Flash back:காலந்தோறும் அதிமுகவில் கலகம் எழுப்பிய மைத்ரேயன்.. தாய்வீடு கமலாலயத்துக்கே திரும்புகிறார்!
சென்னை: அதிமுகவில் காலந்தோறும் கலகக் குரல் எழுப்பிய மைத்ரேயன் தாய்வீடான பாஜகவுக்கே திரும்புகிறார்.
2019-ம் ஆண்டு ராஜ்யசபா எம்பி பதவி நிறைவடைந்த போது அதிமுகவின் மைத்ரேயன் நெஞ்சை உலுக்கும் வகையில் பேசினார். 2009-ம் ஆண்டு ஈழத் தமிழர்கள் பல லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டபோது செலுத்தப்படாத மவுன அஞ்சலியை இந்த சபை எனக்கும் செலுத்தக் கூடாது என கூறியிருந்தார்.

மைத்ரேயன்.. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்து உருவானவர். தமிழ்நாட்டில் பாஜக எனும் கட்சி பெயரை உச்சரிக்கக் கூட ஆள் இல்லாத காலம்.. அத்வானி வருகை தந்தால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 4 பேர் மட்டுமே வரவேற்கக் கூடிய ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டின் பாஜக முகமாக இருந்தவர் மைத்ரேயன். பாஜக தலைமை நிர்வாகிகளில் ஒருவராக வலம் வந்தவர். 23 ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவுக்கு குட்பை சொல்லிவிட்டு அதிமுகவுக்கு தாவினார்.
அதிமுகவின் ஜெயலலிதாவின் குட்புக்கில் இருந்தவர். அதிமுகவின் மைலாப்பூர் முகமாக அடையாளப்படுத்தப்பட்டவர். அதனாலேயே ராஜ்யசபா பதவியும் கிடைத்தது. 2013-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு அதிமுக ராஜ்யசபா எம்பியாக இருந்தார்.
2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த போது தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்-க்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்தவர். அதிமுக ஓபிஎஸ் கோஷ்டியின் மூத்த தலைவராக இருந்தவர் மைத்ரேயன். ஒருகட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்த போது இருதரப்பு பேச்சுவார்த்தையில் முக்கியமான நபராக இருந்தார். இரு அணிகள் இணைந்த போதும் கல்லெறிந்து கூட்டைக் கலைக்கும் வகையில் ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டவர் மைத்ரேயன்.

அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் என மாறி மாறி ஊசலாட்டமாடிக் கொண்டிருந்தார். 2022-ம் ஆண்டு மைத்ரேயன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுகவில் இனி எந்த அணியிலும் தம்மால் இணைய முடியாது என முடிவெடுத்ததாலேயே தற்போது மீண்டும் தாய்வீடான பாஜகவுக்கே திரும்ப முடிவு எடுத்துவிட்டார் மைத்ரேயன்.
அதுவும் தமிழ்நாட்டில் பாஜகவின் மூத்த தலைவர்கள் 3 பேர் அடுத்தடுத்து ஆளுநர்களாகிவிட்டனர். மற்றொரு மூத்த தலைவர் எச்.ராஜா, தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிக்கிறார். இந்த நிலையில் அந்த சீனியர்கள் வரிசையில் தம்மை இணைத்துக் கொள்ள மைத்ரேயன் முடிவு செய்திருக்கலாம். இதனாலேயே அதிமுகவை விட்டு விலகி மீண்டும் பாஜகவில் இணையவும் மைத்ரேயன் முடிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
-
முழு கண்ட்ரோல்.. இனி பவர் ஐஏஎஸ்கள் கையில்! இன்று முதல் தேர்தல் விதிகள் அமல்! MCC என்றால் என்ன? -
சீனியர்களை கழற்றிவிடும் பாஜக? தமிழகத்தில் புதுமுகங்களை களமிறக்க திட்டம்.. பின்னணியில் 3 காரணம் -
பணக்காரர்களுக்கு மட்டுமே சீட்? ₹10 கோடிக்கு லீடர் தந்த ஷாக்? திமுக, அதிமுக, தவெக கடைசி நேர கண்டிஷன் -
சசிகலாவுக்கு விழுந்த பலத்த அடி.. அஇபுதமமுக ஆரம்பமே இப்படியா? காப்பாற்ற போகும் அந்த "பெரிய கை" யார் -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
30 ஆண்டு மரபு உடைந்தது! புதுச்சேரி, தமிழ்நாட்டிற்கு.. வேறு வேறு தேதிகளில் தேர்தல்! ஏன் இந்த மாற்றம்? -
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் LIVE: ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு.. மே 4ம் தேதி ரிசல்ட் -
அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை இடம்? கூட்டணி கட்சிகளுடன் பேச குழு அமைத்த எடப்பாடி -
டெல்டாவில்.. முக்கிய தொகுதியிலேயே அடிவாங்கும் திமுக.. சிக்கலில் பெரிய மீன்! இவருக்கே இந்த நிலைமையா? -
38 நாட்களில் தமிழ்நாட்டில் தேர்தல்.. இந்த விஷயங்களை மறக்காதீங்க! முடிவை தீர்மானிக்க போவதே இதான் -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
எப்படி இருந்த வைகோ இப்படி ஆகிவிட்டாரே! கஷ்டப்பட்டு சிரிக்கிறார்! அண்ணாமலை உருக்கம்!












Click it and Unblock the Notifications