Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னப்பா இவர் நம்ம ஆட்களையே பழி வாங்குகிறார்! எடப்பாடி செயலால் கொதித்த முக்குலத்தோர்.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி முக்குலத்தோர் பிரிவினரை சேர்ந்த தலைவர்களை முதுகில் குத்திவிட்டார். 2011க்கு முன் எடப்பாடி யாரும் இல்லை. அவர் எம்எல்ஏவாக இருந்தாலும் பெரிய ஆள் இல்லை, என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

Why Mukkulathor caste people are angry with Edappadi Palanisamy during Guru Pooja?

நேற்று தேவர் குருபூஜையில், எடப்பாடி மரியாதை செலுத்தும் போதே.. அவருக்கு எதிராக கடுமையான கோஷம் எழுப்பப்பட்டது. எடப்பாடி ஒழிக.. இபிஎஸ் ஒழிக என்று கோஷம் எழுப்பப்பட்டது .

கட்சி தொண்டர்கள் வேனை சூழ்ந்து பலத்த பாதுகாப்பு கொடுத்தும் கூட அங்கே பரபரப்பான சூழ்நிலை நிலவியது. தொண்டர்கள் ஒரு பக்கம் உற்சாக வரவேற்பு அளித்தாலும் கூட எடப்பாடி ஒழிக என்று கோஷம் எழுப்பப்பட்டது. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் சிரித்தபடி எடப்பாடி சென்றார். பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய?அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கார் அபிராமத்தில் மறிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரின் கார் மீது கற்களும் வீசியதாக தகவல்கள் வருகின்றன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பேட்டி; இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமி முக்குலத்தோர் பிரிவினரை சேர்ந்த தலைவர்களை முதுகில் குத்திவிட்டார். 2011க்கு முன் எடப்பாடி யாரும் இல்லை. அவர் எம்எல்ஏவாக இருந்தாலும் பெரிய ஆள் இல்லை. 2011ல் அமைச்சர் ஆன பின்தான் அவர் கட்சியில் முன்னிலைக்கு வருகிறார். அதன்பின் சசிகலா சிறைக்கு செல்லும் போது எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆகிறார். அவர் அப்போதும் பாப்புலர் லீடர் இல்லை. அதன்பின் தினகரன் மூலம் ஆட்சி நடத்தினார்.

அதன்பின் பாஜக , ஓ பன்னீர்செல்வம் உதவியோடு ஆட்சி செய்தார். அவர் தனக்கு உதவி செய்த சசிகலாவை கவிழ்த்தார். அதன்பின் தினகரனை ஏமாற்றினார். அதன்பின் ஓ பன்னீர்செல்வத்தை ஏமாற்றினார். இப்போது பாஜகவுடன் கூட்டணியை முறித்துவிட்டார். இப்படி முக்குலத்தோர் பிரிவை சேர்ந்தவர்களை எடப்பாடி ஏமாற்றி விட்டார் . என்னடா இவர் நம்ப ஆட்களையே பழி வாங்குகிறார்.. நாம் கட்சிக்காக உழைத்தோம். நம்ம ஆட்கள் கட்சிக்காக உழைத்தனர்.

ஆனால் இவர் என்ன இப்படி நம்ம ஆட்களையே போட்டு தாக்குகிறார். நம்ம ஆட்களையே பழிவாங்குகிறார். இவர் ஏன் இப்படி செய்கிறார். சரியில்லையே. முக்குலத்தோரை பார்த்து பார்த்து ஏமாற்றுகிறார். நம்ம இந்த கட்சிக்காக உழைத்தோம். அப்படி இருக்க நம்ம ஆட்களை ஏன் பழி வாங்குகிறார். வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டை கூட அவர் கொடுத்து முக்குலத்தோர் ஒதுக்கீட்டை கூட குறைத்துவிட்டாரே.

கொடுமையிலும் கொடுமை: என்ன கொடுமை இது. இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இவர் ஏன் கட்சிக்கு தலைவராக இருக்கிறார். ஒரு தலைவராக வரும் நபர் இதை எல்லாம் யோசிக்க வேண்டாமா? ஆரியம் திராவிடம் என்றால் என்ன என்று கூட தெரியவில்லையே. அவர் கட்சியில் திராவிடம் என்ற பெயர் உள்ளது. அப்போது கூட அதை பற்றி தெரியாது என்றால் என்ன அர்த்தம். ஆளுநரை எதிர்க்க தைரியம் இல்லை. அதனால் இப்படி எல்லாம் பேசுகிறார். கூட்டணியை விட்டு பிரிந்தும் கூட அவருக்கு தைரியம் இல்லை.

Why Mukkulathor caste people are angry with Edappadi Palanisamy during Guru Pooja?

உண்மையிலேயே அவருக்கு திராவிடம் பற்றி தெரியாது என்றால் அவர் அதிமுகவில் இருக்கவேகூடாது . அதிமுகவின் மேல் பொறுப்பில் இருக்க கூடாது . ஆரியம் திராவிடம் பற்றி எல்லாம் அவர் இனிதான் படித்துவிட்டு பேச போகிறாரா? அது எல்லாம் படித்துவிட்டு பேச வேண்டிய விஷயமா என்ன? இதுவரை தெரியாதவருக்கு இனிதான் தெரிய போகிறதா? அவருக்கு ஆளுநரை எதிர்க்க தைரியம் இல்லை. அதனால் இப்படி எல்லாம் பேசுகிறார். கூட்டணியை விட்டு பிரிந்தும் கூட அவருக்கு தைரியம் இல்லை, என்று பிரியன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+