சம உரிமை தந்தவர்.. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கருணாநிதி பெயர் ஏன்.. காரணம் சொன்ன முதல்வர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தது கலைஞர் அரசு. மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்பது பெண் இனத்துக்கு திராவிட இயக்கம் வழங்கிய மாபெரும் அதிகாரக் கொடை என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்துவது குறித்து இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

Why Karunanithi name for Magalir urimai thogai Thitam says CM Stalin

மாவட்ட ஆட்சித்தலைவர்கள், அதிகாரிகள் மத்தியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு வரலாற்றில் இவ்வளவு பெரிய திட்டம் இதுவரை உருவாக்கப்பட்டது இல்லை. மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ரூ.7,000 கோடி தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. நீதிக்கட்சி காலம் தொடங்கி தற்போது வரை சமூகநீதியானது தமிழ்நாட்டை வழிநடத்தும் கோட்பாடாக உள்ளது.

கலைஞர் ஆட்சியில் பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பெண்களுக்கு சொத்துரிமை வழங்கி அதை சட்டமாகவும் இயற்றியது கலைஞர் அரசின் சாதனை என்று கூறியுள்ளார். நாட்டிலேயே முதல்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை கலைஞர் அரசு அமல்படுத்தியது. தொடக்க காலத்தில் இருந்தே தாய்வழிச் சமூக முறைதான் மனிதகுலத்தை வழிநடத்தி வந்திருக்கிறது.

மதம், பழமையான மரபுகளின் பெயரால் பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டிருந்தனர். பெண்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தது கலைஞர் அரசு. மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை 1989-ல் ஆட்சிக்கு வந்த கலைஞர் சட்டமாக்கினார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்பது பெண் இனத்துக்கு திராவிட இயக்கம் வழங்கிய மாபெரும் அதிகாரக் கொடை என்று அவர் கூறியுள்ளார்.

பெண்களின் உயர்கல்விக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. 1973-ல் ஆண்கள் மட்டுமே பங்கெடுத்து வந்த காவல்துறையில் பெண்களுக்கும் பணி பொறுப்புகள் வழங்கப்பட்டன. சமூகநீதி திட்டங்களிலேயே மாபெரும் திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+