Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்ட்ரெயிட்டா திமுகவை அட்டாக் செய்த ராமதாஸ்.. "இன்னும் என்னென்ன சீரழிவை பார்க்க ஆசை?".. ஒரே போடு

டாக்டர் ராமதாஸ் திமுக அரசுக்கு காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கல்பட்டு பஸ்ஸில், பள்ளி மாணவிகள் பீர் குடிக்கும் வீடியோ வெளியாகிய நிலையில், தமிழகமே அதிர்ச்சியில் உள்ளது.. "இன்னும் என்னென்ன சீரழிவுகளையெல்லாம் பார்க்க வேண்டும் என அரசு ஆசைப்படுகிறது" என்று டாக்டர் ராமதாஸ் திமுகவை பார்த்து காட்டமாக கேட்டுள்ளார்.

2 நாட்களாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. திருக்கழுக்குன்றம் அருகே உள்ள பொன்விளைந்த களத்தூரில் அரசு மேல் நிலைப்பள்ளியின் பிளஸ் 2 மாணவிகள் பீர் குடிக்கும் வீடியோ அது..

அரசு பஸ்சில் பயணம் செய்யும்போது மாணவிகள் பீர் பாட்டிலை அசால்டாக தூக்கிப்பிடித்து குடிப்பதும், போதையில் கூச்சலிட்டு, ரகளை செய்வதும் என அந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

 விசாரணைகள்

விசாரணைகள்

இது தொடர்பாக விசாரணைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், கண்டனங்கள் ஏராளமாக குவிந்து வருகிறது. அந்த வகையில், டாக்டர் ராமதாஸ் முதல் நபராக இந்த விஷயத்தை கிளப்பி உள்ளார்.. இதற்கு காரணம், பல வருடங்களாகவே மதுக்கடைகளை மூட வலியுறுத்தி வந்து கொண்டிருக்கும், முக்கியமான தலைவர் ராமதாஸ்தான்.. இந்த நேரத்தில் ஒரு முக்கியமான சம்பவத்தை இங்கு நினைவுபடுத்த வேண்டி உள்ளது.

 போனில் ஸ்டாலின்

போனில் ஸ்டாலின்

முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற சமயம், கொரோனா பாதிப்பு தீவிரத்தில் இருந்ததால், மதுக்கடைகள் மூடும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.. அந்த நேரத்தில்தான் ராமதாஸ் ஒரு அறிக்கை விடுத்திருந்தார்.. அதில், "மதுக்கடைகள் இல்லாமலும் அரசுக்கு வருமானம் ஈட்ட முடியும்" என்பதை விவரித்து பல வழிமுறைகளையும் அதில் எடுத்துரைத்திருந்தார்.

 ராமதாஸ் - ஸ்டாலின்

ராமதாஸ் - ஸ்டாலின்


இதையடுத்து ராமதாஸுக்கு போனை போட்டு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.. "அய்யா.. அறிக்கையை படிச்சேன்.. நல்ல விஷயங்களை சொல்லியிருக்கீங்க. மதுக்கடைகளை ஒழிக்கணும்குறதுதான் என் கொள்கையும்.." என்று ஸ்டாலின் சொல்ல, அதற்கு ராமதாஸோ, "கடந்த வருடம் லாக்டவுன் சமயத்திலேயே டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி கேட்டிருந்தேன்... இப்ப நீங்க மூடியிருக்கிறது நல்ல விஷயம்... மூடினது மூடின மாதிரியே இருக்கட்டுமே" என்று ஒரு கோரிக்கையையும் ராமதாஸ் வைத்திருந்தார்.

 காட்டமான அறிக்கை

காட்டமான அறிக்கை

இந்நிலையில்தான், ஒரு காட்டமான அறிக்கையை ராமதாஸ் விடுத்துள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பொன்விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள், பள்ளிச்சீருடையில் அரசுப் பேருந்தில் நின்று கொண்டு மது அருந்தி, ரகளை செய்யும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. படிக்க வேண்டிய மாணவ, மாணவிகள் குடித்து விட்டு ரகளை செய்வது மிகுந்த வேதனை அளிக்கிறது.

