Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தவெக தந்த புகார்.. தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்ட பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தலைமை செயலாளர், டிஜிபி, லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் போன்ற முக்கிய அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றியிருப்பது மிகப்பெரிய அரசியல் மற்றும் நிர்வாக அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் காலங்களில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு படி அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கம் என்றாலும், முதல்வர் ஸ்டாலினால் நியமிக்கப்பட்ட தமிழ்நாட்டின் டாப் அதிகாரிகள் ஒரே நேரத்தில் மாற்றப்பட்டிருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறப்போவதகா கடந்த மாதம், அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. ஏனெனில் பொதுவாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், மாநிலத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.

Chennai Police Commissioner

தேர்தல் ஆணையம் அரசு இயந்திரம் ஒரு சார்பாக செயல்படுவதாகக் கருதினாலோ அல்லது புகார்கள் வந்தாலோ, தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக அதிகாரிகளை மாற்றும். யாரை வேண்டுமானாலும் எந்த பதவிக்கும் மாற்றலாம். எந்த பொறுப்பும் கொடுக்காமல் அவர்களை உட்கார வைக்கவும் முடியும். புதிய அரசு வந்த பின்னரே அவர்கள் வழக்கமான வேலைகளில் ஈடுபட முடியும். இதுதான் இயல்பான ஒன்று.

அந்த வகையில், தமிழ்நாட்டில் தலைமை செயலாளர், டிஜிபி, லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி, சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் என அடுத்தடுத்து அதிரடியாக மாற்றப்பட்டிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வெற்றி கழகம் மற்றும் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகார்கள் இந்த அதிரடியான மேஜர் மாற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக தவெகவிற்கு சென்னையில் பரப்புரை செய்ய அனுமதி மறுக்கப்பட்டது மற்றும் சில பாதுகாப்பு காரணங்களைக் காட்டி ஆளும் கட்சிக்குச் சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாகத் தேர்தல் ஆணையத்தில் தவெக சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்தே இந்த மாற்றங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

பொதுவாக தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடப்பதை உறுதி செய்ய, ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்படும் அல்லது நீண்ட காலம் ஒரே பதவியில் இருக்கும் அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் மாற்றுவது வழக்கம் ஆகும். அந்த வகையில், தமிழகத்தின் தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் மாற்றப்பட்டு, அவருக்குப் பதில் எம். சாய் குமார் நியமிக்கப்பட்டார. அதேபோல் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி ஜி. வெங்கட்ராமனுக்குப் பதிலாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு, சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அருணுக்கு பதில் புதிய சென்னை போலீஸ் கமிஷனராக அபின் தினேஷ் மோதக்கை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மாற்றங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக-வின் அழுத்தத்தின் பேரிலேயே தேர்தல் ஆணையம் இந்த அதிரடி மாற்றங்களைச் செய்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அஸ்ஸாம், பீகார் போன்ற மாநிலங்களில் இல்லாத நடைமுறை ஏன் தமிழ்நாட்டில் மட்டும் என்று தலைமை செயலாளர் மாற்றத்தின் போது முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+