பத்திர பதிவு.. நில வழிகாட்டி மதிப்பு உயர்வு? ஓபிஎஸ் சொல்வதென்ன? பதிவுத்துறையின் உண்மை நிலவரம் இதுதான்
சென்னை: ஒரே ஆண்டில் பத்திரப்பதிவினை இரண்டு மடங்கு உயர்த்தி இருப்பது கொடுமையிலும் கொடுமை என்று தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்யை தினம், ஒரு நாளிதழில் பத்திரப்பதிவு குறித்த செய்தி வெளியாகியிருந்தது.. அதில், "பதிவுத்துறையின் பொறுப்பு செயலராக, வணிக வரித்துறை ஆணையர் ஜெகநாதன் சமீபத்தில் பொறுப்பேற்றார்... துறையின் பணிகளை ஆய்வு செய்ததுடன், பத்திரப்பதிவு வருவாய், 10 வருடங்களில் டபுள் மடங்காக கூட உயராதது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறாராம்.

அத்துடன், பதிவுத்துறையின் வருவாய் இலக்கு, 60,000 கோடி ரூபாயாக இருக்க வேண்டும் என்றும் சார் பதிவாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறாராம். இதற்காக நில வழிகாட்டி மதிப்புகளை உயர்த்துவதற்கான பரிந்துரைகள் அனுப்ப, சார் - பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி வெளியாகியிருக்கிறது.
அறிக்கை: இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில், "வீட்டை வாங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்று. வங்கி, வங்கியாக அலைந்து திரிந்து, கடன் பெற்று, வீட்டை வாங்கி, அதற்கான உள் வேலைகளை செய்து, கடனுக்கு மாதாந்திர தவணை கட்டி மக்கள் அல்லலுற்று இருக்கின்ற நிலையில், முத்திரை மற்றும் பதிவுக் கட்டணத்தை அநியாயமாக, ஒரே ஆண்டில் இரண்டு மடங்கு உயர்த்தி இருப்பது என்பது என்பது கொடுமையிலும் கொடுமை.
இந்நிலையில் சந்தை மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதை சுட்டிக்காட்டி, தற்போதுள்ள பத்திரப் பதிவு வருவாயான சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாயினை 60 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தத் தேவையான நில வழிகாட்டி மதிப்புகளை பரிந்துரைக்குமாறு சார் பதிவாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக வந்துள்ள செய்தி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சி: திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது என்ன வழிகாட்டி மதிப்பு இருந்ததோ அதே மதிப்பினை தொடர்ந்து கடைபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால் இங்கு நாம் ஒன்றை பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.. நம்முடைய "ஒன் இந்தியா தமிழ்" தொடர்பாக நேற்றைய தினம், பதிவுத்துறை அதிகாரிகளிடம் நேரடியாகவே இதுகுறித்து விசாரித்தோம்..
தகவல்: அவர்கள் நம்மிடம் பேசும்போது,"பத்திரப்பதிவு வருவாயை உயர்த்தும் திட்டம் எதுவுமே தற்போது அரசுக்கு இல்லை, அதுவும் 60,000 கோடி ரூபாயாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டதெல்லாம் தவறான தகவல் என்றும் நம்மிடம் தெளிவுபடுத்தினார்கள்.
அதுமட்டுமல்ல, பொதுமக்களின் நன்மைக்காகவே பதிவுத்துறை செயல்பட்டு வரும்நிலையில், அதிகாரப்பூர்வமாக எந்தவிதமான தகவலையும் இதுகுறித்து தாங்கள் வெளியிடவில்லை என்பதையும், நம்மிடம் பதிவுத்துறை அதிகாரிகள் பகிர்ந்து கொண்டதுடன், நிலவிய வதந்திக்கு முற்றுப்புள்ளியையும் வலுவாக வைத்துவிட்டார்கள்...!!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications