Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புஸ்ஸூனு போச்சே.. அண்ணாமலையால் ஆடிப்போன பாஜக தலைகள்.. நொடியில் தகர்ந்த கனவு! இது என்னன்னு தெரியலயே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜகவின் விஸ்வரூபம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், முக்கிய தகவல் ஒன்று கசிந்து வருகிறது.

தேர்தல் பணியில் சரியாக ஈடுபடாதவர்கள், தொகுதியிர் பர்ஃபெர்மான்ஸ் செய்யாதவர்கள் மீதான புகார்கள் ஏற்கனவே அண்ணாமலைக்கு ரிப்போர்ட்டாக சென்றிருந்தது.

Why Tamil Nadu BJP Leader Annamalai did not take action against key administrators and happened in Chennai Meeting

அதுமட்டுமல்ல, தொகுதிகளில் திட்டமிட்டபடி, பாஜகவின் கணக்குகள் அத்தனையும் நொறுங்கிவிட்டதாம். அதாவது, பெரிய அளவில் அந்தந்த தொகுதி நிர்வாகிகளுக்கு பணம் வழங்கபட்டதாக கூறப்படுகிறது.

வேட்பாளர்கள்: தொகுதி மற்றும் எதிர் வேட்பாளர்கள், தங்களுடைய கட்சி வேட்பாளர்களுக்கு ஏற்ற வகையில் மேலிடத்தில் இருந்து பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அடிமட்ட நிர்வாகிகளுக்கே முறையாக பணம் போய்ச்சேரவில்லையாம்..

சில இடங்களில் உட்கட்சி பூசலும், உள்குத்தும் வெடித்ததுடன், கையாடல்களும் நடந்துள்ளன. இந்த கையாடல்கள் குறித்து, சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சொந்த கட்சியினரே பல இடங்களில் பகிரங்கமாக போஸ்டர் அடித்தும் ஒட்டியிருந்தனர்..

புகார்கள்: அதுமட்டுமல்லாமல், பணம் வினியோக பிரச்சனை தொடர்பாக பாஜக தலைமைக்கும் தொடர்ந்து புகார்கள் சென்று கொண்டேயிருந்தது.. அடுத்தடுத்த புகார்களை கண்டு மேலிடமே அதிர்ச்சி அடைந்ததாம்.

இப்படிப்பட்ட சூழலில்தான் நேற்றைய தினம் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தை அண்ணாமலை கூட்டியிருந்தார். இதனால், எப்படியும், பல நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல, எனவே, தேர்தல் செலவுகள், பணிகள் தொடர்பாக அண்ணாமலையிடம் புகார் செய்ய வேண்டும் என்பதற்காகவே நிர்வாகிகள், வேட்பாளர்கள் பலர் திட்டமிட்டிருந்தனர். பணத்தை சுருட்டிய நிர்வாகிகள் மீது புகார் செய்ய பலரும் ஆதாரத்துடனும் காத்திருந்தனர்.

ஆதாரங்கள்: நேற்று காலை கூட்டம் தொடங்கியதுமே, "பணம் சுருட்டல், கட்சி மோதல் குறித்து யாரும் பேசக் கூடாது, வாக்கு எண்ணிக்கை குறித்து மட்டுமே பேச வேண்டும்" என்று முன்கூட்டியே அண்ணாமலை கண்டிப்பாக சொல்லிவிட்டாராம்.. இதனால் ஆதாரத்துடன் புகார் கொடுக்க வந்தவர்கள் அதிருப்தியும், விரக்தியும், ஏமாற்றமும் அடைந்துவிட்டார்களாம்..

கட்சி ஆபீசுக்கு போனாலும் புகாரை வாங்குவதில்லை... கூட்டம் நடத்தினாலும் புகார் சொல்ல விடுவதில்லையே என்று புலம்பி கொண்டே போனார்களாம். ஆனால், இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

எதிர்பார்ப்பு: ஆனால், சட்டசபை தேர்தலுக்கான களப்பணியில் பாஜக இப்போதே தீவிரம் காட்டி வருவதால், கடந்தகால புகார்கள் இனி வராமல் பார்த்து கொள்ளப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.. அதனால், முறையாடல் செய்தவர்கள் உட்பட பலரது லிஸ்ட்டும் மாநில தலைவரிடம் உள்ளதால், எப்போது வேண்டுமானாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயலாம் என்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, தொகுதி வாரியாக ரிசல்ட் வந்தபிறகு, புகார் வந்தவர்கள் மீது ஆக்‌ஷன் எடுக்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள்.. அதற்குள் கூடுதல் ஆதாரங்களை திரட்ட நிர்வாகிகள் தயாராகி வருகிறார்களாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+