புலி பதுங்கியது பாயத்தானோ?.. சசிகலா பேசியதாக வெளியான ஆடியோவின் பின்னணி என்ன?
சென்னை: மீண்டும் வருவேன் தைரியமாக இருங்கள் என சசிகலா கூறியதாக வெளியான ஆடியோவால் பரபரப்பாகி வரும் நிலையில் நிச்சயம் அவர் அதிமுகவை மீட்டெடுக்க ஆயத்தமாகி வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து ரிலீஸான சசிகலா சென்னைக்கு வரும் போது அதிமுக கொடி கட்டிய காரில் வந்தார். பின்னர் அவர் வேனில் இருந்தபடியே இனி முழு நேர அரசியலில் ஈடுபடுவேன் என சூளுரைத்தார்.
இதனால் தேர்தலுக்கு முன்பு அதிமுகவில் சசிகலாவால் பெரிய சலசலப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அவரது வருகையால் தேர்தல் முடிவுகளில் தாக்கம் ஏற்படும் என்றெல்லாம் பேசப்பட்டது.

அறிக்கை
ஆனால் திடீரென ஒரு நாள் இரவு சசிகலா ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் அரசியலில் இருந்து தற்போது ஒதுங்குகிறேன். அதிமுக வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என கூறியிருந்தார். இதிலிருந்தே புலி பதுங்குவதே பாய்வதற்கு என தெரிந்தது.

சசிகலா
தேர்தலில் அதிமுக ஜெயித்தால் சசிகலா கட்சியில் தலையிட மாட்டார் என்றும் ஒரு வேளை அக்கட்சி தோற்றால் நிச்சயம் அதிமுகவை கைப்பற்ற திட்டமிடுவார் என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் சசிகலா கட்சி தொண்டரிடம் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியானது.

தைரியம்
அதில் அவர் நான் நிச்சயம் வருவேன். தைரியமாக இருங்கள். கட்சியை சரி செய்து கொள்ளலாம். அனைவரும் கவனமாக இருங்கள் என சசிகலா கூறியது போல் ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது. இது உண்மையில் சசிகலா பேசியதுதானா, அவ்வாறெனில் திடீரென அந்த ஆடியோவை வெளியிட்டது ஏன்?

கேள்வி
கட்சியை சரி செய்து கொள்ளலாம் என சசிகலா யாருக்கு சூசகமாக சொல்கிறார்? அரசியல் பார்வையாளர்கள் கூறியபடி அதிமுக தேர்தலில் தோற்க தான் ஒரு காரணமாக இருந்து விடக் கூடாது என அறிக்கை விடுவது போல் விட்டுவிட்டு தற்போது அதிமுக தோற்றவுடன் அவர் களத்திற்கு வருகிறாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

பேசியது சசிதானா
மேலும் இது சசிகலாவின் குரல்தானா, அவர் பேசியதுதானா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏற்கெனவே அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இடையே கருத்தொற்றுமை இல்லாமல் உள்ளது. எனவே கட்சி சிதறுவதற்குள் எப்படியாவது கைப்பற்றி அதை ஜெயலலிதா வைத்திருந்தது போல் ராணுவ கட்டுக்கோப்பாக வைத்திருக்க சசிகலா முயல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு










Click it and Unblock the Notifications