்டும் தான் பிரச்சனையாக நினைக்க வேண்டாம். பக்கத்து மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் என எல்லா மாநிலங்களிலும் நீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகிறார்கள்

பருவ மழை பாதிப்பு
பருவ மழை பொய்த்து போன நிலையில், இந்த ஆண்டு தண்ணீர் பிரச்சனை இந்தியா முழுவதுமே தலை விரித்து ஆடுகிறது. ஆனால் இந்த தேர்தலில் தண்ணீர் பிரச்சனை பெரிதாக பேசும் பொருளாக இல்லை. காரணம். இங்கு தண்ணீரை விட வறுமை ஒழிப்பு , தேசத்தின் பாதுகாப்பு குறித்தே அதிகமாக பேசினார்கள்.

தேசத்தின் பிரச்சனை அல்ல
தண்ணீர் பிரச்சனையை பெரிய பேசும்பொருளாக இல்லாமல் போனதற்கு காரணம், தண்ணீர் என்பது ஒவ்வொரு ஊர் சார்ந்த பிரச்னையாகவே அரசியல் தலைவர்கள் பார்க்கிறார்கள். அதை தேசத்தின் ஒட்டுமொத்த மக்களின் பிரச்சனையாக யாரும் பார்க்கவில்லை. தண்ணீர் மேலாண்மை குறித்து யாரும் கவலைப்பட்டது மாதிரியும் தெரியவில்லை.

மாறி மாறி திட்டினார்கள்
அவர்களை பொறுத்தவரை வெல்ல வேண்டும். அதற்காக என்ன பேச வேண்டுமோ? அதை சரியாக பேசினார்கள்.வளர்ச்சி திட்டங்கள் செய்தது குறித்தோ, வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்போவது குறித்தோ பெரிதாக பேசவில்லை. ஆளும், எதிர்க்கட்சிகள் ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டிக்கொண்டது தான் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் நடந்தது. தண்ணீர் மேலாண்மை மட்டும் இந்த தேசத்தில் சரியாக இருந்தால் இந்த நாட்டின் வறுமையே இல்லாமல் போகும் என்ற சூழலில் அரசியல் கட்சிகள் அதனை பெரிதாக அலட்டிக்கொள்ளாதது வேதனையின் உச்சம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications