"ஒரே ஒரு" சீட்தானாமே.. பாஜகவை வெச்சு செஞ்சாலும்.. தேர்தலுக்கு பிறகு.."இறங்கி" வந்து அடிப்பாரா கமல்
கமல் கோவை தெற்கில் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
சென்னை: ஒரே ஒரு சீட்தான் கமல் வெற்றி பெறுவார் என்று சொல்கிறார்கள்.. ஆனால், வெற்றியோ, தோல்வியோ, கமல் தன்னை இன்னும் விரிவுபடுத்தி கொள்ள வேண்டிய அவசியம் இந்த தேர்தலுக்கு பிறகு உருவாகி உள்ளது.
இந்த முறை கடுமையாக போராடிதான், அதிமுக தலைமையிடம் இருந்து கோவை தெற்கு தொகுதியை பாஜக வாங்கியது.. அதனால் திமுகவுடன்தான் போட்டி என்று பாஜக நினைத்து கொண்டிருந்தபோதுதான் கமல் இங்கு களம் இறங்கினார்.
மயிலாப்பூர், ஆலந்தூர், மதுரை என பல்வேறு தொகுதிகள் இருக்க, கோவை தெற்கில் வந்து கமல் ஏன் போட்டியிட்டார் என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்தது.. பிறகுதான், தொழில் வளர்ச்சி பெற்றால் தமிழகத்தின் பொருளாதாரம் உயரும் என்பதால், இந்த தொகுதியை குறி வைத்தது தெரியவந்தது.

பாஜக
இதையடுத்து தேர்தல் களமானது, திமுகவுக்கும் பாஜகவுக்கும் என்பது போய், கமல் Vs வானதி என்றே உருவெடுத்தது.. ஒவ்வொரு நாளும் பிரச்சாரங்கள் இந்த ஸ்டார் தொகுதியில் பரபரப்பை கூட்டி கொண்டிருந்தது. இப்போது, எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியதில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மயூரா ஜெயக்குமாருக்கு 26 சதவீத வாக்குகள்வரை பெற்று 3வது இடமும், கமல் - வானதி இருவருமே 36 சதவீதம் பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது..

அதிமுக
அதாவது அதிமுக வாக்குகள் பெருமளவு வானதிக்கு பதிவாகி இருக்கும்பட்சத்தில் வானதியே வெற்றி பெறக்கூடும் என்று கருதப்படுகிறது.. அதேசமயம், அதிமுக எதிர்ப்பு ஓட்டுக்களை கமல் பெறுவாரானால், கமலே வெற்றி பெறக்கூடும் என்றும் கணிக்கப்படுகிறது.

சூப்பர்
ஒருவேளை கமல் இந்த ஒரே ஒரு சீட் வெற்றி பெற்றாலும், அது மிகப்பெரிய சக்ஸஸ்தான்.. கட்சி ஆரம்பித்து 3 வருடத்திலேயே இது ஒரு சாதனையும்கூட.. 10 வருடமாக சீமானால்கூட முடியாத விஷயத்தை கமல், பெறுவாரானால், அது பாராட்டத்தக்கதும்கூட.. இத்தனைக்கும் கமல் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் அந்த அளவுக்கு பலம் வாய்ந்த் கட்சிகளே இல்லை..

கமலா? வானதியா?
தமிழ்நாட்டில் ஒரு சதவீதம்கூட வாக்கு வங்கி இல்லாத கட்சிகளுடன் கமல் ஏன் கூட்டணி வைத்தார்? என்ற முணுமுணுப்புகளும் எழுந்தன.. வானதியா? கமலா? என்ற இழுபறி இந்த நிமிடம் வரை தொடர்வதற்கும் மய்யத்தின் கூட்டணிதான் பெரிய மைனஸ் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. இதுக்கு கமல் தனியாகவே நின்றிருக்கலாமே, அப்படி நின்றிருந்தால், சீமானை போல ஒரு ஆளுமையை பெற்றிருக்கலாம்.. வானதியை தங்குதடையின்றி மிஞ்சியிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

அரசியல்
ஒருவேளை கமல், இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை தழுவினால்கூட, அதுவும் அவருக்கு மிகப்பெரிய பலத்தையே தந்துள்ளது.. காரணம், இந்த 2 மாத பிரச்சாரங்களில் திமுக கூட்டணியை அவர் திணறவிட்டுள்ளார்.. பாஜகவை கதறவிட்டுள்ளார்.. ஒரு சக்திவாய்ந்த வேட்பாளராகவே தன்னை நிரூபித்துள்ளார்.. இது அடுத்து வரும் அரசியலுக்கு கமலுக்கு நல்ல அனுபவத்தையே தரும்..

கிராமப்புறம்
இதைதவிர, மேல்மட்ட அரசியலையே கமல் செய்து கொண்டிருப்பதாகவும், கிராமப்புற மக்களின் ஓட்டுக்களை பெறுவதற்கு கமல் தவறிவிட்டார் என்றும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டே இருப்பதால், இவைகளை நிவர்த்தி செய்ய கமல் முன்வர வேண்டும்.. கிராமப்புறங்களில் மட்டுமே இனி முழு கவனத்தையும் திருப்ப வேண்டி உள்ளது.

சீமான்
சீமானை போல, ஆதித் தமிழர் என்ற பெயரில் தலித் வேட்பாளர்களை களம் இறக்கியது போன்ற வித்தியாசமான, துணிச்சலான முயற்சிகளையும் இனி வரும் தேர்தல்களில் கமல் கையாள வேண்டும்.. ஒட்டுமொத்தத்தில், தமிழகத்தில் மேல்மட்ட அரசியலை கைவிட்டு, வெகுஜன மக்களின் நுட்பத்தையும் கமல் ஆழஊடுருவி அறிந்து செயல்பட்டால் நிச்சயம் பெரும்பாலான மக்கள் "நம்மவர்" ஆகலாம்..!












Click it and Unblock the Notifications