"தலைவருக்கு" அழகா இது.. மத்தவங்க தலையில் கட்டிட்டு போகலாமா..சமகவை நோக்கிப் பாயும் கணைகள்!

சரத்குமார் ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது தெரியவில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கட்சியை ஆரம்பிச்சிட்டு தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதெல்லாம் தலைமை பதவிக்கு அழகா என்ற கேள்வி கணைகள் சமகவை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கின்றன..!

அதிமுக கூட்டணியில் இருந்த சிறு கட்சிகள் எல்லாம் சிதறி விட்டன.. கருணாஸ், தமீம் அன்சாரி போலதான் சமக சரத்குமாரும்.. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டாலும், குறிப்பிட்ட அளவிலான சீட்டுகளை வேண்டும் என்பதில் ஆரம்பத்தில் இருந்தே பிடிவாதம் காட்ட தொடங்கிவிட்டனர்.

எங்களை மதிச்சு வந்து, சீட் தந்தால் கூட்டணிக்கு ஓகே.. அதைவிட்டுட்டு ஒரு சீட், 2 சீட் தந்தால் ஏற்க மாட்டோம்.. எங்கள் பலத்தை அறிந்து சீட் தர வேண்டும்.. நாங்கள் கூட்டணி அமைத்து போட்டியிடவேதான் எங்கள் தனித்தன்மை வெளியே தெரியாமல் போய்விட்டது" என்றெல்லாம் சரத்குமார் பேச ஆரம்பித்தார்.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஆனால், இதை அதிமுக கொஞ்சமும் காதில் வாங்கவில்லை.. இதற்கு பிறகுதான் அதிமுகவுக்கு ஷாக் தந்தால், சீட் விஷயத்தில் தாராளம் காட்டப்படும் என்று கணக்கு போட்டு, திடீரென சசிகலாவை போய் சந்தித்தார்.. இதையும் அதிமுக கண்டுகொள்ளவே இல்லை. இதற்கு பிறகு வேறு வழியில்லாமல் கமலை போய் சந்தித்து கூட்டணி வைத்தார்.. 40 சீட் ஒதுக்கீடு என்றார்கள்.. பிறகு 37 சீட் ஓகே ஆகி உள்ளது..

 அதிமுக

அதிமுக

இப்போது விஷயம் என்னவென்றால், கூட்டணி மற்றும் சீட் விஷயத்தில் அதிமுகவில் இவ்வளவு கெடுபிடிகள், காட்டிய நிலையில், இந்த முறை தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று சரத்குமார் சொல்லி உள்ளதுதான்.. இவரும் போட்டியிடவில்லையாம்.. ராதிகாவும் போட்டியிடவில்லையாம். இதற்கு இவர்கள் சொல்லும் காரணம், தேர்தலில் பிரச்சாரம் செய்ய வேண்டி உள்ளது என்கிறார்கள்.

 சரத்குமார்

சரத்குமார்

இந்த முறை தேர்தலில் போட்டியிடும் எடப்பாடி பழனிசாமி முதல் சரத்குமார் சார்ந்துள்ள கமல் வரை எல்லாருமே தேர்தலில் நேரடியாக போட்டியிடுகிறார்கள்.. அவரவர்கள் தங்களுக்கு தாங்களே பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.. அதிலும் கமல், தன் கட்சி வேட்பாளர்களுக்கும் சேர்த்து பிரச்சாரம் செய்து வருகிறார்.. கடந்த எம்பி தேர்தலின்போது கமல் போட்டியிடாதது பெரும் சலசலப்பையும் விவாதத்தையும் கிளப்பி வந்தது.

 வேட்பாளர்கள்

வேட்பாளர்கள்

ஒரு கட்சி தலைவரே தேர்தலில் போட்டியிடாதது, மற்ற வேட்பாளர்களுக்கு எப்படி நம்பிக்கை தரும்? முன்மாதிரியாக வந்து களத்தில் குதிக்க வேண்டாமா? என்ற கேள்விகளும் அன்றைய நாட்களில் எழவே செய்தன. இதற்கு முன்பு சரத்குமாரும் தேர்தலை சந்தித்துள்ளார்.. வெற்றி பெற்றுள்ளார்.. ஆனால், இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல்.. இதில் தோல்வி அடைந்தால் மீண்டும் அரசியலில் தலைதூக்குவது என்பது கடினமான சூழல் நிலவுகிறது..

 தயக்கம்

தயக்கம்

கட்சி தலைவரே போட்டியிட தயக்கம் காட்டுவது ஏன் என்ற கேள்விகளும் எழுகின்றன. இவருக்கு வேறு ஏதாவது காரணம் இருந்தாலும் ராதிகா ஏன் போட்டியிடவில்லை? அரசியலில் ஈடுபடுவதற்காகத்தானே டிவி சீரியலுக்கு முழுக்கு போட்டார்? தேர்தலை சந்திக்காத நிலையில், டிவியை ஏன் விட்டுவிட்டு வந்தார்? என்ற சந்தேகங்களும் வருகின்றன.

தொகுதி

தொகுதி

சின்னம் பிரச்சனை, வேட்பாளர்கள் தாங்கள் நிற்கின்ற தொகுதிகளில் புதிய வங்கி கணக்கு தொடங்க முடியாமல் வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடியாமல் உள்ள பிரச்சனை போன்ற பல பிரச்சனைகள் சமகவை சூழ்ந்துள்ளன.. கூட்டணியில் இருக்கும்போதே இவ்வளவு பிரச்சனைகள் என்றால், தனித்து போட்டி என்ற முடிவை சொன்னதுபோலவே சமக எடுத்திருந்தால் என்னாகி இருக்கும்? ஒருவேளை அதிமுக கூட்டணியில் 2 சீட் ஒதுக்கியிருந்தாலும், சரத்குமாரும் ராதிகாவும் போட்டியிடாமல் இருந்திருப்பார்களா? அதுவும் தெரியவில்லை.. அந்த 37 பேரும் வெற்றி பெற்று வந்தால் சரி..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+