Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமர் மோடியின் காலில் விழுந்தது ஏன்? அவர் சொன்னது என்ன தெரியுமா? வானதி சீனிவாசன் அளித்த விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் பிரதமர் நரேந்திர மோடி காலில் விழுந்து வணங்கினார். அதற்கு பிரதமர் மோடி கண்டிப்பு காட்டியதோடு, வானதி சீனிவாசனுக்கு அறிவுரையும் வழங்கினார். பிரதமர் மோடி அப்போது என்ன கூறினார் என்பது பற்றி வானதி சீனிவாசன் அளித்த விளக்கத்தை பார்க்கலாம்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீட்டிற்கு அனுமதி தர வேண்டும் என பல்வேறு கட்சிகளும் பலரும் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் சுமார் 27 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இந்த நிலையில், இந்த மசோதா நாடாளுமன்ற சிறப்புக் கூட்டிடத்தில் கொண்டு வரப்பட்டது. இரு அவைகளிலும் விவாதத்திற்கு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது.

Why fall at PM Modis feet in delhi event? BJP MLA Vanathi Srinivasan explains

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டெல்லியில் பாஜக மகளிர் அணி சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டெல்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு வந்த பிரதமர் மோடிக்கு பாஜக மகளிர் அணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து, பூக்களைத் தூவியும் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

அதைப் பிரதமர் மோடி சிரித்த முகத்தோடு ஏற்றுக் கொண்டார். கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசனும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது திடீரென பிரதமர் மோடி காலில் விழுந்து வானதி சீனிவாசன் ஆசீர்வாதம் பெற முயன்றார்.

இதைக் கவனித்த பிரதமர் மோடி சட்டென பின்னால் நகர்ந்தார். மேலும், இதுபோல காலில் விழக் கூடாது என்பது போல வானதி சீனிவாசனை நோக்கி அறிவுரை கூறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி காலில் விழுந்தது ஏன்? என்பதற்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கூறியதாவது:-

மசோதா நிறைவேறியதால் மகளிர் அணி சார்பில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று நேற்று காலை தான் முடிவு செய்தோம். இன்று அதற்கான வரவேற்புகளை செய்து உற்சாகமான பிரம்மாண்டமான வரவேற்பு கொடுத்தோம். மகளிர் அணி தலைவர் என்ற முறையில் நான் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக இருந்தேன். பிரதமரை வரவேற்று விட்டு.. நான் அவரிடம் சொன்னது..

கோடிக்கணக்கான பெண்களின் கனவை நீங்கள் நனவாக்கியிருக்கீர்கள். அவர்கள் எல்லாருடைய சார்பிலும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதற்கப்புறம் எனக்கு என்ன தோன்றியது என்றால் அரசியலில் இருக்கக் கூடிய பெண்கள் ஒவ்வொரு இடத்திற்கும் வருவதற்கு சந்திக்கின்ற சவால்கள், பிரச்சினைகள், அனுபவிக்கின்ற அவமானங்கள் எல்லாம் அந்த கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு நிமிடம் வந்தது.

எனவே, அவருக்கு காலில் விழுந்து நன்றி சொல்வதன் மூலமாக மட்டுமே நன்றி சொல்ல முடியும் அப்டி நினைத்து நமஸ்காரம் பண்ணினேன். அப்போ உடனே மோடி, இனிமேல் இப்படி விழக்கூடாது. உங்கள் வணக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன். காலில் விழக்கூடாது. அப்டினு சொல்லிவிட்டு எனக்கு அறிவுரை சொன்னார்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+