பொங்கலுக்கு கரும்பு முக்கியத்துவம் பெறுவது ஏன்? ஏன் நாம் சாப்பிட வேண்டும்? பின்னணியில் சுவாரசியம்
சென்னை: பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தான் பொங்கல் பண்டிகையில் கரும்பு என்பது முக்கிய இடத்தை பிடிக்கிறது. பிற பண்டிகைகள் இன்றி கரும்பு பொங்கலில் மட்டும் முக்கியத்துவம் பெறுவது ஏன்? அதனை நாம் ஏன் சாப்பிட வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதன் பின்னணியில் சுவாரசிய தகவல் ஒன்று உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏராளமான பண்டிகைகளை நாம் கொண்டாடி வருகிறோம். இதில் மிகவும் முக்கியமானது பொங்கல். புத்தாண்டு பிறந்த உடன் வரும் முதல் பண்டிகையாக இருக்கும் பொங்கல் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்றது.

பொங்கல் பண்டிகையை பிற மாநிலங்களில் மகர சங்கராந்தி என கொண்டாடுகின்றனர். இருப்பினும் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அதோடு நமது கலாசாரம், பாரம்பரியத்துடன் பிண்ணிப்பிணைந்த விழாவாக பொங்கல் இருக்கிறது. இதனால் தான் பொங்கல் பண்டிகையை நாம் தமிழர் திருநாள் என அழைக்கிறோம்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டியை நாளை (ஜனவரி 15)ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதன்பிறகு ஜனவரி 16ல் மாட்டுப்பொங்கல், ஜனவரி 17 ல் காணும்பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக இன்று போகிப்பண்டிகை கொண்டாடப்பட்டது. பொங்கலை பொறுத்தமட்டில் அது விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கு உதவும் கால்நடைகள், சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் பண்டிகையாக இருக்கிறது. மேலும் அறுவடை திருநாள் எனவும் பொங்கல் அழைக்கப்படுகிறது.
புதிதாய் அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள், கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றை வாழை இலையில் வைத்து சூரிய உதயத்தின்போது வீட்டு முன்பு மண்பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மாட்டு பொங்கலின்போது ஆண்டு முழுவதும் ஓயாமல் உழைத்த மாடுகளை குளிப்பாட்டி திலகமிட்டு பொங்கலிட்டு உணவு வழங்குகிறோம். இப்படி பொங்கல் என்பது விவசாயத்தை சார்ந்தே முழுக்க முழுக்க உள்ளது.
சரி இது இருக்கட்டும். பொங்கல் பண்டிகையின்போது கரும்பு ஏன் முக்கியத்துவம் பெறுவது என்பது உங்களுக்கு தெரியுமா?. இதன் பின்னணியில் 2 விஷயம் சொல்லப்படுகிறது. கரும்பு என்பது ஓராண்டு காலம் வளரக்கூடியது. இந்த காலத்தில் கரும்பு என்பது நல்ல திடக்காத்திரமாக இருக்கும். அதோடு சாப்பிட இனிமையாகவும் இருக்கிறது.
இதன்மூலம் கரும்பு என்பது உழைப்பை கற்றுத்தரும் வகையில் உதாரணம் காட்டப்படுகிறது. அதாவது முதலில் கரும்பு பொறுமையாக வளர்ந்து இறுதியில் மக்களுக்கு தித்திப்பை வழங்குகிறது. அதன்படி இளமையில் கஷ்டப்பட்டு மக்கள் உழைக்க வேண்டும். அப்படி உழைத்தால் முதுமையில் இனிமையான வாழ்வு கிடைக்கும் என்பதை இந்த கரும்பு உணர்த்துவதாக கூறப்படுகிறது.
இது முதல் விஷயம் என்றால் சிவனை வைத்தும் ஒரு விஷயம் சொல்லப்படுகிறது. அதாவது பொங்கல் நாளில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருக்கும் யானையின் கல் உருவத்திற்கு சிவன் கரும்பு ஊட்டியதாக கூறப்படுகிறது. அதன் நினைவாகவும் பொங்கல் பண்டிகையின்போது கரும்பு முக்கியத்துவம் பெறுவதாக சொல்லப்படுகிறது.
மேலும் கரும்பு கடித்து உண்பது என்பது பற்கலுக்கு வலு சேர்க்கும். ஆலும், வேலும் மட்டுமின்றி கரும்பும் பல்லுக்கு உறுதி என்பதால் அதனை கட்டாயம் மக்கள் அனைவருமு் பொங்கல் பண்டிகையில் கடித்து தின்ன வேண்டும்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications