Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னைக்குள் நுழையும் போதே.. பற்றிக்கொண்ட பரபரப்பு! எல்லா என்ட்ரன்ஸிலும் திக்.. திணறிய வாகன ஓட்டிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னைக்குள் வெளியூரில் இருந்து மக்கள் வாகனம் மூலமாக அதிகாலையில் நுழைவது மிகவும் கடினமான விஷயமாக மாறி உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம். தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

இந்த நிலையில் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Why it become very difficult to ride the vehicle early in the morning at Chennai?

நாளை மறுநாள், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர். திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிய இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

( ஆக்டிவ் நவம்பர்! தமிழ்நாட்டிற்கு சூப்பர் நாள்! இங்கெல்லாம் ஹாட் ஸ்பாட்! தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங்)

வானிலை அறிவிப்பு: வரும் 9ம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர்.. திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரி இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. என்று மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் 10ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர். திருப்பூர். தேனி, திண்டுக்கல், விதுைநகர், மதுரை. தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அடுத்த வாரம் முழுக்க தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பனி பொழிவு: இந்த நிலையில்தான் சென்னைக்குள் வெளியூரில் இருந்து மக்கள் வாகனம் மூலமாக அதிகாலையில் நுழைவது மிகவும் கடினமான விஷயமாக மாறி உள்ளது. அதிகாலையில் சென்னையில் கடுமையாக பனிப்பொழிவு நிலவி வருகிறது. இரவில் மழை, காலையில் மழை பெய்கிறது.. ஆனால் அதிகாலையில் கடுமையான பனிபொழிவு ஏற்படுகிறது.

Why it become very difficult to ride the vehicle early in the morning at Chennai?

இதனால் சென்னையின் நுழைவாயில் அனைத்திலும் மக்கள் வாகனங்களை ஓட்டுவது மிகவும் கடுமையாகி உள்ளது. முக்கியமாக சென்னை ஈசிஆர் பகுதி, ஓஎம்ஆர் பகுதி, செங்கல்பட்டு - சென்னை சாலை ரூட், பூந்தமல்லி ரூட்டில் கூட கடுமையான பனிப்பொழிவு ஏற்படுகிறது.

இதனால் சென்னைக்குள் வெளியூரில் இருந்து மக்கள் வாகனம் மூலமாக அதிகாலையில் நுழைவது மிகவும் கடினமான விஷயமாக மாறி உள்ளது. எங்கே வாகன விபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற திக் திக் அச்சத்தில் மக்கள் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+