முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வீட்டிற்கே போன வைரமுத்து.. நெகிழ்ந்து போய் வெளியிட்ட பதிவு
சென்னை: 'கலைஞர் 100 கவிதைகள் 100' என்ற தலைப்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்து நூறு கவிஞர்களின் கவிதைகளை திரட்டி உள்ள கவிஞர் வைரமுத்து, அந்த நூலை வெளியிட உள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். முதல் நூலை வீரமணி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற உள்ளார் எனறு வைரமுத்து கூறினார்.
இது தொடர்பாக சினிமா பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து வெளியிட்டுள்ள டவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

"மாண்புமிகு முதலமைச்சருக்கு
அழைப்பிதழ் தந்தேன்
கலைஞர்
நூற்றாண்டு நிறைவுக்காகக்
கலைஞர் குறித்து
நூறு கவிஞர்களின்
கவிதைகளைத் திரட்டி
'கலைஞர் 100 கவிதைகள் 100'
என்ற தலைப்பில் தொகுத்திருக்கிறேன்
பாவேந்தர் பாரதிதாசன்,
கவியோகி சுத்தானந்த பாரதியார்,
நாமக்கல் கவிஞர், முனைவர் மு.வ,
முனைவர் இலக்குவனார் தொடங்கி
நிகழ்காலக் கவிஞர்கள் வரை
நீண்டு நிறைகிறது தொகுப்பு
இது
எவருக்கும் எட்டாதது
வேறெந்தத்
தலைவருக்கும் கிட்டாதது
07.08.2024 அன்று
தமது முகாம் அலுவலகத்தில்
முதலமைச்சர்
அதை வெளியிடுகிறார்
திராவிடர் கழகத் தலைவர்
கி.வீரமணி
முதல்நூல் பெறுகிறார்
நான்
முன்னிலை வகிக்கிறேன்
கலைஞரின்
தமிழ் அன்புக்கு
என் காணிக்கை இது"
இவ்வாறு வைரமுத்து அந்த எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications