Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"விநோத சபலிஸ்ட்".. விடிகாலை அலாரம் வைத்து எழுந்து கொள்வாராம்.. மயிலாப்பூர் ரோட்டிலேயே 25 பெண்கள்..!

பெண்களுக்கு பாலியல் தொல்லை தந்த இளைஞரை சென்னை போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரோட்டில் எந்த பெண்ணாவது தனியாக வந்தால், அவரிடம் சில்மிஷம் செய்யாமல் இருக்கவே முடியாதாம்.. இப்படி ஒரு "விநோத பிறவி" சென்னையில் நடமாடி உள்ளது.

சில மாதங்களுக்கு சென்னையில் ஒரு சம்பவம் நடந்தது.. அந்த தினேஷ்குமார் என்ற இளைஞருக்கு 20 வயதாகிறது.. எழும்பூரில் உள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் வேலைசெய்து கொண்டே, ஹோட்டல் மேனேஜ்மென்ட் பயிற்சி பெற்று வருகிறார்.

தினமும் வேலை முடிந்துவிட்டால், பெண்களை சீண்டுவதுதான் தினேஷின் ஹாபி.. அந்தவகையில், சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்வதுடன் அத்துமீறலிலும் ஈடுபட்டு வருவார்..

வில்லிவாக்கம்

வில்லிவாக்கம்

இதற்காகவே தினமும் காலையில் 5 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து கொள்வாராம்.. வில்லிவாக்கத்தில் இருந்து எழும்பூர் வரை பைக்கில் செல்வாராம். எதிரே எந்த பெண் வந்தாலும், அவர்களை சீண்டி, சேட்டையும் செய்து வந்துள்ளார்.. தனியாக பெண் வந்தால், பைக்கை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, அந்த பெண்ணின் அருகில் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுவிட்டு, பிறகு வேகமாக ஓடிவந்து பைக் எடுத்து கொண்டு பறந்து விடுவாராம்.

சில்மிஷம்

சில்மிஷம்

இப்படித்தான் ஒரு பெண்ணை சீண்டி உள்ளார்.. அவர் ஒரு ராணுவ வீரரின் மகள் ஆவார்.. தினேஷ்குமார் அந்த பெண்ணை சில்மிஷம் செய்ததை, பின்னாடியே நடந்து வந்த, ராணுவ வீரரும் பார்த்துவிட்டார்.. அப்பறமென்ன.. போலீசுக்கு விஷயம் பறந்ததும், தினேஷ்குமாரை தட்டி தூக்கி கொண்டு சென்றனர். அப்போது ஒரு வாக்குமூலம்தந்தார்.. அதில், "எனக்கு சின்ன வயதில் இருந்தே இப்படி ஒரு ஆசை உண்டு.. எந்த பெண் தனியாக நடந்து சென்றாலும், சீண்டி பார்த்துவிட வேண்டும் என்று நினைப்பேன்.. இதுபோல், இதுவரை 150-க்கும் மேற்பட்ட பெண்களிடம் தவறாக நடந்து கொண்டுள்ளேன்" என்றார்.

மயிலாப்பூர்

மயிலாப்பூர்

இதே மாதிரி ஒரு சபலிஸ்ட்தான் மறுபடியும் சிக்கி உள்ளார்.. மயிலாப்பூர் சி.பி.ராமசாமி சாலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவி ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது வந்த இளைஞர் ஒருவர், மாணவியை பின்னாடியே துரத்திக் கொண்டு போனார்.. பிறகு, ஆட்கள் யாரும் இல்லாத இடத்தில், மாணவிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார்.. அந்த பெண் கத்தி கூச்சலிடவும், பிறகு வேகமாக தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து அபிராமபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

 ஜஸ்ட் 25

ஜஸ்ட் 25

போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை வைத்து விசாரணை நடத்தினர். அந்த கேமராவில் சம்பந்தப்பட்ட இளைஞர் சிக்கினார்.. இவர் கோட்டூர்புரம் சித்ரா நகர் பகுதியைச் சேர்ந்தவர்.. பெயர் தனுஷ் .. 25 வயதாகிறதாம்.. இளம்பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவது இவருக்கு பிடித்தமான விஷயமாம்.. அதிலும், மயிலாப்பூர் பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்தும், பாலியல் அத்துமீறிலில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது..

தனுஷ்

தனுஷ்

இதுமாதிரி, 25-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை தந்துள்ளாராம்.. இதையடுத்து தனுஷை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது... இதில் கொடுமை என்னவென்றால், மாதவரத்தில் 9 வயது சிறுமி, இட்லி மாவு வாங்க போனாளாம்.. அந்த குழந்தையை கடைக்குள் தூக்கி சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளான் இந்த வெறிபிடித்தவன்.. இப்போது வியாபாரி தனுஷ், ஜெயிலுக்குள்ளேயே இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+