எல்லா சாலையும் "ஊட்டியை" நோக்கியே! சட்டுனு போன ராசா.. பின்னாடியே போகும் முதல்வர்! அப்போ கன்பார்ம்டா?
சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று ஊட்டிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ள நிலையில்.. இந்த பயணம் திட்டமிடப்பட்டு இருக்கும் நேரம்தான் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
எல்லா சாலையும் ரோமை நோக்கியே செல்கிறது என்பார்கள்.. இப்போது தமிழ்நாடு அரசியலை எடுத்துக்கொண்டால்.. எல்லா சாலையும் ஊட்டியை நோக்கித்தான் செல்கிறது என்று கூற வேண்டும்.
ஆம் முக்கியமான அரசியல் தலைகள் ஊட்டியில் முகாமிட்டு வருவது பல்வேறு கேள்விகளை, விவாதங்களை எழுப்பி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தற்போது கோவையில் இருக்கிறார்.

கோவை பயணம்
நேற்று மாலை கோவைக்கு சென்றவர்.. இன்று பிற்பகல் கோவையில் இருந்து ஊட்டிக்கு செல்கிறார். கோவையில் இருந்து சாலை மார்க்கமாக அவர் காரில் ஊட்டி செல்கிறார். குன்னுார் பகுதிகளில் அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது. நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார். முக்கியமாக தாவரவியல் பூங்கா கண்காட்சியை நாளை முதல்வர் தொடங்குகிறார்.

ஸ்டாலின் கோவை
அதேபோல் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்குகிறார். பின்னர் ஊட்டி உருவாக காரணமாக இருந்த ஜான் சல்லிவன் சிலையை திறந்து வைக்கிறார். ஆனால் முதல்வரின் ஊட்டி பயணம் கவனம்பெற காரணமே வேறு என்று கூறுகிறார்கள் அரசியல் தரப்பினர். முதல்வர் ஸ்டாலின் ஊட்டி போகும் அதே நேரத்தில்தான் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஊட்டியில் தங்கி இருக்கிறார். குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொள்ள இருக்கிறார்.

வெங்கையா நாயுடு ஊட்டி
இதற்காக அவர் ஊட்டி பயணம் மேற்கொண்டுள்ளார். ஊட்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையில்தான் அவர் தங்கி இருக்கிறார். நேற்று அங்கு வந்த வெங்கையா நாயுடுவை நீலகிரி எம்பி ஆ. ராசா நேற்று அவரை நேரில் சென்று சந்தித்தார். இந்த நிலையில்தான் ஊட்டி செல்லும் முதல்வர் ஸ்டாலின் வெங்கையா நாயுடுவை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் வெங்கையா நாயுடு முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.

சந்தித்த ஆ. ராசா
பாஜக தற்போது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதில் எப்படியாவது எதிர்க்கட்சிகள் ஏற்க கூடிய பொது வேட்பாளரை நிறுத்தி குடியரசுத் தலைவராக வெற்றிபெற வைத்து விட வேண்டும் என்று திட்டத்தில் பாஜக இருக்கிறது. தென்னிந்திய கட்சிகளின் ஆதரவை பெறும் வகையில், பாஜக சார்பாக துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு குடியரசுத் தலைவர் வேட்பாளராக வாய்ப்புகளும் உள்ளன. இதை கருத்தில் கொண்டே வெங்கையா நாயுடு முதல்வரை சந்தித்தார் என்று கூறப்பட்டது.

கருணாநிதி சிலை
இது போக ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வரும் 28ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இதையும் வெங்கையா நாயுடுதான் திறந்து வைக்க உள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் வெங்கையா நாயுடு போட்டியிட்டால் அவரை திமுக ஆதரிக்கும் என்பதற்கான சிக்னலாக இது பார்க்கப்படுகிறது. இரண்டு தரப்பும் நெருக்கமாகிறது என்பதற்கான அறிகுறியாக இது பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் ஒரே நேரத்தில் ஊட்டியில் முதல்வர் ஸ்டாலினும், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவும் முகாமிடுவது அரசியல் வட்டாரத்தில் கேள்விகளை எழுப்பி உள்ளது. அப்போ வெங்கையா நாயுடுவுக்கு திமுகவின் ஆதரவு கன்பார்மா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்!











Click it and Unblock the Notifications