விறுவிறுவென ஆரம்பித்து திடீரென மந்தமாகிறதே வாக்குப்பதிவு.. என்ன நடக்கிறது தமிழகத்தில்?
Recommended Video
சென்னை: தமிழகத்தில் ஆரவாரத்தோடு ஆரம்பித்த ஓட்டுப் பதிவு திடீரென மந்தமாகியுள்ளது. இதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் காலை 7 மணிக்கு 38 லோக்சபா தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு ஆரம்பித்தது. ஆரம்பத்தில் மளமளவென வாக்குகள் பதிவாகின. நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து ஓட்டுக்களை பதிவு செய்தனர். பிரபலங்களான ப.சிதம்பரம், ரஜினிகாந்த், அஜித், விஜய் போன்றோர் முதல் ஒரு மணி நேரத்திற்குள்ளாக தங்கள் ஜனநாயக கடமையையாற்றினர்.

இதனாலோ என்னவோ மக்களும், முண்டியடித்து நீண்ட க்யூவில் நின்று வாக்குப்பதிவு செய்தனர். காலை 11 மணி நிலவரப்படி, தமிழகம் முழுக்க 30.62 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால், பகல் 1 மணி நிலவரப்படி, 39.49 சதவீத வாக்குகள்தான் பதிவாகின. திடீரென இப்படி வாக்குப்பதிவு மந்தமாக காரணம், சில உள்ளன.
முதலாவது காரணம், வெயில். கடும் கோடை வெயில் காரணமாக மதிய நேரத்தில் வாக்களிக்க வருவதை பெரும்பாலான மக்கள் தவிர்க்கிறார்கள். அவர்கள் காலையில் விரைந்து வாக்களிக்க வந்தனர். ஆனால் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறிய கணக்குப்படி பார்த்தால் கூட 305 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகின. கணக்கில் வராதது இன்னும் பல.
இதுமட்டுமின்றி, உள்ளூர்களில் வசிப்பவர்கள் வாக்களித்துவிட்ட நிலையில், வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்கள் சென்று வாக்களிக்க முயன்றவர்கள் பஸ்கள் கிடைக்காமல் திரும்பி போய்விட்டனர். அல்லது காலதாமதமாக சொந்த ஊர்களுக்கு வருகிறார்கள். அவர்களும் வாக்களிக்க ஆரம்பித்த பிறகுதான், இனிமேல் சுறுசுறுப்பை பார்க்க முடியும்.
ஆனால், பஸ்கள் கிடைக்காமலோ, வாக்குப்பதிவு இயந்திர கோளாறு சரி செய்யப்படாமலோ வாக்களிக்க முடியாமல் போகும் நிலை ஏற்பட்டால், வாக்குப்பதிவு எண்ணிக்கை குறையும். வாக்குப்பதிவு எண்ணிக்கை அதிகரித்தால், அதாவது சுமார் 80 சதவீதம் அளவுக்கு சென்றால், அது ஆளும் கட்சிக்கு சாதகமான அம்சம் இல்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். வாக்குப்பதிவு குறைந்து இருந்தால் மக்கள் மத்தியில் ஆட்சி மீது அதிருப்தி இல்லை என பொருள் கொள்ள முடியும் என்கிறார்கள் அவர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications