எடப்பாடி முதல்வராவாரா? பாஜக ஆன்மிக பிரிவு தலைவரான ஜோதிடர் ஷெல்வியே இப்படி சொல்லலாமா!
சென்னை: சென்னை மதுராந்தகத்தில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார். இந்நிலையில் தான் மாநாட்டுக்கு வந்திருந்த பாஜகவின் ஆன்மிக பிரிவு தலைவரும், பிரபல ஜோதிடருமான ஷெல்வியிடம், ‛‛ஜாதகப்படி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வாய்ப்புள்ளதா?'' என்று கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அவர் சொன்ன பதில் கவனம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து களமிறங்க உள்ளன. மேலும் கூட்டணியில்புதிய கட்சிகள் சேர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் கூட்டணி வலிமையை காட்டும் வகையில் சென்னை மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் பிற்பகல் 3 மணிக்கு பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார். இந்த மாநாட்டில் தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார்.
மாநாட்டில் பாஜகவின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். பாஜகவின் ஆன்மிக பிரிவு மாநில தலைவரும், பிரபல ஜோதிடருமான ஷெல்வியும் பங்கேற்றார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர், ‛‛எடப்பாடி பழனிச்சாமியின் ஜாதக அமைப்பு எப்படி உள்ளது? அவர் முதல்வராக வாய்ப்புள்ளதா?'' என்ற கேள்வியை முன்வைத்தார்.
அதற்கு ஷெல்வி, ‛‛ஜாதகம் பற்றி உங்கள் நிகழ்ச்சியில் தனியாக பேசுவேன். அதுபற்றி கவலை வேண்டாம். இது அரசியல் மாநாடு.மோடி தலைமையில் முதல் மாநாடு. வரக்கூடிய தேர்தலில் மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்பது தான் எங்கள் அனைவரின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. நானும் பாஜகவில் ஒரு பிரிவில் தலைவராக இருந்தாலும், பாஜகவை பொறுத்தவரை அனைவரும் தொண்டர்கள் தான்.
இன்று மாநாடு நடக்கும் இடமான மதுராந்தகம் என்பது புனித கோவில் இருக்ககூடிய இடம். ஏரிக்காற்றழும் ராமர் முதல் ஆதிபராசக்தி பீடம் எல்லாம் இருக்கிறது. அதனால் சக்தி அருளும், ராமரின் அணுகிரகமும் பெரிய வெற்றியை எதிர்காலத்தில் தரும்'' என்றார்.












Click it and Unblock the Notifications