தமிழ்நாட்டில் பரவும் இன்புளுயன்சா.. புதுச்சேரி போல பள்ளிகளுக்கு விடுமுறையா? என்ன நடக்கும்?
சென்னை: தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகளுக்கு இன்புளுயன்சா காய்ச்சல் பரவி வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்புளுயன்சா காய்ச்சல் அதிக அளவில் பரவ தொடங்கி உள்ளது. இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் குணம் கொண்டது.
பருவநிலைதான் இன்புளுயன்சா பரவ முக்கிய காரணம். இன்புளுயன்சா ஏற்பட்ட நபருடன் நெருக்கமாக இருந்தால் அவருக்கு இந்த காய்ச்சல் ஏற்படும். இன்புளுயன்சா உள்ளவர்கள் அருகில் இருந்தால் அவர்களுக்கும் இன்புளுயன்சா பரவ வாய்ப்புகள் உள்ளது.

சீசன்
இது சீசனுக்கு சீசன் ஏற்படும் காய்ச்சல் ஆகும். தொண்டை வலி, உடல் வலி, லேசான இருமல் , லேசான தலைவலி , விட்டு விட்டு காய்ச்சல் ஆகியவை இதன் காரணமாக ஏற்படும். இதுதான் பொதுவான இன்புளுயன்சா அறிகுறிகள். கொஞ்சம் வீக்காக இருக்கும் நபர்களுக்கு தீவிர அறிகுறிகள் வரலாம்.குழந்தைகள் அதிக அளவில் இந்த இன்புளுயன்சா காரணமாக பாதிக்கப்படுவார்கள். இந்த காய்ச்சல் வந்ததும் மருத்துவரை அணுகி, முறையாக சிகிச்சைகளை பெற வேண்டும்.

பள்ளிகள்
புதுச்சேரியில் இந்த காய்ச்சல் அதிகமாக பரவியது. கடந்த 12 நாட்களாக பள்ளி செல்லும் 50 சதவிகித குழந்தைகளுக்கு இந்த காய்ச்சல் ஏற்பட்டது. அவர்களுக்கு தொண்டை வலி, உடல் வலி, லேசான இருமல் , லேசான தலைவலி , விட்டு விட்டு காய்ச்சல் போன்றவை ஏற்பட்டன. பலர் இதனால் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பள்ளிகளுக்கு குழந்தைகள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. பல பள்ளிகளில் குழந்தைகள் வருகை 50 சதவிகிதத்திற்கும் கீழ் சென்றது.

விடுமுறை
இதனால் புதுச்சேரி, காரைக்காலில் குழந்தைகளுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. 25ம் தேதி வரை அங்கு பள்ளிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. காய்ச்சல் உள்ள குழந்தைகளை உடனே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டிலும் இந்த காய்ச்சல் பரவுகிறது.

விடுமுறை விடப்படுமா?
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்துள்ள பேட்டியில், இதுவரை மாநிலத்தில் 965 பேருக்கு இன்புளுயன்ஸா காய்ச்சல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையிலும் 10 பேர் உயிரிழந்து உள்ளனர். குழந்தைகளுக்குக் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பெற்றோர்கள் பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது. தமிழ்நாட்டில் காய்ச்சல் தீவிரம் அடையாததால், அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை, என்று அறிவித்துள்ளார்.
-
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications