பறந்தது உத்தரவு.. குடிமகன்கள் தலையில் விழப்போகிறதா இடி?.. டாஸ்மாக் விவகாரத்தில் என்ன நடக்கிறது..!
தமிழகத்தில் மதுபானம் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: விரைவில் மதுபானங்கள் விலை உயர வாய்ப்புள்ளதாக உறுதியற்ற தகவல்கள் பரவி வருகின்றன.. இதையடுத்து மதுப்பிரியர்கள் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் இப்போதுதான் லாக்டவுன் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு வருகிறது.. இதையடுத்து கடந்த சில தினங்களாகவே நிறைய பார்களில் மதுபானங்கள் விலையை அதிகப்படுத்தி விற்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
அதற்கேற்றபடி, புதுச்சேரியில் திடீரென மதுபானங்கள் விலை அதிகமாகி உள்ளது.. கடைசியாக கடந்த 2018-ல் மதுபான விலை உயர்த்தப்பட்டது... ஆனால், இப்போது 3 வருடங்களுக்கு பிறகு மதுபான விலையை உயர்த்தி இருப்பது மதுபிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஊரடங்கு
இந்நிலையில், ஊரடங்கு தளர்வு காரணமாக, நாமக்கல் உள்ளிட்ட, 11 மாவட்டங்களில் கடந்த வாரம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன... ஆனால், அதிகாரிகளுக்கு அப்போதுதான் ஒரு ஷாக் காத்து கிடந்தது.. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவிற்கு மது விற்பனையே இல்லை..

குடோன்
இதனால், ஊரடங்கிற்கு முன் குடோன்களில் விற்காமல் இருந்த, 90 நாட்களுக்கும் மேலான மதுபானங்களை மட்டுமே, சில்லரை விற்பனைக்கு அனுப்பி வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, கடந்த, 50 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்ததால் பிரீமியம் எனப்படும் பழைய மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனராம்..

விற்பனை
கடந்த, 10 நாட்களாகவே 100 முதல் 150 ரூபாய் வரை உள்ள மதுபானங்கள் விற்பனை முடிந்து விட்டது.... ஆனால், 200 ரூபாய்க்கு மேல் உள்ள புதிய ரக மதுபானங்கள் விற்பனையாகாமல் உள்ளன... அந்த மதுபானங்களை குடிமகன்களுக்கு கட்டாயமாக விற்பனை செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில்தான் விரைவில் மதுபானங்கள் விலையை அரசு உயர்த்த உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன..

உத்தரவு
அதாவது பழைய விலை மதுபானங்களை விற்பனை செய்து முடிக்க, அனைத்து கடை சூப்பர்வைஸர்களுக்கும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது... இந்த தகவல்கள் காரணமாக, மதுப்பிரியர்கள் கதிகலங்கி போயுள்ளனர்.. எனினும் மதுபானங்கள் விலை உயர்த்தப்படுமா? இல்லையா? இது வதந்தியா? அல்லது அரசு அறிவிப்பு இனிமேல்தான் வருமா? தெரியவில்லை.. பார்ப்போம்.












Click it and Unblock the Notifications