Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பத்திர பதிவு.. நில வழிகாட்டி மதிப்பு உயர்வு? ஓபிஎஸ் சொல்வதென்ன? பதிவுத்துறையின் உண்மை நிலவரம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரே ஆண்டில் பத்திரப்பதிவினை இரண்டு மடங்கு உயர்த்தி இருப்பது கொடுமையிலும் கொடுமை என்று தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்யை தினம், ஒரு நாளிதழில் பத்திரப்பதிவு குறித்த செய்தி வெளியாகியிருந்தது.. அதில், "பதிவுத்துறையின் பொறுப்பு செயலராக, வணிக வரித்துறை ஆணையர் ஜெகநாதன் சமீபத்தில் பொறுப்பேற்றார்... துறையின் பணிகளை ஆய்வு செய்ததுடன், பத்திரப்பதிவு வருவாய், 10 வருடங்களில் டபுள் மடங்காக கூட உயராதது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறாராம்.

Will Deed Registration increase by Tamil Nadu Government and what did O Panneerselvam say about Bond Revenue Target

அத்துடன், பதிவுத்துறையின் வருவாய் இலக்கு, 60,000 கோடி ரூபாயாக இருக்க வேண்டும் என்றும் சார் பதிவாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறாராம். இதற்காக நில வழிகாட்டி மதிப்புகளை உயர்த்துவதற்கான பரிந்துரைகள் அனுப்ப, சார் - பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி வெளியாகியிருக்கிறது.

அறிக்கை: இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில், "வீட்டை வாங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்று. வங்கி, வங்கியாக அலைந்து திரிந்து, கடன் பெற்று, வீட்டை வாங்கி, அதற்கான உள் வேலைகளை செய்து, கடனுக்கு மாதாந்திர தவணை கட்டி மக்கள் அல்லலுற்று இருக்கின்ற நிலையில், முத்திரை மற்றும் பதிவுக் கட்டணத்தை அநியாயமாக, ஒரே ஆண்டில் இரண்டு மடங்கு உயர்த்தி இருப்பது என்பது என்பது கொடுமையிலும் கொடுமை.

இந்நிலையில் சந்தை மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதை சுட்டிக்காட்டி, தற்போதுள்ள பத்திரப் பதிவு வருவாயான சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாயினை 60 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தத் தேவையான நில வழிகாட்டி மதிப்புகளை பரிந்துரைக்குமாறு சார் பதிவாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக வந்துள்ள செய்தி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சி: திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது என்ன வழிகாட்டி மதிப்பு இருந்ததோ அதே மதிப்பினை தொடர்ந்து கடைபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால் இங்கு நாம் ஒன்றை பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.. நம்முடைய "ஒன் இந்தியா தமிழ்" தொடர்பாக நேற்றைய தினம், பதிவுத்துறை அதிகாரிகளிடம் நேரடியாகவே இதுகுறித்து விசாரித்தோம்..

தகவல்: அவர்கள் நம்மிடம் பேசும்போது,"பத்திரப்பதிவு வருவாயை உயர்த்தும் திட்டம் எதுவுமே தற்போது அரசுக்கு இல்லை, அதுவும் 60,000 கோடி ரூபாயாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டதெல்லாம் தவறான தகவல் என்றும் நம்மிடம் தெளிவுபடுத்தினார்கள்.

அதுமட்டுமல்ல, பொதுமக்களின் நன்மைக்காகவே பதிவுத்துறை செயல்பட்டு வரும்நிலையில், அதிகாரப்பூர்வமாக எந்தவிதமான தகவலையும் இதுகுறித்து தாங்கள் வெளியிடவில்லை என்பதையும், நம்மிடம் பதிவுத்துறை அதிகாரிகள் பகிர்ந்து கொண்டதுடன், நிலவிய வதந்திக்கு முற்றுப்புள்ளியையும் வலுவாக வைத்துவிட்டார்கள்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+