Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருப்பா அசிங்கமா இருக்கியே.. அப்படியா.. இந்தா பிடி.. சுடுநீரை ஊற்றி அதிர வைத்த மனைவி

கணவன் மீது வெந்நீரை மனைவி ஊற்றினார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கணவன் முகத்தில் சுடுநீரை ஊற்றி அதிர வைத்த மனைவி

    சென்னை: 'இவ்ளோ கருப்பா அசிங்கமா இருக்கியே " என்று சொன்ன கணவன் முகத்தில் சுடு தண்ணீரை தூக்கி ஊற்றி விட்டார் மனைவி!!

    சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரை சேர்ந்தவர் சியாம்வெஸ்லி. இவரது மனைவி கிறிஸ்டி. கிறிஸ்டிக்கு வயது 34. சியாமுக்கு வயது 36.

    கல்யாணம் ஆகி 15 வருஷம் ஆச்சு. சியாமுக்கு எப்பவுமே குடிபழக்கம் இருக்கு. இதை எத்தனையோ முறை கிறிஸ்டி சொல்லியும், தடுத்தும், கெஞ்சியும், அழுதும் பார்த்துவிட்டார். எதுவுமே சியாம் காதில் ஏறவில்லை.

    குறை சொன்னார்

    குறை சொன்னார்

    இதனால் எப்பவுமே ரெண்டு பேருக்கும் சண்டைதான். குடிக்காமல் வீட்டுக்கு வருவதே கிடையாது. ஆரம்பத்தில் குடிச்சிட்டு வீட்டுக்கு வந்தவுடன், குடி விஷயமாகதான் ரெண்டு பேருக்கும் சண்டை எழுந்தது. ஆனால் நாளாக நாளாக, சியாம், மனைவியின் தோற்றத்தை பற்றி குறை சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

    கருப்பா இருக்கே

    கருப்பா இருக்கே

    "நீ கருப்பா இருக்கே... அசிங்கமா இருக்கே... வேற கல்யாணம் பண்ணிக்க போறேன்" என்று போதையில் சொல்ல ஆரம்பித்துள்ளார். தன்னை பற்றி இப்படி மட்டமாக பேச வேண்டாம் என்று பலமுறை கிறிஸ்டி சொல்லியும், சியாம் தொடர்ந்து வம்பிழுத்து அழகு பற்றியே பேசி வந்துள்ளார்.

    வேண்டுமென்றே சொன்னார்

    வேண்டுமென்றே சொன்னார்

    நேற்றும் வழக்கம்போல் தண்ணி அடித்துவிட்டு, வீட்டுக்கு வந்ததும் கிறிஸ்டியிடம், கருப்பு, அழகில்லாதது குறித்து பேச ஆரம்பித்திருக்கிறார். இதை பற்றி பேசினாலே கிறிஸ்டிக்கு பிடிக்காது என்று தெரிந்தும் அதையேதான் வேண்டுமென்றே சியாம் சொல்லி இருக்கிறார்.

    அலறி துடித்தார்

    அலறி துடித்தார்

    பொறுத்து பொறுத்து பார்த்து கடுப்பான கிறிஸ்டி, டீ போட அடுப்பில் வைத்திருந்த சுடுநீரை கொதிக்க கொதிக்க எடுத்து சியாம் முகத்திலேயே ஊற்றினார். போதையில் உளறியபடியே இருந்த சியாம், சுடுநீர் பட்டதும் அலறி துடித்தார். கொஞ்ச நேரத்தில் முகமே வெந்துவிட்டது.

    அழகாக இல்லை

    அழகாக இல்லை

    சியாமின் அலறல் கேட்டு பக்கத்து வீட்டுக்கார்கள் ஓடிவந்து மீட்டு, 108 ஆம்புலன்சில் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்த்தார்கள். இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்யாணம் ஆகி 15 வருஷம் கழித்து மனைவி அழகாக இல்லை என்று கூறிய கணவனுக்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது!!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+