Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போதி தர்மர் மீண்டும் வருவாரா?.. உயிர்க் கொல்லி வைரஸ்.. கரோனோவின் பிடியில் சிக்கி தவிக்கும் சீனா

வைரஸில் இருந்து காக்க மீண்டும் ஒரு போதி தர்மன் வருவாரா?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    China Corona virus infection | உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்... நடுங்கும் நாடுகள்

    சென்னை: "7ம் அறிவு" படம் பார்த்த அனைவருக்குமே போதி தர்மர் கதை குறித்து ஓரளவுக்குத் தெரியும்.. அந்தக் கதையில் நிறைய முரண்பாடுகள் உண்டு என்பதை மறுக்க முடியாது. அதேசமயம், தற்போது கரோனோ வைரஸ் பிடியில் சிக்கித் தவிக்கும் சீனர்களை மீட்க மீண்டும் ஒரு போதி தர்மர் வருவாரா என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன.

    யார் இந்த போதி தர்மர்.. நிறையப் பேருக்கு 7ம் அறிவு படம் வரும் வரை பெரிதாக எதுவும் தெரியாது. குறிப்பாக இளைஞர்களுக்கு. ஆனால் இந்தப் படம் வந்த பிறகுதான் பலருக்கும் போதி தர்மர் என்ற ஒருவரைப் பற்றி தெரிய வந்தது.

    இவரைப் பற்றிய உறுதியான தகவல்கள் எங்குமே இல்லை. தென்னிந்தியாவைச் சேர்ந்தவர், தமிழர் என்று ஒரு தகவல் உள்ளது. அதேசமயம், அவரைப் பற்றிய பல தகவல்கள் குழப்பமானவையாகவே உள்ளன என்பதில் ஐயமில்லை.

    தற்காப்பு கலை

    தற்காப்பு கலை

    சரி.. இப்போது போதி தர்மர் குறித்த பேச்சு ஏன் எழுந்துள்ளது.. இருக்கிறது. போதி தர்மர் பல உலக நாடுகளுக்குப் பயணப்பட்டவர். தான் கற்ற தற்காப்புக் கலை வித்தையை (இதுதான் பின்னர் குங்ஃபூவாக மாறியது) தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பரப்பியவர். மக்களுக்கு பல கலைகளை, மருத்துவத்தைப் போதித்தவர். அப்படித்தான் அவர் சீனாவுக்குள்ளும் வந்தார்.

    வியாதிகள்

    வியாதிகள்

    மலை காடுகள் வழியாக சீனாவுக்குள் அவர் வந்தபோது அங்கு மக்கள் பெரும் வியாதியில் சிக்கி பீடிக்கப்பட்டிருந்தனர் (இது உண்மை அல்ல என்று ஒரு தகவல் உள்ளது. போதி தர்மர் வியாதியை குணப்படுத்தினார் என்பதற்கும் போதிய ஆதாரம் இல்லை என்று ஒரு தரப்பு சொல்கிறது. அதேசமயம், உண்மைதான் என்று இன்னொரு தரப்பும் விளக்குகிறது). அந்த மக்களைப் பார்த்த போதி தர்மர் இவர்களை குணப்படுத்தி இங்கேயே தங்கி விட முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

    போதி தர்மர்

    போதி தர்மர்

    அந்த மக்கள் முதலில் போதி தர்மரை கண்டு பயந்தாலும் பின்னர் அவர் தங்களை குணப்படுத்தியதைப் பார்த்து அவர் மீது அன்பை பொழிந்தனர். அவரை தங்களது குருவாக ஏற்றுக் கொண்டனர். உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வது எப்படி, மருத்துவம் பார்ப்பது எப்படி, தற்காப்பு கலையை எப்படி பயன்படுத்துவது என்பது உள்ளிட்டவற்றை அந்த மக்களுக்கு கற்றுகொடுத்தார் போதி தர்மர். இதுதான் ஷாவோலின் கலையாகும்.

    கரோனா வைரஸ்

    கரோனா வைரஸ்

    இப்போது போதி தர்மரின் முக்கியத்துவத்தை நாம் இங்கு நினைவு கூற வேண்டியுள்ளது. போதி தர்மர் வந்தபோது சீனாவை பீடித்திருந்ததாக கூறப்படும் கொடூர உயிர்க் கொல்லி வியாதி போல இப்போதும் கரோனோ என்ற கொடூரமான வைரஸ் பரவலில் சிக்கி சீன மக்கள் தவித்து வருகின்றனர். பல நூறு பேரை அது காவு வாங்கி விட்டது. இந்த நிலையில் மீண்டும் போதி தர்மர் வருவாரா என்ற எதிர்பார்ப்புகளை சிலர் எழுப்பி சமூக வலைதளங்களிலும் அதை பகிர்ந்து வருகின்றனர்.

    அற்புதம்

    அற்புதம்

    நிஜம்தான்.. உயிர்கள் அழிவது எந்த வகையிலும் சோகமானது, தவிர்க்கப்பட வேண்டியதே. எனவே கரோனோ வைரஸிலிருந்து சீனா மீண்டு வர நிச்சயம் ஒரு அற்புதம் நடந்தால் அதை விட வேறு மகிழ்ச்சி எதுவும் இருக்க முடியாதுதான்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+