தமிழ்நாட்டில் பரவும் இன்புளுயன்சா.. புதுச்சேரி போல பள்ளிகளுக்கு விடுமுறையா? என்ன நடக்கும்?
சென்னை: தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகளுக்கு இன்புளுயன்சா காய்ச்சல் பரவி வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்புளுயன்சா காய்ச்சல் அதிக அளவில் பரவ தொடங்கி உள்ளது. இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் குணம் கொண்டது.
பருவநிலைதான் இன்புளுயன்சா பரவ முக்கிய காரணம். இன்புளுயன்சா ஏற்பட்ட நபருடன் நெருக்கமாக இருந்தால் அவருக்கு இந்த காய்ச்சல் ஏற்படும். இன்புளுயன்சா உள்ளவர்கள் அருகில் இருந்தால் அவர்களுக்கும் இன்புளுயன்சா பரவ வாய்ப்புகள் உள்ளது.

சீசன்
இது சீசனுக்கு சீசன் ஏற்படும் காய்ச்சல் ஆகும். தொண்டை வலி, உடல் வலி, லேசான இருமல் , லேசான தலைவலி , விட்டு விட்டு காய்ச்சல் ஆகியவை இதன் காரணமாக ஏற்படும். இதுதான் பொதுவான இன்புளுயன்சா அறிகுறிகள். கொஞ்சம் வீக்காக இருக்கும் நபர்களுக்கு தீவிர அறிகுறிகள் வரலாம்.குழந்தைகள் அதிக அளவில் இந்த இன்புளுயன்சா காரணமாக பாதிக்கப்படுவார்கள். இந்த காய்ச்சல் வந்ததும் மருத்துவரை அணுகி, முறையாக சிகிச்சைகளை பெற வேண்டும்.

பள்ளிகள்
புதுச்சேரியில் இந்த காய்ச்சல் அதிகமாக பரவியது. கடந்த 12 நாட்களாக பள்ளி செல்லும் 50 சதவிகித குழந்தைகளுக்கு இந்த காய்ச்சல் ஏற்பட்டது. அவர்களுக்கு தொண்டை வலி, உடல் வலி, லேசான இருமல் , லேசான தலைவலி , விட்டு விட்டு காய்ச்சல் போன்றவை ஏற்பட்டன. பலர் இதனால் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பள்ளிகளுக்கு குழந்தைகள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. பல பள்ளிகளில் குழந்தைகள் வருகை 50 சதவிகிதத்திற்கும் கீழ் சென்றது.

விடுமுறை
இதனால் புதுச்சேரி, காரைக்காலில் குழந்தைகளுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. 25ம் தேதி வரை அங்கு பள்ளிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. காய்ச்சல் உள்ள குழந்தைகளை உடனே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டிலும் இந்த காய்ச்சல் பரவுகிறது.

விடுமுறை விடப்படுமா?
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்துள்ள பேட்டியில், இதுவரை மாநிலத்தில் 965 பேருக்கு இன்புளுயன்ஸா காய்ச்சல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையிலும் 10 பேர் உயிரிழந்து உள்ளனர். குழந்தைகளுக்குக் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பெற்றோர்கள் பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது. தமிழ்நாட்டில் காய்ச்சல் தீவிரம் அடையாததால், அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை, என்று அறிவித்துள்ளார்.
-
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications