Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை மேட்சில் இந்தியா வென்றதற்கு.. மோடிக்கு நன்றி சொன்ன தமிழிசை.. புரியலையே.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை அணிக்கு எதிராக நேற்று நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதற்கு பிரதமர் மோடிக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இந்தியா வென்றது. அடுத்து ஆப்கானிஸ்தான் அதை தொடர்ந்து பாகிஸ்தான் கடைசியாக வங்கதேசம் என்று அடுத்தடுத்து வரிசையாக 4 போட்டிகளை இந்தியா வென்றது.

Why is Tamilisai Soundararajan thanks PM Modi for team India winning the World Cup Match against Sri Lanka?

அதன்பின் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் இந்திய வென்றுள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக நடந்தது. இன்று இலங்கை அணிக்கு எதிராகவும் இந்தியா வென்றது. இதன் மூலம் 6 போட்டிகளில் வரிசையாக இந்திய அணி வென்றுள்ளது. இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத ஒரே அணி இந்திய அணிதான்.

இலங்கை வெற்றி: நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியிலும் இந்தியா எளிதாக வென்றது. நேற்று முக்கியமாக கில் அதிரடியாக ஆடி தொடக்கத்தில் இருந்தே 92 பந்தில் 92 ரன்கள் எடுத்தார். 11 பவுண்டரிகளை அடித்து இலங்கை பவுலர்களை இவர் திணறடித்தார் . அதேபோல் 2 சிக்ஸர்களை அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால் தேவையில்லாமல் அப்பர் கட் அடிக்க முயன்று தில்ஷன் பந்தில் அவுட் ஆனார்.

இன்னொரு பக்கம் கோலி அதிரடியாக ஆடி இதேபோல் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 94 பந்துகள் பிடித்த அவர் 88 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தில்ஷன் பந்தில் இவரும் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அதன்பின் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயரும் 82 ரன்கள் வரை அதிரடியாக ஆடினார். இந்த சீசனில் தொடக்கத்தில் இருந்து சரியாக ஆடாத ஷ்ரேயாஸ் ஐயர் இன்று போட்டியில் பார்மிற்கு திரும்பினார் . 56 பந்தில் 82 ரன்கள் எடுத்தார். முக்கியமாக இன்று ஷார்ட் பந்துகளில் அதிரடியாக ஆடினார். இன்னொரு பக்கம் ஜடேஜா 24 பந்தில் 35 ரன்கள் எடுத்து கடைசி வரை நின்றார். இதனால் 300 ரன்கள் எடுக்க வேண்டிய இந்திய அணி 357-8 ரன்கள் எடுத்தது.

இலங்கை தோல்வி: இதன்பின் இலங்கை அணி வந்த வேகத்தில் விக்கெட்டுகளை வரிசையாக இழந்தது. தொடக்க வீரர்கள் பதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, அடுத்தடுத்து டக் அவுட் ஆனார்கள். பும்ரா, சிராஜ் ஓவர்களில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

அதன்பின் சதீர சமரவிக்ரம, மீண்டும் டக் அவுட் ஆக, குசல் மெண்டிஸ் 1 ரன்னுக்கு அவுட் ஆனார். அதை தொடர்ந்து சரித் அசலங்காவும் டக் அவுட் ஆனார். டாப் ஆர்டரில் 5 பேரில் 3 பேரின் விக்கெட்டை சிராஜ்தான் எடுத்தார். அவரின் விக்கெட் பவுலிங் காரணமாகவே இந்திய அணியின் வெற்றி உறுதி ஆனது. ஆனால் அதன்பின் சிராஜ் மட்டுமின்றி ஷமியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வரிசையாக எடுத்தார்.

கடந்த 2 போட்டிகளில் 5 விக்கெட் ஹவுல் 1 , 4 விக்கெட் ஹவுல் 1 எடுத்தவர் இன்று மீண்டும் 5 விக்கெட் எடுத்து அசத்தினார். இதனால் இலங்கை அணி 55 ரன்களுக்கு சுருண்டு அவுட் ஆனது. இலங்கை அணிக்கு எதிராக நேற்று நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதற்கு பிரதமர் மோடிக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

மோடிக்கு நன்றி: இது தொடர்பாக அவர் செய்துள்ள போஸ்டில், இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற #டீம் இந்தியாவுக்கு வாழ்த்துகள். இது அற்புதமான வெற்றி. அதேபோல் தனது தொலைநோக்கு பார்வையின் மூலம் இந்த நாட்டின் விளையாட்டு துறைக்கு 9 ஆண்டுகளாக சேவை ஆற்றி வரும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசு இந்த வெற்றி .. நமது கிரிக்கெட் அணியால் தேசம் பெருமை கொள்கிறது என்று தமிழிசை கூறியுள்ளார்.

பிரதமர் மோடி விளையாட்டு துறைக்கு கொடுக்கும் சேவைக்கு வழங்கப்பட்ட பரிசுதான் நேற்றைய வெற்றி என்று தமிழிசை கூறி இருப்பது இணையத்தில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+