Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மன்னாரில் 48 மணி நேரம் குத்த வச்சு உட்கார்ந்திருக்கும் புரேவி.. என்ன காரணம்?.. வெதர்மேன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புரேவி காற்றழுத்த தாழ்வு மண்டலத்திலிருந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய பிறகும் எந்த இடத்திலும் நகராமல் மன்னார் வளைகுடாவிலேயே காணப்படுவது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.

நிவர் புயலுக்கு பிறகு ஒரே வாரத்தில் வங்கக் கடலில் புரேவி புயல் உருவானது. இது இலங்கையின் திருகோணமலை- பருத்தித்துறை அருகே கடந்த சில தினங்களுக்கு முன் கரையை கடந்தது.

இந்த நிலையில் இது மெல்ல மன்னார் வளைகுடா பகுதிக்குள் நகர்ந்து அங்கு ஒரு நாள் தங்கும் என்றும் பின்னர் அது குமரி- பாம்பன் இடையே பாம்பன் அருகே கரையை கடக்கும் என்றும் சொல்லப்பட்டது.

மழை

மழை

ஆனால் இந்த புரேவி கடந்த வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. எனினும் காற்று குறைவாக வீசும் என்றும் மழை பொழிவு இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி தென் தமிழகத்தில் நல்ல மழையை கொடுத்தது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

இந்த நிலையில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்திலிருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் நேற்றைய தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. ஒரு காற்றழுத்தம் தொடர்ந்து 48 மணி நேரம் நகராமல் குத்த வச்சு இருப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு பகுதி

கிழக்கு பகுதி

இதுகுறித்து பிரதீப் ஜான் தனது வலைப்பக்கத்தில் கூறுகையில் காற்றழுத்தம் இரு உயர் அழுத்த பகுதிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டது. இதனால் இரு பகுதிகளிலும் நகர்வதற்கு கிரிப் இல்லாத நிலை உள்ளது. அதனால்தான் அது ஒரே இடத்தில் தங்கியுள்ளது. ஆனால் இன்றைய தினம் அது கிழக்கு பகுதி காற்றால் நகர்த்தப்படும்.

பருவமழை

பருவமழை

48 மணி நேரமாக ஒரு புயல் ஒரே இடத்தில் இருப்பதை என் அனுபவத்தில் இப்போதுதான் சந்திக்கிறேன். பொதுவாக தென் மேற்கு பருவமழை சீசனின் போது குஜராத்தில்தான் இது போன்ற நிலை ஏற்படும். ஆனால் வடகிழக்குப் பருவமழையில் இதுதான் முதல் முறையாக பார்க்கிறோம். புரேவியின் இறுதி நிலை இதுதான். இன்று மதியம் வலுவிழந்து நகர்ந்து விடும்.

10 நாட்கள் மழை இருக்காது

10 நாட்கள் மழை இருக்காது

இதனால் ஏற்படும் ஒரு வித இழுப்பு திறனாலோ அல்லது கிழக்கு காற்றாலோ வரும் டிசம்பர் 8-ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும். அதன் பிறகு மழை படிப்படியாக குறையும். பின்னர் 9 அல்லது 10 நாட்கள் மழை இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+