Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரைட்.. விஆர் வாங்கியாச்சு.. "அது"வா இல்லை "இது"வா?.. அடுத்து என்ன செய்ய போகிறார் சகாயம்..!

சகாயம் தனி கட்சி தொடங்க வாய்ப்புள்ளதா என தெரியவில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதற்காக இப்படி அவசர அவசரமாக சகாயம் ஓய்வு பெற வேண்டும்? தேர்தல் நெருங்கும் சமயத்தில் என்ன செய்ய போவதாக உத்தேசம்? ஒருவேளை அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற கேள்வி எழுகிறது.

Recommended Video

    சென்னை: இளைஞர்களின் நம்பிக்கை... பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சகாயம் ஐஏஎஸ்..!

    தேர்தல் காலம் வந்துவிட்டாலே, முதல்வர் வேட்பாளருக்கு தானாக அடிபடும் பெயர் சகாயம்.. அப்படித்தான் இப்போதும் சகாயம் பெயர் அடிபடுகிறது.. இதற்கு காரணம் சகாயம் திடீரென விஆர்எஸ் கேட்டு வாங்கிவிட்டார்.

    அரசுப் பணியிலிருந்து தமிழக அரசும் அவரை விடுவித்துள்ளது.. இப்போது சகாயம் என்ன செய்ய போகிறார்? எதற்காக இப்படி அவசர அவசரமாக வேலையை விட்டு விட்டு வந்துள்ளார்? தேர்தல் நெருங்கும் சமயத்தில் சகாயத்தின் இந்த நடவடிக்கை ஏகப்பட்ட சந்தேகங்களை கிளப்பி உள்ளது.

    மதிப்பு

    மதிப்பு


    இந்த அளவுக்கு சகாயத்தை மக்கள் எதிர்பார்க்க காரணம், நேர்மைக்கு பெயர் போன அரசு அதிகாரி.. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.. தமிழகம் முழுவதும் சமூக சேவையாற்றி வருகிறார்... சொத்துக் கணக்கை வெளியிட்ட முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற சிறப்புக்குரியவர்.

     நேர்மை

    நேர்மை

    சகாயம் மீது எப்பவுமே இளைஞர்களுக்கு தனி மரியாதை உண்டு... நேர்மையானவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று விடாமல் அறைகூவல் விடுப்பவர்.. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலிலேயே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை... இப்போது 3 வருஷம் இன்னும் வேலை இருக்கும் நிலையில் இப்போதே ஓய்வு பெற்றுவிட்டார்.

    தேர்தல்

    தேர்தல்

    இந்த சூழலில் சகாயம் எப்படியும் வரும் தேர்தலில் போட்டியிடுவார் என்று அடித்து கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. ஆனால் அதேசமயம் புதிதாக ஒரு அரசியல் கட்சியை தொடங்கி, அதனை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கான சூழல் இப்போது இல்லை... எனவே அநேகமாக அவர் சுயேட்சையாக போட்டியிடக்கூடும் என்று சொல்கிறார்கள்..

     தனிக்கட்சி

    தனிக்கட்சி

    அல்லது தனது ஆதரவாளர்களை இந்த தேர்தலில் போட்டியிட வைக்கலாம். அல்லது கமலுடன்கூட கூட்டணி வைக்கலாம்.. இவர்கள் இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.. கமல் என்னென்ன எதிர்பார்க்கிறாரோ, ஊழலற்ற அத்தனை தகுதியும் திறமையும் உடையவர் சகாயம் மட்டுமே.. அந்த வகையில் இவர்கள் இணைந்தால் கூடுதல் மாஸ் கிடைக்கும் என்றே நம்பப்படுகிறது. ஆனால், சகாயம் என்ன முடிவெடுப்பார் என்று உறுதியாக தெரியவில்லை.

     மாற்றம்

    மாற்றம்

    சகாயம் வெளிப்படையானவர். எதையும் துணிச்சலாக செய்யக் கூடியவர், மாற்றத்தை உண்மையிலேயே கொண்டு வர வேண்டும் என்று விரும்புபவர்.. எல்லாவற்றிலும் அப்பழுக்கற்றவர், ரொம்பவே வெளிப்படையானவர்.. அந்த வகையில் நிச்சயம் மாற்றத்தை தரக்கூடியவர் என்ற நம்பிக்கை வலுவாகி கொண்டே போகிறது.. அதேபோல ஊறி போன ஒரு அரசியலுக்கு மாற்றாக சகாயம் இருந்துவிட மாட்டாரா என்ற ஏக்க தொனியும் ஓங்கி ஒலிக்க தொடங்கி உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+