Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலை வரும்போது கோஷமிட்ட பாஜக தொண்டர்கள்.. மனதுடைந்துபோன வி.பி.துரைசாமி! வெடித்து கிளம்பிய கோபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று சென்னையில் பாஜக சார்பாக நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் வி. பி. துரைசாமி கோபப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியது ஏன்? யாரை ஏமாற்றுகிறீர்கள் - பாஜக அண்ணாமலை

    தமிழக அரசின் பட்ஜெட்டை கண்டித்து நேற்று பாஜக சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இந்த மாநாடு நடத்தப்பட்டது.

    தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை விமர்சனம் செய்தும், திராவிட மாடலை விமர்சனம் செய்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பாஜக மாநில துணைத் தலைவர் வி. பி. துரைசாமி கோபம் அடைந்த சம்பவம் வைரலாகி வருகிறது.

    வி. பி. துரைசாமி கோபம்

    வி. பி. துரைசாமி கோபம்

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு.. என்று வி. பி. துரைசாமி பேச்சை தொடங்கினார். அப்போது பின்னால் இன்னொரு மைக்கை வைத்து பாஜக நிர்வாகி ஒருவர்.. பாஜக தலைவர் அண்ணாமலை வருகிறார்.. வந்துகொண்டே இருக்கிறார்.. பாரத் மாதா கீ ஜெ.. பாரத் மாதா கீ ஜெ.. பாரத அன்னையின் புகழ் வாழ்க.. வாழ்க என்று கூறினார். தனது பேச்சு பாதியில் நிறுத்தப்பட்ட கோபத்தில் வி. பி. துரைசாமி நின்று கொண்டு இருந்தார்.

    அண்ணாமலை வி. பி. துரைசாமி

    அண்ணாமலை வி. பி. துரைசாமி

    இதையடுத்து பாரத் மாதா கீ ஜெ கோஷம் நிறுத்தப்பட்டதும், மீண்டும் வி. பி. துரைசாமியை பேசும்படி அங்கிருந்த பாஜக நிர்வாகிகளும், நாராயண் திருப்பதியும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இருப்பா இடையில் வேற யாராவது வருவாங்க.. அவங்க எல்லாம் வரட்டும் அப்பறம் பேசலாம்.. எனக்கு அசிங்கமா இருக்கு.. அவர் வரட்டும்.. அவர் வந்ததும் பேசிக்கலாம் என்று கோபமாக கூறினார். அதற்கு அங்கு இருந்த பாஜக நிர்வாகிகள் சிலர் வி. பி. துரைசாமியை பேசும்படி தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

    கண்டன ஆர்ப்பாட்டம்

    கண்டன ஆர்ப்பாட்டம்

    ஆனால்.. அவர் வரட்டும்.. வந்ததும் பேசலாம்.. என்னை என்ன பேச சொல்லி மிரட்டுறீங்களா என்று கோபமாக கேட்டார். இதையடுத்து அங்கு அந்த நேரம் பார்த்து பாஜக தலைவர் அண்ணாமலை வந்தார். உடனே அண்ணாமலையிடம் வி. பி. துரைசாமி.. எல்லோரும் பேசிட்டாங்க.. நான் மட்டும்தான் இன்னும் பேசவில்லை. நீங்கள் அனுமதி கொடுத்தால் நான் பேசுவேன் என்று கூறினார்.

    பாஜக வி. பி. துரைசாமி

    பாஜக வி. பி. துரைசாமி

    இதையடுத்து துரைசாமியிடம் அண்ணாமலை.. பேசுங்கள்.. பேசுங்கள் என்று கூறினார். இதன்பின் வி. பி. துரைசாமி.. எனக்கு தலைவர் அனுமதி கொடுத்துவிட்டார். அவரின் அனுமதியோடு பேசுகிறேன் என்று கூறினார். துரைசாமி இப்படி கோபமாக பேசியதும், அவரின் பேச்சு பாதியில் தடுக்கப்பட்டதும் வீடியோவாக வெளியாகி இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+