 பள்ளி மாணவிகள்

பள்ளி மாணவிகள்

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொலியில் மாணவிகள் நின்று கொண்டு ஒரு பாட்டில் மதுவை பகிர்ந்து குடிக்கின்றனர். அவர்களுடன் மாணவர்களும் இருக்கின்றனர். அந்த காணொலியை பார்க்கும் பெற்றோராக இருந்தாலும், ஆசிரியர்களாக இருந்தாலும் அவர்களின் நெஞ்சம் பதைபதைக்கும். பள்ளிகளுக்கு செல்லும் தங்களின் குழந்தைகளும் இத்தகைய சீரழிவுகளுக்கு ஆளாகி விடுவார்களோ? என்ற அச்சமும், கவலையும் அவர்களை வாட்டும்.

மாணவர்கள்

மாணவர்கள்

இந்தியாவின் எதிர்கால தூண்களாக உருவாக வேண்டியவர்கள், உருப்படாமல் போய்விடுவார்களோ? என்ற கவலை ஆசிரியர்களை அலைக்கழிக்கும்.மாணவ-மாணவியர் மது அருந்தி அநாகரிகமாக நடந்து கொள்வது இது முதல் முறையல்ல. இதற்கு மாணவர்களை மட்டுமே குறை கூறிவிட முடியாது. இத்தகைய தவறுகளை செய்வதற்கான சூழலை ஏற்படுத்திய திரைப்பட காட்சிகளும், தெரு தோறும் மதுக்கடைகளை திறந்து வைத்த அரசும் தான் முதன்மைக் காரணமாகும்.

 கல்வி நிறுவனங்கள்

கல்வி நிறுவனங்கள்

பொது வெளியில் மது அருந்துவதும், காலியான மதுப்புட்டிகளை சாலைகளில் வீசி உடைப்பதையும் தான் சாகசங்கள் என்று திரைப்படங்கள் கற்பிக்கின்றன. வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் நூலகங்களும், ஆலயங்களும் இருக்கின்றனவோ, இல்லையோ.... மதுக்கடைகள் இருக்கின்றன. மதுக்கடைகளை கடந்து தான் கிட்டத்தட்ட அனைத்து மாணவ, மாணவியரும் கல்வி நிறுவனங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது.

மதுக்கடைகள்

மதுக்கடைகள்

தமிழ்நாட்டில் மதுக்கடைகள் நண்பகல் 12 மணிக்குத்தான் திறக்கப்படுகின்றன. 21 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் தான் மது விற்பனை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதிமொழி அளித்திருக்கிறது. ஆனால், காலையில் பள்ளிக் கூடத்திற்கு செல்லும் போதே, 17 வயது கூட நிரம்பாத மாணவச் செல்வங்களின் கைகளில் மதுப்புட்டிகள் எங்கிருந்து கிடைத்தன? இந்த வினாவுக்கு விடையளிக்காமல் அரசும், டாஸ்மாக் நிறுவனமும் எளிதாக கடந்து சென்று விட முடியாது.

 மதுபானம்

மதுபானம்

முதலில் 4 வயது குழந்தைக்கும், பின்னர் 10 மாதக்குழந்தைக்கும் அவர்களின் உறவினர்களே மது கொடுத்து குடிக்கச் செய்த கொடூரங்களை தமிழகம் பார்த்தது, கோவை தனியார் பள்ளி 12-ம் வகுப்பு மாணவி போதையில் சாலையில் செல்பவர்களையும், பொதுமக்களையும், காவல்துறையினரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி மயங்கி விழுந்ததையும் தமிழகம் பார்த்தது.

 திமுக அரசு

திமுக அரசு

திருச்செங்கோட்டில் மாணவர்கள் வகுப்பறைகளில் மது குடித்த அவலத்தையும் தமிழகம் பார்த்தது, கரூரிலும், மணப்பாறையிலும் மாணவர்கள் கடுமையான போதையில் சீருடையுடன் சாலையில் மயங்கி விழுந்து சுயநினைவின்றி கிடந்த கொடுமையை தமிழகம் பார்த்தது. அனைத்துக்கும் உச்சமாக பேருந்தில் மாணவிகள் மது குடிக்கும் சீரழிவை தமிழகம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் என்னென்ன சீரழிவுகளையெல்லாம் பார்க்க வேண்டும் என அரசு ஆசைப்படுகிறது எனத் தெரியவில்லை.

 தமிழக அரசு

தமிழக அரசு

மதுவை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தான் அரசை நடத்த வேண்டும் என்ற நிலை இருக்கும் வரை தமிழகத்தில் இத்தகைய சீரழிவுகளை தவிர்க்க முடியாது. மதுவில் மூழ்கும் தமிழகத்தையும், எதிர்காலத் தலைமுறையினரையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இருந்தால் உடனடியாக தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+