அவசர அவசரமாக.. வக்கீல்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி.. செம டென்ஷனில் சீனியர் "தலை"கள்.. பரபர அதிமுக
எடப்பாடி பழனிசாமி வழக்கறிஞர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்
சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்னும் சற்று நேரத்தில் ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி வழக்கறிஞர்களுடன் திடீர் ஆலோசனை நடத்தி வருவதால் பரபரப்பு கூடி வருகிறது.
அதிமுக முழு பொறுப்பு கையில் கிடைத்தும்கூட, அதனை அனுபவிக்க முடியாத நிலைமையில் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.. தற்சமயம் 2 விதமான தீர்ப்புகளை எதிர்நோக்கி காத்து கொண்டுள்ளார்.
முதலாவதாக, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி சதீஸ்குமார் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், இதை எதிர்த்து அப்பீலுக்கு ஓடினார் ஓபிஎஸ்.

சாவி எங்கே?
அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் தந்ததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்து, எடப்பாடி பழனிசாமியின் அதிகாரத்துக்கு செக் வைத்தார்.. இந்த மனுவை தாக்கல் செய்ததுமே, எடப்பாடி பழனிசாமி பதிலுக்கு கேவியட் மனு தாக்கல் செய்தார்.. கட்சி சாவியை ஒப்படைக்க கோரிய வழக்கில் எடப்பாடி பழனிசாமி சுப்ரீம்கோர்ட்டில் இந்த கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.. அப்பீல் மனுவை விசாரிக்கும்போது தன் கருத்தையும் கேட்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தன்னுடைய மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், இதன்முடிவுகள் யாருக்கு சாதகமாக வரும் என்று தெரியவில்லை.

தமிழ்மகன் உசேன்
நீதிமன்றம் உத்தரவுப்படி, தான் நடத்திய பொதுக்குழுவுக்கும் எடப்பாடிக்கு சிக்கல் வந்துள்ளது.. கடந்த ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் ஓபிஎஸ் இன்னொரு வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்தார்.. இதை சென்னை ஹைகோர்ட்டே விசாரித்து 2 வாரங்களுக்குள் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.. மேலும், வழக்கு உத்தரவு வெளியாகும் வரை, எடப்பாடி பழனிசாமி எந்தவிதமான உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்..

அப்பாயிண்ட்மென்ட்
இது எடப்பாடியின் கையை மேலும் கட்டிப்போட்டு வைத்துள்ளது. இன்றைய தினம் அந்த வழக்குதான் இன்று ஹைகோரட்டில் விசாரணைக்கு வருகிறது. ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, கடந்த வாரம் முதல் தெம்பாக காணப்படுகிறார்.. விறுவிறுப்பான சுற்றுப்பயணம், நிர்வாகிகளை சந்திப்பது, ஆலோசனை நடத்துவது என பம்பரமாக சுழல ஆரம்பித்துவிட்டார்.. ஆனால், எடப்பாடி அப்படி இல்லை.. சமீப காலமாகவே தூக்கத்தை தொலைத்துள்ளார்.. மேலிட தலைவர்கள் தன்னை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் தராததுடன், பிரதமர் மோடியும் தன்னை சந்திக்க நேரம் ஒதுக்காததால் உடைந்து போய்விட்டார் எடப்பாடி..

தூக்கத்தை தொலைத்தார்?
இதையடுத்து, ஓபிஎஸ் பக்கம் டெல்லி காற்று மெல்ல வீசவும், எடப்பாடி சற்று கலக்கமாகி உள்ளதாகவே சொல்கிறார்கள்.. இன்று விசாரணை நடக்க உள்ள நிலையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுமா? அல்லது ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்படுமா? ஒருவேளை ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டால், தன்னுடைய கை மீண்டும் கட்சிக்குள் ஓங்குமா? அப்படி ஏற்படும் பட்சத்தில் ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? அல்லது பொதுக்குழுவில் தீர்மானங்கள் ரத்தானால், அடுத்த நகர்வு என்ன? என்றெல்லாம் எடப்பாடி தரப்பு இந்த 4 நாட்களாகவே யோசனையில் மூழ்கி வந்தன.
Recommended Video

ரத்தத்தின் ரத்தங்கள்
இன்று மதியம் வழக்கு விசாரணை நடக்க உள்ள நிலையில், அவசர அவசரமாக வழக்கறிஞர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.. மதியம் 2 மணிக்கு மேல், பொதுக்குழு தொடர்பான வழக்கு நடக்க உள்ளதாக தெரிகிறது.. ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் டெல்லியில் இருந்து வாதாடுவதற்கு இன்று வரவுள்ள நிலையில், தன் சார்பாக என்ன மாதிரியான கருத்துக்களை, வாதங்களை முன்வைக்கலாம் என்பது குறித்தும் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. முக்கிய நிர்வாகிகளும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.. நடப்பதை எல்லாம் பார்த்து ரத்தத்தின் ரத்தங்கள் கவலையில் உள்ளனர்.
-
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை!












Click it and Unblock the Notifications