காரணமே வேற.. எடப்பாடி,ஓபிஎஸை மோடி சந்திக்காதது ஏன்? அமித்ஷா மீட்டிங் - அண்ணாமலை ரைட் ஹேண்ட் விளக்கம்
சென்னை: நேற்று சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட அரசு நிகழ்ச்சிகளிலும், விமான நிலையத்தில் அவரை வரவேற்கும் நிகழ்விலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இல்லாததை சுட்டிக்காட்டி பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பி வரும் நிலையில் இது குறித்து பாஜக மாநில நிர்வாகி செல்வகுமார் ட்விட்டரில் விளக்கம் கொடுத்து உள்ளார்.
நேற்று 2 நாள் சுற்றுப்பயணமாக தென்மாநிலங்களுக்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்றார். ஆனால், அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் பிரதமரை முறைப்பட வரவேற்க வருகை தராமல் புறக்கணித்தார். அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வருகை தந்தார்.

சென்னையில் மோடி: சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி, அமைச்சர்கள் ஆகியோர் அரசு முறை வரவேற்பு கொடுத்தனர். ஆனால், அப்போது தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லை. அதன் பின்னர் சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம், சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வுகளிலும் அண்ணாமலையை காண முடியவில்லை.
அதை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் அமைந்து இருக்கும் விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125 வது ஆண்டு விழாவில் மோடி பங்கேற்றபோதும், அதை தொடர்ந்து சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற புதிய ரயில் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்வுகளிலும் அண்ணாமலையை காண முடியவில்லை. பெரும்பாலான நிகழ்வுகளில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் போன்றோரே உடன் இருந்தார்கள்.
அண்ணாமலை எங்கே?: இந்த நிலையில் அதிமுகவுடனான கூட்டணி மோதல், தமிழ்நாடு பாஜகவிற்குள் வெடித்து இருக்கும் உட்கட்சி பூசல், முக்கிய நிர்வாகிகளின் விலகல், மாநில தலைமை மீது தேசிய தலைமைக்கு செல்லும் அடுக்கடுக்கான புகார்கள் போன்றவற்றால் அண்ணாமலை மீது டெல்லி தலைமை அதிருப்தியில் இருப்பதாகவும், இதனாலேயே அண்ணாமலை பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளவில்லை என்று விமர்சனங்கள் வந்தன.

அதேபோல், கூட்டணி கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமரை தனித்தனியாக சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கும் பல்வேறு காரணங்களை பல்வேறு தரப்பினர் தெரிவித்து வந்தனர். குறிப்பாக அதிமுக உட்கட்சி பூசலில் நேரடியாக தான் தலையிடுவதைபோல் இருக்கும் என்பதால் பிரதமர் நரேந்திர மோடி இந்த சந்திப்பை தவிர்த்ததாக கூறப்பட்டது.
காரணமே வேற: இந்த நிலையில் இது குறித்து பாஜக தொழிற்பிரிவு துணைத் தலைவரும், அண்ணாமலைக்கு நெருக்கமானவருமான செல்வகுமார் ட்விட்டரில் விளக்கமளித்து உள்ளார். அதில், "கர்நாடகா தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை முடிவு செய்யும் பணியில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள், மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுடன் டெல்லியில் அண்ணாமலையார் இருப்பதால், இன்று சென்னை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை பாஜக சார்பில் வழிநடத்த வேண்டிய மாநில தலைவர் இங்கு இல்லாததால் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பை ரத்து செய்துள்ளார் பாரத பிரதமர்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
இது திமுக கோட்டை.. அதிமுகவுக்கு ஒத்துவராது.. சென்னையை கூட்டணி கட்சியிடம் தாரைவார்க்க தயாரான எடப்பாடி -
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு! -
2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க! -
2021ல் திமுக vs அதிமுக.. வாக்கு வித்தியாசம் வெறும் 5.7% தான்.. கேம்சேஞ்சரான நாதக, அமமுக, கமல்ஹாசன்! -
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு! -
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சிக்கல்.. ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் சம்மன் -
தமிழக தேர்தல் வரலாறு: ‘ஜெ’ அணியா? ‘ஜா’ அணியா? - செங்குத்தாக உடைந்த அதிமுக.. அன்று நடந்தது என்ன? -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
இதுவரை 4 முறை டெல்லிக்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிமுக பாணியையே மாற்றிய பாஜக! -
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
தமிழ்நாடு, புதுச்சேரியில்.. தேர்தல் ரிசல்டை தீர்மானிக்க போகும் 5 மேஜர் விஷயங்கள்! இதுதான் பிரச்சனையே












Click it and Unblock the Notifications