Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழம்புறாரே ஜவாஹிருல்லா.. அப்ப திமுகவுக்கு வேலை செய்யணுமா? டக்னு இந்த முடிவு? திருச்சியில் புயலு-ங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1 சீட்டும் தரவில்லை - கூட்டணியிலும் இல்லை.. ஆனாலும், யாருக்கு ஆதரவு தருவது? எப்படி தருவது? என்ற குழப்பத்தில் உள்ளது மனித நேய மக்கள் கட்சி.

இந்த முறை எப்படியாவது, திமுக கூட்டணியில் இடம் பிடித்துவிடுவது என்பதில் மனித நேய மக்கள் கட்சி முனைப்பு காட்டியது.. இதையடுத்து, திமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இடையேயான 2வது சுற்றுப் பேச்சுவார்த்தையும் அறிவாலயத்தில் மூத்த தலைவர் டி.ஆர் பாலு தலைமையில் நடைபெற்றது.

Will MMK support DMK Alliance and Major decision takes by jawahirullah in Trichy Meeting today

இதில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, பொது செயலாளர் ப. அப்துல் சமது, பேராசிரியர் ஹாஜாகனி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நம்பிக்கை: இந்த சந்திப்புக்கு பிறகு ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் சொன்னபோது,போட்டியிட ஒரு தொகுதியை கேட்டிருக்கிறோம். 40 தொகுதிகளில் எந்த தொகுதியை கொடுத்தாலும் போட்டியிடுவோம்... கடந்த சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகள் கொடுக்கப்பட்டு, இரண்டிலுமே வெற்றி பெற்றோம். எங்களுடைய கோரிக்கையை திமுக தொகுதி பங்கீடு குழு பரிசீலிப்பதாக சொல்லி உள்ளது.. இந்தியா முழுமைக்கும் எடுத்துக்காட்டான கூட்டணியை அமைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்" என்றார்.

ஆனால், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துவிட்டன.. ஆனால், மனிதநேய மக்கள் கட்சிக்கு இடம் எதுவும் ஒதுக்கப்படவில்லை.. 1 சீட் கூட தராமல், கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதனால், வருத்தத்தில் அக்கட்சி உள்ளதாக தெரிகிறது...

திமுக கூட்டணி: கூட்டணியில் தொடர்வது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரும் சோஷியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் என்றாலும், திமுக சீட் தருமா என்பது தெரியவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான், மனிதநேய மக்கள் கட்சியின் அவசர உயர்மட்ட நிர்வாகக்குழு கூட்டத்தை, ஜவாருல்லா 2 நாட்களுக்கு முன்பு கூட்டியிருந்தார்..

இந்த கூட்டத்தில் வெறும் புலம்பலும், அதிருப்தியும், வருத்தமும் வெடித்ததாக தெரிகிறது. "ரொம்ப எதிர்பார்த்தோம்.. திமுக ஏமாற்றி விட்டது. கடந்த எம்பி தேர்தலிலும் சீட் இல்லை, இந்த முறையும் சீட் இல்லை என்றால், எதுக்காக திமுகவுக்காக நாம தேர்தல் வேலை செய்யணும்? வேண்டுமானால், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தோழமை அடிப்படையில் தேர்தல் பணியாற்றலாம் அல்லது கூட்டணியை விட்டு வெளியேறலாம்" என்றெல்லாம் நொந்து போய் பலரும் பகிர்ந்து கொண்டார்களாம்.

ஜவாஹிருல்லா: எனினும், எந்தவித முடிவுக்கும் உடனடியாக வர முடியாத சூழலில், மீண்டும் இன்றைய தினம் செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற உள்ளது.. ஜவாஹிருல்லா தலைமையில் இன்று நடைபெறும் இந்த கூட்டத்துக்கு மாநில, மாவட்ட நிர்வாகிகள் 500 பேர் பங்கேற்க உள்ளனர்.. இந்த கூட்டத்தில் இது தொடர்பாக விரிவாக அலசப்பட்டு, ஒரு இறுதி எடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.

அதாவது, தங்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்பதைவிட, கமலுக்கு சீட் தந்ததைதான் ஜீரணிக்க முடியாமல் உள்ளதாம்.. காரணம், மனித நேய மக்கள் கட்சியை பொறுத்தவரை, திமுக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகிக்கும் கட்சியாகும்.. ஒவ்வொரு தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றிக்காக உழைக்கக்கூடிய கட்சியும்கூட.

கமலுக்கு சீட்: ஆனால் கமல் அப்படியில்லை.. தொடர்ந்து திமுகவை விமர்சித்துவந்தவர்.. திடுதிப்பென்று கூட்டணியில் சேர்ந்ததுடன், சூட்டோடு சூட்டாக மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தரப்பட்டுள்ளது. இதுதான், கடும் அதிர்ச்சியை மமக தரப்புக்கு ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.

இப்போ வந்த கமலுக்கு கூட சீட் தந்து ஒப்பந்தம் போட்டிருக்காங்க. இத்தனை வருஷமாக, திமுக வெற்றிக்காக உழைத்தும் பலனில்லையே என்று ஆதங்க குரல் வெடித்துள்ளதால், கூட்டணியிலிருந்து மமக வெளியேறுமா? அல்லது விசிக, கம்யூனிஸ்ட்களுக்கு மட்டும் தேர்தல் பணிகளை செய்யுமா? அல்லது திமுகவின் வெற்றிக்கும் சேர்த்தே பாடுபடுமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+