மன்னாரில் 48 மணி நேரம் குத்த வச்சு உட்கார்ந்திருக்கும் புரேவி.. என்ன காரணம்?.. வெதர்மேன் விளக்கம்
சென்னை: புரேவி காற்றழுத்த தாழ்வு மண்டலத்திலிருந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய பிறகும் எந்த இடத்திலும் நகராமல் மன்னார் வளைகுடாவிலேயே காணப்படுவது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.
நிவர் புயலுக்கு பிறகு ஒரே வாரத்தில் வங்கக் கடலில் புரேவி புயல் உருவானது. இது இலங்கையின் திருகோணமலை- பருத்தித்துறை அருகே கடந்த சில தினங்களுக்கு முன் கரையை கடந்தது.
இந்த நிலையில் இது மெல்ல மன்னார் வளைகுடா பகுதிக்குள் நகர்ந்து அங்கு ஒரு நாள் தங்கும் என்றும் பின்னர் அது குமரி- பாம்பன் இடையே பாம்பன் அருகே கரையை கடக்கும் என்றும் சொல்லப்பட்டது.

மழை
ஆனால் இந்த புரேவி கடந்த வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. எனினும் காற்று குறைவாக வீசும் என்றும் மழை பொழிவு இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி தென் தமிழகத்தில் நல்ல மழையை கொடுத்தது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இந்த நிலையில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்திலிருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் நேற்றைய தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. ஒரு காற்றழுத்தம் தொடர்ந்து 48 மணி நேரம் நகராமல் குத்த வச்சு இருப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு பகுதி
இதுகுறித்து பிரதீப் ஜான் தனது வலைப்பக்கத்தில் கூறுகையில் காற்றழுத்தம் இரு உயர் அழுத்த பகுதிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டது. இதனால் இரு பகுதிகளிலும் நகர்வதற்கு கிரிப் இல்லாத நிலை உள்ளது. அதனால்தான் அது ஒரே இடத்தில் தங்கியுள்ளது. ஆனால் இன்றைய தினம் அது கிழக்கு பகுதி காற்றால் நகர்த்தப்படும்.

பருவமழை
48 மணி நேரமாக ஒரு புயல் ஒரே இடத்தில் இருப்பதை என் அனுபவத்தில் இப்போதுதான் சந்திக்கிறேன். பொதுவாக தென் மேற்கு பருவமழை சீசனின் போது குஜராத்தில்தான் இது போன்ற நிலை ஏற்படும். ஆனால் வடகிழக்குப் பருவமழையில் இதுதான் முதல் முறையாக பார்க்கிறோம். புரேவியின் இறுதி நிலை இதுதான். இன்று மதியம் வலுவிழந்து நகர்ந்து விடும்.

10 நாட்கள் மழை இருக்காது
இதனால் ஏற்படும் ஒரு வித இழுப்பு திறனாலோ அல்லது கிழக்கு காற்றாலோ வரும் டிசம்பர் 8-ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும். அதன் பிறகு மழை படிப்படியாக குறையும். பின்னர் 9 அல்லது 10 நாட்கள் மழை இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்தார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications