"வயசானா ரிட்டயர் ஆகுங்க".. அமித் ஷாதான் பிரதமர்.. மோடிக்கு எதிராக பாஜகவின் உள்ளடி வேலை.. அட ட்விஸ்ட்
சென்னை: மோடியை தோல்வி அடைய செய்ய பாஜக உள்ளேயே உள்ளடி வேலை நடப்பதாக நினைக்கிறேன். மோடிக்கு தப்பு தப்பாக எழுதி கொடுக்கிறார்கள். மோடிக்கு எதிராக.. மோடி கிண்டல் செய்யப்பட வேண்டும் என்றே இப்படி எல்லாம் எழுதிக்கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
ஆம் ஆத்மி பொதுக்கூட்டம் ஒன்றில் சமீபத்தில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மோடிக்கு 73 வயதாகிறது. இந்த வருடம் 74 ஆகும். அடுத்த செப்டம்பர் 75 ஆகும். பாஜகவில் 75 வயதில் நிர்வாக பதவிகளை கொடுக்க கூடாது என்ற எழுதப்படாத விதியை சுட்டிக்காட்டி பிரதமர் மோடியை அரவிந்த் கெஜ்ரிவால் வளைத்து உள்ளார். பிரச்சாரத்தில் அவர் பேசிய இந்த ஒரே விஷயம் பாஜகவிற்குள் 5 புயலை கிளப்பி உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவில் நடக்கும் புதிய பிரச்சனை குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், எனக்கு பெரிய சந்தேகம் இருக்கிறது. மோடியை தோல்வி அடைய செய்ய பாஜக உள்ளேயே உள்ளடி வேலை நடப்பதாக நினைக்கிறேன். மோடிக்கு தப்பு தப்பாக எழுதி கொடுக்கிறார்கள். மோடிக்கு எதிராக.. மோடி கிண்டல் செய்யப்பட வேண்டும் என்றே இப்படி எல்லாம் எழுதிக்கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன். மோடி சுயமாக பேச மாட்டார் எப்போதும். எழுதிக்கொடுப்பதை பேசுவார். டெலி பிராம்டர் வைத்து பேசுவார்.
அப்படி இருக்க மோடிக்கு இப்படி எல்லாம் எழுதிக்கொடுத்து அவரை கிண்டல் செய்ய வைப்பது யார். மோடி தோற்கடிக்கபட வேண்டும் என்று யாரோ ஸ்கிரிப்ட் எழுதிக்கொடுக்கின்றனர். நவீன் பட்நாயக் வயதாகிவிட்டது அதனால் ஓய்வு பெற வேண்டும் என்று அமித் ஷா சொல்கிறார். நான் நினைக்கிறேன் அமித் ஷா மறைமுகமாக மோடியை சொல்கிறாரோ என்று நினைக்கிறேன். அமித் ஷாதான் பிரதமர் ஆவார் பாஜக வென்றால் என்று அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லவும் இதுதான் காரணம்.
75 வயது கடந்த பின் மோடி ஓய்வு பெற வேண்டும் என்று விதி இருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் போட்ட இந்த குண்டு காரணமாக மோடி பிரதமர் ஆனால் அடுத்த வருடம் அவர் பதவி விலக வேண்டிய கட்டாயம் வரும். இல்லையென்றால் வயதை காரணம் காட்டி ஓரம்கட்டப்பட்ட அத்வானி. முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்களின் ஆதரவாளர்கள் கொதிப்பார்கள்.
இதனால்தான் மோடியை தோல்வி அடைய செய்ய பாஜக உள்ளேயே உள்ளடி வேலை நடப்பதாக நினைக்கிறேன். மோடிக்கு தப்பு தப்பாக எழுதி கொடுக்கிறார்கள். மோடிக்கு எதிராக.. மோடி கிண்டல் செய்யப்பட வேண்டும் என்றே இப்படி எல்லாம் எழுதிக்கொடுக்கிறார்கள்
அதை வைத்து இப்படி சொல்கிறார்கள். மோடி ஒரு அதிசய பிறவி. அவர் ஏன் தேர்தலில் நிற்க வேண்டும். ஒடிசா கோவில் சாவி காணவில்லை என்கிறார். அவர்தான் கடவுள் ஆச்சே.. அவர் கடவுள்தானே.. ஏன் அவரே சாவியை கண்டுபிடிக்க கூடாது., என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications