Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடு ராத்திரியில்.. இழுத்துட்டு போனது எல்லாம் வேஸ்ட்டா? "ஜெ"க்கு செக் வைக்கும் இபிஎஸ்.. பதவி போச்சா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடக்க உள்ள நிலையில், கட்சி நிர்வாகிகள் இடையே இது பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமான பதவி ஒன்றை பெற போவது யார் என்ற விவாதம் கட்சிக்குள் மேலோங்கி உள்ளது.

அதிமுக சார்பாக ராஜ்ய சபா எம்பி தேர்தலில் போட்டியிட போகும் வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு, அவர்கள் வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டனர். எதிர்பார்த்தபடியே முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வாய்ப்பு பெற்றுள்ளார்.

முதுகளத்தூர் சேர்மேன் தருமருக்கு யாரும் எதிர்பார்க்காத நிலையில் எம்பி ஆகும் யோகம் அடித்துள்ளது. ஆனால் இந்த லிஸ்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜெயக்குமாருக்கு பதவி கிடைக்கவில்லை.

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

அதிமுகவில் ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர், மூத்த தலைவர் என்ற முறையில் எம்பி பதவியை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் இவர் சிறைக்கு எல்லாம் சென்றுவிட்டார். இரவோடு இரவாக தமிழ்நாடு போலீசார் இவரை கைதும் செய்தனர். திமுக நிர்வாகியை சாலையில் அரை நிர்வாணமாக அழைத்து சென்ற காரணத்தால் இவரை போலீசார் கைது செய்தனர். கட்சிக்காக சிறைக்கு சென்றதால் இவருக்கு எம்பி பதவி கிடைக்கும் என்று கூறப்பட்டது.

 செய்தியாளர்

செய்தியாளர்

கட்சி கொள்கைகளை வெளியிட தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்கிறார். சசிகலாவை எதிர்க்கிறார் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இவருக்கு எம்பி பதவி வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் ஜெயக்குமாருக்கு எம்பி பதவி வழங்கப்படவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. அதன்படி ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் உள்ளன. அவருக்கு லோக்சபா எம்பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்து.. அப்பா ஜெயக்குமாருக்கும் ராஜ்ய சபா எம்பி தேர்தலில் வாய்ப்பு தருவது சரியாக இருக்காது.

ஜெயக்குமார் வாய்ப்பு மறுப்பு

ஜெயக்குமார் வாய்ப்பு மறுப்பு

இதை காரணம் காட்டித்தான் ஜெயக்குமாருக்கு ராஜ்ய சபா எம்பி வாய்ப்பு மறுக்கப்பட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் ஜெயக்குமாரை கூல் செய்யும் விதமாக அவருக்கு கட்சி ரீதியாக முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது. அதாவது கட்சி ரீதியாக அவைத்தலைவர் பதவி ஜெயக்குமாருக்கு வழங்கப்படலாம் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் அந்த பதவியும் தற்போது வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று ரத்தத்தின் ரத்தங்கள் தகவல் தெரிவிக்கிறார்கள்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ந் தேதி சென்னையில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இதில் அவைத்தலைவர் பதவியும் இறுதி செய்யப்படும். தற்போது தமிழ் மகன் உசைன் இந்த பதவியில் தற்காலிக தலைவராக இருக்கிறார்.

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

ஜெயக்குமார் இந்த பதவியை பெற முயல்வார் என்று அதிமுக வட்டாரத்தில் கூறப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த பதவியையும், ஜெயக்குமாருக்கு வழங்க மாட்டார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ் மகன் உசைனை அந்த பதவியில் நிரந்தரமாக நியமிக்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஜெயக்குமாருக்கு எம்பி சீட் இல்லை என்று கட்சியில் பெரிய பதவி கொடுத்தால்.. எம்பி வாய்ப்பு கிடைக்காத மற்ற சீனியர்களும் கட்சியில் முக்கிய பதவி கேட்பார்கள் என்று அதிமுக இரட்டை தலைமை இந்த முடிவை எடுக்கும் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+