பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் கேன்சல் செய்தால் உடனே பணம் திரும்ப கிடைக்கும்! ரயில்வே மாஸ் பிளான்
சென்னை: ஐஆர்சிடிசி மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் போது சில நேரங்களில் பணம் செலுத்திய பிறகு டிக்கெட் புக்கிங் ஆகாமல் போகும். அதேபோல டிக்கெட் கேன்சல் செய்யும் போதும் பணம் திரும்ப கிடைக்க 3 நாள்கள் வரை ஆகும். இதனால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை போக்க ரயில்வே புதிய பிளானை கையில் எடுத்துள்ளது.
இந்தியாவில் பயணிகளின் போக்குவரத்து சேவையை தீர்த்து வைப்பதில் ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது. உலகிலேயே நான்காவது பெரிய ரயில்வே நெட்வொர்க் கொண்ட நாடான இந்தியாவில் தினம் தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் மூலம் கோடிக்கணக்கான மக்கள் தினமும் பயணித்து வருகிறார்கள்.

அப்படி, ஆன்லைனின் ரயில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்யும் போது சில நேரங்களில், வாடிக்கையாளர்களின் அக்கவுண்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விடும். ஆனால், டிக்கெட் புக்கிங் ஆவது இல்லை. அதேபோல், முன்பதிவு செய்யும் வெயிட்டிங்கில் டிக்கெட் இருந்து கடைசி வரை டிக்கெட் கன்ஃபார்ம் ஆகாமல் இருந்தாலும் டிக்கெட்டுக்கான தொகை தானாகவே ரீஃபண்ட் ஆகிவிடும்.
1 மணி நேரத்தில் திரும்ப கிடைக்கும்: சில நேரங்களில் பயண திட்டம் ரத்து ஆனால், பயணிகளும் தங்கள் டிக்கெட்டுகளை கேன்சல் செய்வதை பார்க்க முடிகிறது. இதுபோன்ற நேரங்களில் டிக்கெட்டுகளுக்கான கட்டணம் மீண்டும் அக்கவுண்டில் வந்து சேர சில நாட்கள் ஆகும். அதிபட்சமாக 3 நாட்கள் வரை இதற்கான கால அவகாசம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
தொழில் நுட்ப வசதி எவ்வளவோ பெருகிவிட்ட இந்த காலத்திலும் டிக்கெட் ரிஃபண்ட் கட்டணம் திரும்பி வருவதற்கு இவ்வளவு தாமதம் ஆகிறது என பயணிகள் பலரும் ஆதங்கப்படுவதை காண முடிகிறது. இது தொடர்பாக சோஷியல் மீடியாக்களிலும் அவ்வப்போது ரயில்வே நிர்வாகத்தை நெட்டிசன்கள் சாடுவதை பார்க்க முடியும். இந்த நிலையில், பயணிகளின் சிரமத்தை போக்கும் விதமாக டிக்கெட் கேன்சல் ஆனால், அடுத்த 1 மணி நேரத்தில் டெபிட் செய்யப்பட்ட பணம் திரும்ப கிடைக்கும் விதமாக வசதியை மேம்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது.
விரைவில் அமலுக்கு வருகிறது: இதற்கான பணிகளை ஐஆர்சிடிசி மற்றும் ரயில்வேயின் டெக்னிக்கல் பிரிவான CRIS இணைந்து மேற்கொள்கிறது. இந்த பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டதால் விரைவில் இந்த வசதி அமலுக்கு வர உள்ளது. இந்த வசதி அமலுகு வந்தால் பயணிகள் பணம் பிடிக்கப்பட்டு டிக்கெட் புக்கிங் ஆகிவிட்டாலும் அடுத்த சில மணி நேரங்களில் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளமுடியும்.
ரயில் பயணம்: தொலை தூர பயணங்களுக்கு செல்வது என்றால் முதலில் ரயிலில் டிக்கெட் இருக்கிறதா? என்று செக் செய்துவிட்டுத்தான் பேருந்து, கார்களில் செல்வதை பற்றி பயணிக்ள் யோசிப்பார்கள். தற்போது ரயிலில் டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசி இணையதளம் மூலாமவே புக் செய்து கொள்ளலாம். 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை புக்கிங் செய்து கொள்ளும் வசதி உள்ளது.
இதனால், பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வது என்றால் முன்கூட்டியே டிக்கெட் புக்கிங் செய்து பயணம் செய்து வருகிறார்கள். அதேபோல், பயணத்திற்கு ஒருநாள் முன்பாக தட்கல் முறையிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications