Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1918ல் உலகையே உலுக்கிய வைரஸ்.. தமிழ்நாட்டில் இன்புளுயன்சா பரவுவது எப்படி? பாதுகாப்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் காய்ச்சல் பரவி வருகிறது. புதுச்சேரியிலும் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு 25ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

இப்போ தானே கொரோனா பாதிப்பு போனது.. அதற்குள் எப்படி அடுத்த காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது என்று கேட்கிறீர்களா? இது எண்டமிக் ஆக மாறிய ஃப்ளு காய்ச்சல் எனப்படும் இன்புளுயன்சா காய்ச்சல் காரணமாக ஏற்படுவதாகும். 1918ல் உலகப்போர் சமயத்தில் பரவிய இன்புளுயன்சா அப்போது பலரின் உயிரை எடுத்து.

கொரோனவை போலவே இது உலகம் முழுக்க பாதிப்பை ஏற்படுத்தியது. இன்புளுயன்சா முதல் அலையை விட இரண்டாம் அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. முதல் அலையில் பாதிக்கப்பட்டவர்களை விட இரண்டாம் அலையில் அதிக பேர் பாதிக்கப்பட்டனர், அதிக பேர் பலியானார்கள்.

இன்புளுயன்சா

இன்புளுயன்சா

அதன்பின் இதற்கு ஃப்ளு தடுப்பூசி கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக நோய் வீரியம் குறைந்து அதன்பின் அது சீசன் காய்ச்சல் போல மாறியது. அதாவது உலகம் முழுக்க பரவி, இனி அழிக்கவே முடியாது, அதே சமயம் பெரிய அளவில் பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என்று சொல்லும் அளவிற்கு இன்புளுயன்சா உருமாற்றம் அடைந்தது. இதைத்தான் எண்டமிக் என்று கூறுவார்கள். இது உலகம் முழுக்க காய்ச்சல் இயல்பாக, சீசனுக்கு சீசன் பரவும் நோய் ஆக மாறியது.

இன்புளுயன்சா என்றால் என்ன?

இன்புளுயன்சா என்றால் என்ன?

இந்தியாவில் தட்பவெப்பநிலை காரணமாக ஜூன் மாதம் இந்த காய்ச்சல் தொடங்கும். அக்டோபர் மாதம் வரை கூட இன்புளுயன்சா காய்ச்சல் பரவும். அமெரிக்கா போன்ற நாடுகளில் செப்டம்பர் இறுதியில் இன்புளுயன்சா காய்ச்சல் பரவ தொடங்கும். தற்போது தமிழ்நாட்டில் மாணவ, மாணவியர் இடையே இன்புளுயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. முக்கியமாக 1-5ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் இந்த காய்ச்சல் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எப்படி ஏற்படுகிறது?

எப்படி ஏற்படுகிறது?

இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் குணம் கொண்டது. இன்புளுயன்சா ஏற்பட்ட நபருடன் நெருக்கமாக இருந்தால் அவருக்கு இந்த காய்ச்சல் ஏற்படும். சுற்றுசூழல் சுத்தமாக இல்லாமல் இருப்பது, குளிர் பானங்கள் சாப்பிடுவது ஆகியவை காய்ச்சலுக்கு வழிவகுத்து பின்னர் இன்புளுயன்சா காய்ச்சல் ஏற்படவும் காரணமாக இருக்கும். இன்புளுயன்சா உள்ளவர்கள் அருகில் இருந்தால் அவர்களுக்கும் இன்புளுயன்சா பரவ வாய்ப்புகள் உள்ளது.பருவநிலைதான் இன்புளுயன்சா பரவ முக்கிய காரணம்.

அறிகுறிகள் என்ன?

அறிகுறிகள் என்ன?

  • சளி
  • தொண்டை வலி
  • உடல் வலி
  • லேசான இருமல்
  • லேசான தலைவலி
  • விட்டு விட்டு காய்ச்சல் ஆகியவை இதன் காரணமாக ஏற்படும். இதுதான் பொதுவான இன்புளுயன்சா அறிகுறிகள். கொஞ்சம் வீக்காக இருக்கும் நபர்களுக்கு தீவிர அறிகுறிகள் வரலாம்.

குழந்தைகள் மட்டுமா?

குழந்தைகள் மட்டுமா?

இது குழந்தைகளை மட்டும் தாக்காது, வயதானவர்களையும் தாக்கும். ஆனால் இதனால் பெரிய பாதிப்புகள் இருக்காது. இரண்டு, மூன்று நாட்களுக்கு காய்ச்சல் தீவிரமாக இருந்து பின்னர் குணமடையும். இந்த காய்ச்சல் வந்ததும் மருத்துவரை அணுகுவது சரியானது. குழந்தைகளுக்கு 4 நாட்கள் கூட இந்த காய்ச்சல் இருக்கும். இன்புளுயன்சா காரணமாக உயிரிழப்புகள் இப்போது ஏற்படுவது இல்லை என்பதால் பதற்றம் அடைய வேண்டியது இல்லை. அதேபோல் இதற்கு தடுப்பூசியும் உள்ளது, எளிமையான சிகிச்சை முறைகளும் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+