அமெரிக்க தூதரக விருந்து! விவிஐபிக்கள் போன "டின்னர்"! பிடிஆரும் இருந்தாராமே? விசாரிக்கும் உளவுத்துறை?
சென்னை: சென்னையில் மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்ட விருந்து ஒன்றை குறித்து மத்திய உளவுத்துறை விசாரித்து தகவல் சேகரித்து வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
ஒவ்வொரு மாநிலத்திலும் மத்திய உளவுத்துறை சார்பாக சில அதிகாரிகள் பணியாற்றுவார்கள். மாநில பாதுகாப்பு, மாநில சட்ட ஒழுங்கு, மாநில அரசு சார்பாக எடுக்கப்படும் முடிவுகளை கண்காணிக்க இவர்கள் தீவிரமாக பணிகளை செய்வார்கள்.
அதிலும் கடலோர மாநிலங்கள், எல்லையோர மாநிலங்களில் பாதுகாப்பு தொடர்பாக தகவல்களை திரட்ட இவர்கள் தொடர்ந்து ஆய்வு பணிகளை செய்வார்கள்.

விசாரணை
அந்த வகையில்தான் தமிழ்நாடு அமைச்சர்கள் சிலர் கலந்து கொண்ட மீட்டிங் ஒன்றை உளவுத்துறை வட்டாரங்கள் விசாரித்து வருகிறதாம். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் கடந்த வாரம் இரவு சில முக்கிய வி.வி.ஐ.பி.க்களுக்கு டின்னர் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். நீண்ட நேரம் இந்த மீட்டிங் நடந்தது.

டின்னர்
இந்த மீட்டிங்கில் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அமெரிக்க அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். அதே சமயம் சில திரை பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அதேபோல் சென்னையை பறைசாற்றும் சில விவிஐபிக்கள், பிஸ்னஸ்மேன்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இரவு டின்னர் வரை மீட்டிங் நடந்து.. பின்னர் விருந்து கொடுக்கப்பட்டு, போட்டோக்களும் எடுக்கப்பட்டு மீட்டிங் முடிந்துள்ளது.

உளவுத்துறை
இந்த நிலையில் எதற்காக இந்த டின்னர் ? பி.டி.ஆர்.கலந்து கொண்டது எதற்காக? என்றெல்லாம் விசாரித்திருக்கிறது மத்திய உளவுத்துறை. இந்த மீட்டிங்கில் கலந்து கொண்ட விவிஐபிக்கள் யார். அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது ஏன். அங்கே இவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதை எல்லாம் பற்றி உளவுத்துறை விசாரித்து வருகிறதாம்.பின்னர் இது தொடர்பான ரிப்போர்ட் தேவைப்பட்டால் மத்திய உள்துறைக்கு அனுப்பப்படலாம்.

சாதாரண கூட்டம்
ஆனால் அரசு தரப்பில் விசாரித்ததில்.. இது மிகவும் சாதாரண கூட்டம் என்றே தகவல்கள் வருகின்றன. அமெரிக்காவின் சுதந்திர தினத்தை ஒட்டி சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் விருந்து கொடுத்துள்ளது. இருநாட்டு நட்புறவை பாராட்டும் வகையில் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியாக இது நடத்தப்பட்டுள்ளது. அமைச்சர்கள், சில பிரபலங்கள் மரியாதையை நிமித்தமாக அழைக்கப்பட்டனர், மற்றபடி வேறு எதுவும் இல்லை.. என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications